தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 14 டிசம்பர், 2009

நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள்

நாடகமாடிய நேரு –

காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார்.

காந்தியின் பேச்சையே கேட்கவில்லை –

இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற்கு சில மணிதுளிகள் முன்பு கூட படேல் நேரு செய்யும் தவறுகளை காந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம். எத்தனை முறை சொன்னாலும் நேரு திருந்துவதாக தெரியவில்லை வருத்தப்பட்டாராம் காந்தி.

வெளிநாட்டு மங்கையர் மோகம் –

சோனியா என்ற வெளிநாட்டு பெண்ணை நேருவின் பேரன் திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளையனே வெளியேரு என இந்திய மக்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில் கூட ஆங்கிலப் பெண்களுடன் கொட்டம் அடித்து இருக்கிறார் நேரு. பெண்களிடம் பேசி சிரித்தை கூட பொருத்துக் கொள்ளலாம், அந்த பெண்ணின் வாயில் சிகரெட் எல்லாம் வைத்திருக்கின்றார், ஒரு தேசத்தின் பிரதமர் செய்வதை நீங்களே பாருங்கள். இந்தப் புகைப்படங்களை வெளிநாட்டினர் பார்த்தால் நமக்கு எவ்வளவு கேவலம். உண்மைய சுகந்திரத்திற்கு உழைத்திருந்தால் இப்படியெல்லாம் கீழ் தரமாக நடக்க முடியுமா.

இந்திரா நேரு –

பதவி மோகம் காரணமாக காங்கிரஸ் மூர்த்த தலைவர்களுடனெல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பிரதமரான இந்திரா நேருவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். சீக்கிய மக்களின் புணித இடத்தை ரானுவத்தால் கெடுத்த்தற்காக சீக்கியர்களால் கொல்லப்பட்டார். ஞாயமாக தமிழர்கள் தான் கொன்றிருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்களை பாதிக்கும் என தெரிந்தே இந்திரா நேரு இலங்கைக்கு கச்ச தீவை தாரை வார்த்தார். ஏதோ இவர்களின் நிலம் போல தங்கள் இஷ்டத்திற்கு மற்றவர்களுக்கு தருகின்றனர். அண்டை நாடான மேற்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் சண்டை போட்டு இந்தியாவை சரணடைய இந்திய மக்களின் வரி பணத்தை வாரி இரைத்து பாக்கிஸ்தானை பங்களாதேசாக மாற்றினார். இப்போது இந்தியாவிற்கு இரண்டு எதிரிகள்.

ராஜிவ் நேரு –

அம்மாவைப் போலவே தமிழர்களின் நல விரும்பி ராஜிவ் நேரு(மக்களிடம் இருக்கும் காந்தியின் செல்வாக்கை ஓட்டாக மாற்ற அவர்கள் வேண்டுமானால் பரம்பரை பெயரை மாற்றி போட்டுக்கொள்ளட்டும் நாம் எதற்கு அவ்வாறு செய்ய வேண்டும்).. தாரை வார்த்த கச்ச தீவால் இந்திய தமிழர்கள் பாதிக்கப்பட. இலங்கை தமிழர்களை காக்க புலிகள் என்ற இயக்கம் உருவாகி இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் தோல்வி கண்டு, இறுதியாக யுத்தம் என முடிவுக்கு வந்த வேளையில். தமிழர்களை கொல்ல இலங்கை அரசிற்கு துணையாக இந்திய ராணுவத்தை அனுப்பி தன் பங்கிற்கு தமிழர்களை அழித்த இந்திராவின் மகன் ராஜிவ் நேரு. கொத்து கொத்தாய் செத்து மடிந்த இனத்தின் கோரம் தாங்காமல் சிலர் எடுத்த முடிவால் ராஜிவ் மரணம் நேர்ந்தது தமிழ் நாட்டில் தான்.

சோனியா நேரு -

வெள்ளைக்கார பெண்களுடன் கொட்டம் அடித்த நேருவை பார்த்துவிட்டோம். அந்த தேசியவாதியின் கொள்கையை கடைபிடிக்க லண்டனிலிருந்து வந்த குலதெய்வம் சோனியா. ராஜிவ் இறந்துவிட அடுத்த பிரதமர் வாய்ப்பு சோனியாவிற்கு. ஏதோ கொஞ்சம் இந்தியாவின் மீது ஈடுபாடுள்ள மனிதர்கள் சத்தம் போட இப்போது சோனியா பதவியில்லாத பிரதமர்.

தன் கணவனை கொன்ற தமிழர்களை பழிவாங்கும் முயற்சியாய் அடுத்தடுத்து நிகழ்ந்தன செயல்கள். தமிழக மீனவர்கள் இன்றும் தாக்கப்படுவதையும், அவர்களை நிர்வாணப்படுத்தி கேவலம் செய்யும் செயலையும், வாழ்க்கைக்கு ஆதாரமான வலைகளை அறுத்தெரியும் சம்பவங்களையும் சோனியா தலைமையிலான இந்திய அரசு கண்டிக்கவில்லை. தூண்டி விட்டிருப்பதே அவர்கள் தான், பின் எப்படி தடுப்பார்கள்.

ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றதற்கும், அவர்களை கொடுமை படுத்தியதற்கும் இவர்கள் தான் காரணம் என்றால் நம்ப முடிகின்றதா. பிரியங்கா நேரு செய்ததை படியுங்கள் உண்மை விளங்கும்.

பிரியங்கா நேரு –

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க ராஜபக்சே தொடங்கும் முன்பே ராஜிவை நேரு கொன்றவர்களில் மீதம் இருக்கும் நளினியை பார்த்து சென்றாராம் பிரியங்கா நேரு. அந்த சந்திப்பில் என் தந்தை மிகவும் நல்லவர் ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என அடிக்கடி கேட்டாராம்.(ஆமாம் ரொம்ப நல்லவரு) இந்த சந்திப்பு நடந்த பின் தான் தமிழர்களுக்கு எதிராக பயங்கரப் போரில் இலங்கை ஈடுபட்டது. அம்மாவின் பொண்ணு என்ன போய் சொல்லுச்சோ தெரியலை.

தனித்தனி நிகழ்வாக நடந்திருக்கும் இவைகளை இணைத்துப்பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் மூல காரணம் விளங்கி இருக்கும். இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என கையை கட்டிக்கொண்டிருந்த இலங்கை அரசு, இந்தியாவின் தரப்பில் பச்சை கொடி காட்டிய பின்தான் தன் வேலையை காட்டி இருக்கிறது. பிரபாகரன் தலைமையிலான புலிகளை அழிப்பதாக சொல்லி ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அழித்து சின்னாபின்னமாக்கி விட்டது.

ராகுல் நேரு –



என் சகோதரன் இந்தியாவின் பிரதமராவான். அவனுக்கு எல்லாம் தகுதியும் இருக்கிறது என சொன்னார் பிரியங்கா. நதி நீர் இணைப்பு திட்டத்தை எதிர்த்து, அதை உறுதி செய்திருக்கின்றார் ராகுல். இந்த முறையும் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்களும், தமிழகமும் தான். தமிழக்த்தில் காவெரி ஓடினாலும் கேரளா கொடுத்தால் தான் தண்ணிர். எல்லையில்லாத நீர் வளத்திற்கு அண்டை மாநிலங்களிடையே கையேந்தி நின்ற தமிழர்களுக்கு நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் கங்கையும், காவெரியும் இணைந்தால் நலம் என்ற செய்தி எப்படியோ ராகுலுக்கு தெரிந்துவிட்டது. அவர் பரம்பரை வேலையை காட்டிவிட்டார்.


எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து பார்க்கும் போது நேருவும் அவரது குடும்பமும் மொத்த இந்தியாவை எப்படி ஏமாற்றி இருக்கின்றன என தெரியும். தமிழக முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் கண்டிப்பாக ஈழத்தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். மத்திய அரசில் திமுகவின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தே. ஆனால் கொள்கை ரீதியாக ஒத்துப்போனதால் சோனியாவிடம் கலைஞர் கேட்டது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவிகள் மட்டும் தான்.

காங்கிரஸ், திமுக அணிக்கு ஓட்டுப்போட்டு விசுவாசம் காண்பித்தவர்கள் தயவு செய்து இந்த இடுகையின் மேல் இருக்கும் தமிழ்மண ஓட்டுப்பெட்டில் ஓட்டு போட்டு பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள். உண்மையான தமிழர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என எதிர் பார்க்கின்றேன்.

நேரு படங்களுக்கு நன்றி – பட்டாப்பட்டி வலைப்பூ.

சனி, 12 டிசம்பர், 2009

தமிழில் சிறந்த வலைப்பூக்கள்

மருத்துவம் -
ஹாய் நலமா

ஜோதிடம் -
வாத்தியார்

நகைச்சுவை -
லக லக லக

ரஜினி -
ரஜினிபேன்ஸ்
என்வழி

கணினி -
பி.கே.பி
இரஜகை ராபர்ட்


அரசியல் -
கழுதை
ப்...ப்...பீ...பீ...பாம்...பாம்

காமம் -
காமதீ
தமிழ் காமக் களஞ்சியம்!!
தமிழ் நடிகைகளின் காம கூத்துகள்

களஞ்சியங்கள் -
விக்கி சோர்ஸ்
விக்கி பிடியா
விக்கி புத்தகம்
விக்கி செய்திகள்
விக்சனரி

காமிக்ஸ் வலைப்பூகள் –
தலை சிறந்த காமிக்ஸ்கள்
ராணிகாமிக்ஸ்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
மைய நீரோட்டம்
அழகிய படங்களுடன் கூடியது

கவிதை -
ஆடலரசன்
கவிதை1000
கவிதைகள்
யுக பாரதி
உலகின் புதிய கடவுள்

ஆன்மீகம் -
சிவசிவ
சித்தன்
இந்துசமயம்
முதுசொம்
தமிழ் இந்து
ஆன்மீக பயணம்
நமசிவாய வாழ்க
இறைவனை காண்போம்
நான்காயிரம் அமுதத் திரட்டு

தமிழ் -
தமிழ்
தமிழ்புத்தகம்
தமிழ்கதை
தமிழ்க்கல்வி
தமிழ் இலக்கணம்
சில கவிதைகள்
என் வாசகம்
தமிழ்ச் செருக்கன்!
வெண்பா வனம்
வெண்பா எழுதலாம் வாங்க!

சகலமும் -
வெட்டிபயல்
வால்பையன்
யுவகிருஷ்ணா
எப்பூடி.....
இம்சை
ச்சும்மா…
கூடுதுறை
ரசனைக்காரி...
ப்ருந்தாவனம்
வேர்களைத்தேடி
பல்சுவை
சிறகுகள்
மேலிருப்பான்
என் வானம்
போட்டுத் தாக்கு!!!!!
சித்திரம் பேசுதடி
புதுக்கோட்டை விலெகா
குமரன் குடில்
ப்ரியானந்த சுவாமிகள்
தமிழன் உலகம்
என் உளறல்கள்
எண்ணச் சிதறல்கள்
என் கிறுக்கல்கள்....
மோகனச்சாரல்
அன்புடன் அருணா
எனது ரசனை....
எண்ணங்கள் இனியவை
என் கனவில் தென்பட்டது
அகம் - புறம் – அந்தப்புரம
தெரிந்து கொள்ளலாம் வாங்க
தமிழக மக்கள் உரிமைக் கழகம்
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

வெள்ளி, 11 டிசம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 1
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 2
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 3

அகத்தியர்

குறிப்பு -

அகத்தியரை ஒட்டுமொத்த சித்தர்களின் குரு என கூறுகிறார்கள். தொல்காப்பியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து இவர் எனவும், தேரையார் போன்ற சிறந்த சித்தர்களுக்கு மருத்துவம் கற்று கொடுத்தது இவர் எனவும் கூறுகின்றார்கள்.

இவருக்கும் முன்னால் கூட வாழ்ந்த சித்தர்கள் பலர் இருந்தாலும், இவருக்கு சற்று கூடுதல் மரியாதை. இவர் குட்டையான உருவம் கொண்டவராதலால் குறுமுனி எனவும் ஒரு சொல் வழக்கு இருக்கிறது.சித்தர், முனிவர், குரு என்றெல்லாம் சொல்வதை விடவும் தமிழ்த் தொண்டர் என கூறுவது சிறந்தது.

சித்த மருத்துவம் மட்டுமல்லாது, நாடி சோதிடம், பட்சி சாத்திரம் போன்ற பல துறைகளிலும் இவர் சிறந்து விளங்கியுள்ளார். கிட்டதிட்ட 25 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளதாக வலைதள நண்பர்கள் பட்டியல் இடுகின்றார்கள். நான் திரட்டிய செய்திகளை முடிந்தளவு சுருக்கமாக சொல்ல முற்படுகிறேன். அதற்கு முன் தங்களின் பொன்னான நேரங்களில் சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து புத்தகங்களாகவும், கட்டூரைகளாகவும் வலைப்பூக்களில் பதித்தும் தமிழ்த் தொண்டு செய்த அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கும் என் பல கோடி நன்றிகள்.

வரலாற்று கதைகள் –

பிறப்பு –

அகத்திய மாமுனியின் பிறப்பு பற்றி பல விதமான கருத்துகள் வலம் வருகின்றன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மித்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

சித்தர்களைப் பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய நண்பர் டாக்டர் மந்தயம் குமார் அவர்கள் விங்கிபீடியாவில் தன்னுடைய ஆய்வை தெளிவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அகத்தியர் பிறந்த தினம் 14-02-7673 இது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர். அகத்தியர் பிறந்த மாநிலம் குஜராத். தாயார் பெயர் : இந்துமதி. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர். தந்தையார் பெயர் : பார்கவா. இவர் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும். இவர் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து இருந்தார். பெற்றோர்கள் இருவரும் ரிஷப முனிவரின் வழிவந்த பசுபதா எனும் முனிவரின் பக்தர்களாக விளங்கி வந்தனர் என கூறுகிறார்.

அகத்தியர் குஜராத் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் நாட்டிற்கு வந்தமைக்கு காரணம் என்ன? சித்தர்களில் தலைவனாக உயர்ந்து நிற்க அகத்தியர் என்ன செய்தார்? ஏகப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் அகத்தியரை சுற்றி வருகின்றன.

பொதிகை மலைக்கு வந்த கதை –

பொதியமலை அல்லது பொதிகை மலை எனப் புகழ் பெற்ற மலையுடன் சித்தர் அகத்தியருக்கு பெரும்பங்கு இருக்கிறது. இவர் வடநாட்டில் கைலாசத்தில் இருந்தார். சிவனுக்கும் அம்மைக்கும் நடக்க கூடிய திருமணத்தை காண அனைவரும் வடக்கு நோக்கி வந்துவிட்டால், தெற்க்கு பகுதியில் சமன்நிலை பாதிக்கப்படும் என சிவனே அகத்தியரை பொதிகை மலைக்கு செல்ல சொன்னதாக ஓர் கதை உண்டு.

தென்பகுதிக்கு வந்த அகத்தியருக்கு கடவுளின் திருமணத்தை காண இயலாது போனதுபற்றி மிக வருத்தம். தம் பக்தர்களின் குறைதீர்க்கும் நாயகன் சென்னை திருவான்மையூரில் இருக்கும் மருந்தீஸ்வர்ர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளதாக அக்கோவிலின் திருவரலாறு கூறுகிறது.மேலும் அகத்தியருடைய தீராத வயிற்று வலியை நீக்க பரமனே வந்து மருந்தருளியதாகவும், அதனால் மருந்தீஸ்வரன் என்ற பெயர் பெற்று கோவில் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.அகத்தியருக்கு காட்சிதந்த வன்னி மரம் திருதளத்தில் தலவிருட்சமாக உள்ளது.

அகத்தியருடைய தமிழ் குரு –

இந்தியாவின் வடக்கு பகுதியில் இருந்த இவருக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த நிலையில் தென்பகுதிக்கு வந்து செயல்புரிய தமிழ் மொழியறிவு தேவைப்பட்டது. அதற்காக சிவனின் தவப்புதல்வன் கந்தனிடம் தமிழ் பயின்றதாக இவரே பாடலில் எழுதியுள்ளார். இவர் நந்தி மற்றும் தன்வந்திரி ஆகியோருக்கு சீடனாக இருந்துள்ளார்.

சில வரலாறு தெரியாத நண்பர்கள் தமிழை தோற்றுவித்தே அகத்தியர்தான் என்று கூறுகிறார்கள். அகத்தியர் தென்பகுதிக்கு வரும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி.

விந்தியமலையின் செருக்கை அடக்குதல் –

தென்நாட்டுக்கு அகத்தியர் வரும் வழியில் மலைகளில் மிக உயரமாக இருந்த விந்திய மலையானது அகத்தியருக்கு வழி விட மறுத்தது. சிவனின் அருளைப் பெற்ற சித்தர் என்பதால் அதனுடைய செருக்கை அழித்து தான் வடக்கு திசைக்கு மீண்டும் வரும் வரை குனிந்தே இருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தார். காலம் அவரை வடக்கு திசைக்கு திரும்ப அனுப்பாததால் விந்திய மலை உயரம் குறைந்தே இருப்பதாகவும் ஒரு புனைவுக் கதை உண்டு.

விந்தியனின் சிறகை சிவனே வந்து வெட்டியதாகவும் ஒருகதை இருக்கிறது.

காவிரி தோன்றிய கதை –

சிவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பொதிகை மலை வந்த அகத்தியர், சிவனுடைய சிரசிலிருந்து ஓடிவரும் கங்கை நதியின் சிறு பகுதியை தன்னுடைய கமண்டலத்தில் பிடித்து வந்தார். வறண்ட நிலப்பகுதியாக இருந்த தென் பகுதிக்கு நீர் கொண்டு வந்தவர், குளித்து விட்டு கொஞ்சம் களைப்பு நீங்கி விட்டு செல்லலாம் என ஒரு பெருங்கல்லின் மீது தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டு சென்றார். அப்போது சிவக்குழந்தை வினாயகர் காகம் உருவெடுத்து அந்த கமண்டலத்தினை தட்டி விட்டார். அது உடனே ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காகம் வந்து தட்டிவிட்டு விரிந்த நீர் என்பதால், அது காவேரி எனப் பெயரப் பெற்றது.

மர்மங்கள் தொடரும்...

உலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள்

பகுத்தறிவாதிகள் என்று ஊரை ஏமாற்றுகிறு ஒரு கூட்டம். பகுத்தறிவு என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு பகுத்தறிவே வேலை செய்வதில்லை என வாதம் செய்கின்றார்கள். பெரியார் இந்து மதத்தை அழித்துவிட்டு இஸ்லாமியர்கள் ஆகி விடுங்கள் என சொன்னதாக செய்தியை பரப்பி கொண்டிருக்கின்றார்கள். கடவுளை எதிர்ப்பவர்களுக்கு அல்லா கடவுளாக தெரிவதில்லையா. இல்லை அவரை கடவுளுலாக இவர்கள் மதிக்கவில்லையா என தெரியவில்லை.

பெண் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, மது, கள் ஒழிப்பு என அவருடைய மற்ற கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு இந்த ஒரே ஒரு கொள்கையை மட்டும் ஏற்று நடக்க என்ன காரணம். எல்லாம் பணம். முகமதியர்களுக்காக மதம் பரப்பும் வேலையை இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரிகிறது.

உண்மையில் எது பகுத்தறிவு –

நாம் செய்கின்ற செயலில் நன்மை இருக்கின்றதா தீமை இருக்கின்றதாவென ஆராய்ந்து செய்வது தான் உண்மையான பகுத்தறிவு. அது கருப்பு சட்டைகாரர்களைவிட ஆன்மீக வாதிகளுக்கு மிக அதிகமாக இருக்கின்றது. ஆடியில் உறவு கொண்டால் பத்து மாதம் கழித்து குழந்தை பிறக்கும் மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் பிரசவம் நடந்தால், குளிர் சாதன வசதியில்லாத அக்காலத்தில் பெண்கள் துன்பப் பட நேரிடும் என சொன்னது முதல், வடக்கே தலை வைத்து படுத்தால் புவிகாந்த ஈர்ப்பால் எதிர் விளவுகள் ஏற்படும் என்பது வரை ஒவ்வொறு செயலுக்கும் அர்த்தங்களோடு செய்வது இந்துகள் தான்.

எதிர்ப்பவர்களுக்கு பெயர்கள் –

இவர்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அவர்களை தமிழின துரோகிகள் என்று குற்றம் சாட்டிவிடுகிறார்கள். தமிழுக்கு இவர்கள் செய்யும் கொடுமைகள் பத்தாதம் . மக்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்ட புனைவுகளில் வக்கிர எண்ணகளுடன் அனுகி தீயவைகளை பரப்புகின்றார்கள். புராணங்களிலும், இதிகாசங்களிலும் தவறு இருப்பதாக சொல்லி புறக்கணிக்க சொல்லும் இவர்கள். தமிழர்களிடமிருந்து கம்பனையும், பாரதியையும் பிரிக்கின்றார்கள். ஏற்கனவே தமிழ் மக்கள் பலருக்கு வெண்பா முதல் அணிகள் வரை தொடர்புகள் அற்றுப் போய்விட்டது. இப்போது இவ்வாறு சொல்லி எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டால் எவ்வாறு தமிழ் தளைக்கும்.

ஏமாற்று வேலைகள் –

திராவிட மக்கள் இருந்த நாட்டில் வேறொரு நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அழித்ததாகவும், ஆரியர்கள் தான் பார்பனர்கள் என்றும் சொல்கிறார்கள். வெளி நாட்டு ஆரியர்களை விரட்ட வேண்டும் என்கிறார்கள். ஆரியர்களுக்கு பின்பு வந்த முகமதியர்களையும், கிறிஸ்துவர்களையும் பற்றி புகழ்ந்து பேசுகின்றார்கள். திராவிட மக்களை ஆரியர்களாக மாற வேண்டாம் முகமதியர்களாக மாறுங்கள், கிறிஸ்துவர்களாக மாறுங்கள் என்கிறார்கள். இது எப்படி ஞாயமாகும். வெளி நாட்டினரை விரட்ட வேண்டுமென்றால் ஆரியர்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோரையும் விரட்ட வேண்டியது தானே. முன்னுக்கு பின் முரனாக பேசி ஏன் மக்களை குழப்ப வேண்டும். அவர்களின் முரனான பேச்சுகளை ஏன் என கேட்க வேண்டி வந்த்தால் பிற மதங்களையும் இதில் இணைக்க வேண்டி வந்தது. பிற மத நண்பர்கள் மன்னிக்கவும்.

1. சமஸ்கிருதம் வேறு மொழி அதை ஏற்க வேண்டாம் எனச் சொல்பவர்கள், இஸ்லாமியர்களின் உருதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவது ஏன்?.
2. தமிழில்தான் முஸ்லிம் எல்லோரும் பேசுகின்றார்கள் என நெஞ்சல் கைவைத்து இவர்களால் சொல்ல முடியுமா?
3. தமிழுக்கென ஒரு கடவுளாக முருகனை வைத்து வழிபடும் மனிதர்களை மதம் மாற வற்புருத்துவது ஏன்?.
4. மதமில்லை மார்கம் என்று சொல்லி உலகில் தீவிரவாத தாக்குதல் நடத்தி வருபவர்களை ஆதரித்து பேசுவது ஏன்?
5. இந்து ஆட்டை வெட்டினால் ஐயோ கொலை என கத்தும் இவர்கள், வான் கோழி கழுத்தை கார் கதவில் சாத்தி கொல்லும் போதும், ஒட்டகத்தை வெளிநாட்டிலிருந்து வர வைத்து கொன்று சாப்பிடும் போதும் அவர்களுடன் ஓடிப்போகின்றார்களே ஏன்?.
6. சாதி ஒழிப்பிற்காக தான் முகமதிய மதம் போனோம் என்று சொல்லும் நாத்திகவாதிகள் அங்கும் பிரிவுகள் இருப்பதையும் அவர்கள் அடித்துக்கொள்ளும் கொடுமையையும் சொல்வதில்லையே ஏன்?
7. தமிழ் கடவுள் முருகன் இரண்டு பெண்களை கட்டி கொண்டிருக்கிறான் என பேசும் அவர்கள், அவர்களின் தலைவர் பெரியாருக்கும், கருணாநிதிக்கும் எத்தனை மனைவிகள் என நினைத்துபார்க்க மறுக்கிறார்கள் ஏன்?
8. எப்போதோ நடந்த பாபர் மசுதியை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு இரட்டை கோபுர தாக்குதலையும், காசி, கோயமுத்தூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களையும், மும்பை தாஜ் ஓட்டல் உட்பட எட்டு இடங்களில் நடந்த தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்த முஸ்லிம் வெறித் தாக்குதலையும் என எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றார்கள். இப்போது கூட எங்கே தாக்குதல் நடத்த முடியுமென இந்தியாவிற்குள் ஊடுருவிக் கொண்டிருப்பவர்களை பற்றி பேச மறுக்கின்றார்கள் தேச துரோகிகள்.
9. சகோரத்துவ மதம் எது கூடப்பிறந்தவகளையே கொன்று குவிக்கும் இஸ்லாமிய மதமா?. தாலிபன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானிய முஸ்லிம்களும் அடித்துக்கொள்கின்ற கொடுமையை தான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே நாம்.
10. இந்தியா கிரிக்கெட்டில் தோற்றால் அது பார்ப்பன சதி, ஒலிம்பிக்கில் விருது வாங்காமல் போனால் அதற்கு காரணம் இந்துகள் என சொல்கிறார்கள்.
11. பார்ப்பனர்களை எதிர்ப்பதாய் சொல்லி சொல்லியே சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பெரிய எழுத்தாளர்களையும், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்ற கலைதுறையினறையும் மிகவும் கேவலமாக பேசுகின்றார்கள்.
12. சாதி எதிர்ப்பு பற்றி பேசுகையில் அ.தி.மு.க, தி.மு.க என திராவிட கட்சிகளில் மாறி மாறி கூட்டனி வைக்கும் ராமதாஸை பற்றி பேசுவதில்லை. மாறாக தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள் என்ற பெருந்தலைவரைப்பற்றி தவறாக பேசுகின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகிறது. பகுத்தறிவுகாரர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். என்ன நான் சொல்வது சரிதானே.

இந்த கட்டுரையை நாத்திகர்கள் யாராவது படித்தால் என் கேள்விக்கு பதில் சொல்லவும்.

நாத்திகர்கள் சாதியை ஒழிக்கின்றார்களா என்பதைப் பற்றி விரைவில்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.

உலகம் முழுதும் தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லி திரியும் கூட்டத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள் மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாய் இருப்பதை உலகிற்கு எடுத்து சொல்வதே இக் கட்டுரை.

தினம் நடக்கும் பூஜை –


ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.




என்பதாம் திருமணம் கருணாநிதியின் ஊரான திருவாருர் தியாகராஜர் சந்ததியில் ரகசியமாக நடந்ததாக சில நாளேடுகள் சொன்னன. தகுந்த ஆதாரம் இல்லாத்தால் அவற்றை விட்டுவிட வேண்டிதுதான். ஆனால் நெருப்பின்றி புகையாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் பூஜை செய்து கடவுள் அருளை பெறலாம். தினம் கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழ் நாட்டின் ஏழை பாமரன் மட்டும் பூஜை செய்ய கூடாது. இதாவது பரவாயில்லை. இந்து மதத்தின் விழாக்களை பொய் என்றும் அவற்றை கொண்டாட கூடாதென்றும் அறிக்கை விட்டுவிட்டு குடும்பத்துடன் இவர்கள் கொண்டாடியிருக்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி கொண்டாடிய கருணாநிதி குடும்பம் -


விஜய் தொலைக்காட்சியில் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி தீபாவளியின் போது ஆதவன் படம் பற்றி பேச சூரியாவுடன் காப் வித் அனுவில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது தீபாவளி என்றால் மாறன் மாமா குடும்பம், மற்றும் எல்லா சொந்தங்களும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது 5000 வாலா, 10000 வாலா போன்ற பெரிய பெரிய பட்டாசுகளையெல்லாம் மாமா, அப்பா போன்ற பெரியவர்கள் வைப்பார்கள், நான் குஜிலி பட்டாசு வைப்பேன் என்று சொன்னார்.

நரகாசுரன் செத்து போனதை நாத்திகர்களின் தலைவன் குடும்பம் கொண்டாடலாம். அதுவும் மாறன் போன்ற தி.மு.க பெரியவர்கள் குடும்பத்துடன். ஆனால் பாவப்பட்ட ஏழை தொண்டனின் குடும்பமும், குழந்தையும் கொண்டாட கூடாது. அடடா என்ன ஒரு தீர்ப்பு. என்ன ஒரு தீர்மானம். பல வருடங்களாக குடும்பமே சேர்ந்து தீபாவளியின் போது ஆயிரமாயிரம் வாலாக்கலாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி எதுவும் நடக்காதது போல நரகாசுரனைப் பற்றியும் , பகவான் கிருஷ்ணனைப் பற்றியும் குறை பேசி அறிக்கை விட்டுவிட்டு பட்டாசு கொலுத்த போய் விடுகிறார். அதெல்லாம் தெரியாமல் பாவப்பட்ட நாத்திகன் தன் குழந்தையை தெருவில் வேடிக்கை பார்த்து வைக்கின்றான்.

உலகிற்கே தெரிந்த பக்தி –




கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் இந்து சாமியார் சத்திய சாய் பாபாவை வீட்டிற்கே அழைத்துவந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அதுவும் யார் முன்னிலையில் பகுத்தறிவு பகலவன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் முன்னிலையில். உண்மையான நாத்திகவாதியென்றால் அப்படி செய்ய விட்டிருப்பாரா. கருணாநிதியின் மனைவி மட்டுமல்ல உடன் இருந்த தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்டார்கள். இந்துகளில் சிலரே நம்பாத சாமியாரான சத்திய சாய் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரிடம் மோதிரமும் செயினும் வாங்கியதை மேடையில் பரவசமாய் பேசிவிட்டு இவர்களால் எப்படி மீண்டும் பெரியாரை பற்றி பேச முடிகிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என்றல்லவா இந்த கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பார்களா நம் மக்கள்.

மஞ்சள் துண்டு –


இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்த எல்லா மனிதர்களுக்கும் அவரின் மீது அமர்ந்திருக்கும் மஞ்சள் துண்டைப் பற்றி தெரியும். தொடக்க காலத்தில் திமுகாவினரின் தெருகூட்டும் துண்டுகளை தான் கருணாநிதியும் அணிந்திருந்தார். பதவி ஆசையும், அதை தக்க வைக்கவும் பிரபல சோதிடர் அணிய சொன்னது தான் அந்த மஞ்சள் துண்டு என்றும் அதனால் தான் தலைவர் அதை விடாமல் அணிந்து கொண்டிருக்கின்றார் என்கின்றார்கள். எப்படி பட்ட மூட நம்பிக்கை பாருங்கள். அவரிடம் சென்று கேட்டால் மஞ்சள் துண்டை அணிவதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியல் இடக்கூடும். நாத்திகர்கள் யாராவது அந்த செயலை எனக்காக செய்து வரவும். எங்கள் ஊர் சோதிடர்கள் இதை சொல்லிதான் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அந்த பட்டியலை கொடுத்தால் அவர்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். ஒரு பொருளுக்கு எவ்வாறு நிறம் வருகின்றது என்பது அறிவியலில் இயற்பியல் பாடம் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த மஞ்சள் துண்டின் மகிமையை எவ்வாறு சொல்ல.



பவள மோதிரம் –


கருணாநிதியின் மிக அருகே இருக்கும் சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இந்த பவள மோதிரம். ஏனென்றால் தூரத்திலிருக்கும் மக்களின் கண்களுக்கு இது தெரிவதில்லை. மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக திகழும் கருணாநிதி கற்களின் மூலமாக வாழ்க்கையில் முன்னேரலாம் என்று நம்புகிறார். சாதாரண மக்களின் சின்ன சின்ன நம்பிக்கைகளை கேலி செய்யும் கூட்டத்தின் தலைவர் மூடநம்பிக்கைகளால் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்வாரா. சிரிப்பொலி தொலைக்காட்சியில் தினம் தினம் விவேக்கின் நகைச்சுவையை பார்த்து சிரிப்பவர்கள் இதையும் பார்த்து சிரியுங்கள்.

சல்லடை ஒன்று ஊசியைப் பார்த்து உனக்கும் ஒரு ஓட்டை என்றதாம் அது போல மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கும் நாத்திக கூட்டம் இதையும் கவணிக்கட்டும். தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டு இந்து மதத்தின் மூடநம்பிக்கை வரை எல்லாவற்றையும் கடைபிடிக்கும் கலைஞரை ஓர் நாத்திகன் என்று இனியும் யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து இப்படி கூறுங்கள்..... முட்டாள்கள்.

உண்மையான நாத்திகம் எது என்பதை நாத்திக மக்கள் மறந்துவிட்டார்கள். பெரியார் சொன்ன அளவு கூட நாத்திகம் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை முன் வைக்கில் இந்து மதம் தவிற மற்ற மதங்களைப் பற்றி பேச பயந்து ஓடிவிடுகின்றார்கள். பதவிக்காகவும், மறைமுக அரசியல் செல்வாக்கிற்காகவும் நாடகம் நடத்துகின்றார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் நாத்திக தலைவரென ஊரை ஏமாற்றும் கருணாநிதியின் சுயரூபத்தினை காட்டவே இங்கு எழுதினேன்.




நாத்திகத்தினை பக்குவமில்லாத பெரும்பாலும் இளைஞர்கள் தான் கடைபிடிக்கின்றனர். பக்குவம் வந்ததும் ராமா, கிருஷ்ணா, ஏசு, அல்லா என சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசியல் சாராத துறையிலிருக்கும் நாத்திக மனிதர்களும் ஆன்மீகத்தை விட்டு விலக மறுக்கின்றார்கள் என்பது கண்கூடான உண்மை.

திங்கள், 23 நவம்பர், 2009

ஆன்மீகம் - கேள்வி பதில்

தேடல் மட்டும் தான் வாழ்க்கையை ருசியாக வைத்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய ஆன்மீக கேள்விகளுக்கு நான் தேடி கண்டறிந்த பதில்கள் இவை.

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

மதம் என்பது மனித நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதை புரிந்து கொண்ட முன்னோர்கள் தங்களின் சந்ததியினருக்கு வாழும் முறைப் பற்றி சொல்லவும், உயிர்களை காக்கவும் பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்தனர். இந்த கதாபாத்திரங்களின் குணநலன்கள் மூலம் மக்களுக்கு நல்லதை எடுத்து சொன்னார்கள். (மிக மிக சுருக்கமாக சொன்னால் பாட்டி சொல்லும் நல்வழி கதைகள்) . எந்த ஒரு பொருளும் முழுக்க முழுக்க கற்பனையினால் உருவாக்கி விட முடியாது எனவே மனித ரூபத்தில் சில மாற்றங்களை செய்து கடவுள் எனவும் அந்த கடவுள்களுக்கு தங்களுடன் வாழ்ந்த மனிதர்களின் குணநலத்தை மிகப் படுத்தியும் வடிவமைத்தனர். இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ஏகப்பட்ட கடவுள்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் புகழ் உச்சியிலிருத கிரேக்க மதத்தில் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பதை போன்றே குடும்ப கட்டமைப்புடன் காணப்பட்டன. கிறித்து மதத்தினை பொருத்த மட்டும் ஏசுவும், அவரது அன்னையும் கடவுளாக குறிப்பிடபட்டாலும் போப் முதல் பாதிரியார் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய மதத்திலும் அல்லா முதல் கடவுள். அவருடைய வழியை உலகிற்கு சொன்ன தூதர்கள் நபிகள் பெருமான் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தனை தெய்வங்கள் இருந்தும் அதென்ன குலதெய்வம்?

கடவுள்களின் தோற்றம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன். குலதெய்வமும் அப்படிதான். ஆனால் குலதெய்வங்கள் உண்மையாலும் வாழ்ந்த மனிதர்கள். தங்களுடைய இன மக்களை காப்பாற்றுவதற்காக இறந்து போன முன்னோர்களையும், அதிசய குணம் கொண்டவர்களையும் மறக்காமல் இருப்பதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட வழிபாட்டு முறை குலதெய்வ வழிபாடு. பாப்பாத்தி, ராசாத்தி, வெள்ளையம்மா, பெரியண்ணன், கருப்பு, வீரபத்திரன் இப்படி ஒவ்வொரு குலதெய்வத்தின் பின்னாலும் ஒரு நெஞ்சம் நெகிழ்கின்ற உண்மை சம்பவமும் மனித வாழ்க்கையும் இருக்கிறது. இதுபற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன என்பதை நினைவில் கொள்க.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடவுளை நினைக்க கூடாது என சொல்லுகின்றார்களே?

இந்த கேள்வியே மிகவும் அபத்தமானது. இறையை நினைக்க கால நிர்ணயம் செய்ய இவர்கள் யார். இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் தீட்டு என கூறி சாமி அறைக்குள் செல்வதில்லை. இதற்கு முதல் காரணம் அறிவியல் தான். பெண்ணின் மாதவிடாய் காலங்களில் நடக்கும் உதிர போக்கு காரணமாக அவர்கள் உடல் சக்தியிழந்து காணப்படும். இந்த நேரத்தில் பூஜை செய்ய கூட்டி மொழுகி (அந்த காலத்தில்) அவர்கள் வேலை செய்தால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிடும். எனவே முன்னோர்கள் பெண்களை மாதவிடாய் காலங்களில் அதிக வேலை செய்ய அனுமதிப்பதில்லை. இதை தவறாக புரிந்து கொண்டவர்கள், பெண்களை கடவுளை நினைக்கவும் தடை செய்வது மிகவும் கேவலமான செயல். அவர்கள் இன்னும் இந்து மத கோட்பாடுகளை புரிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல் முறையில் நிறைய சடங்குகள் இருந்தாலும் தலையில் தேங்காய் உடைப்பது போன்ற மூடநம்பிக்கைகளும் காணப்படுகின்றனவே?

ஆம். இது எல்லா மதங்களுக்கும் உண்டான பிரட்சனை. இஸ்லாமியர்களின் குர்பானிதான் இந்து மதத்தின் பலி கொடுத்தல். உயிர் வதை என்பதை தடுக்க சட்டங்கள் வந்தாலும் இதை தடுக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வேதனை. சில இடங்களில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. இதனை சரி செய்ய முதலில் எதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை வரையரை செய்ய வேண்டும். பிறகு இதனுடைய விளைவுகளை எடுத்து கூறி நாம் அவற்றை அழிக்க வேண்டும். பால்ய திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவையெல்லாம் விழிப்புணர்வு எற்படுத்தி நாம் அழித்து விட்டோம் என்பதை நினைவில் கொள்க.

வாஸ்து படி வீடுகட்டினால் சுபிட்சம் என்கின்றார்களே?

முதலில் வாஸ்து என்பது என்னவென அறிய வேண்டும். எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலை பிரதேசங்களில் ஒரு அமைப்பு, பாலைவனங்களில் ஒரு அமைப்பு, கலர் நிலங்களில் ஒரு அமைப்பு என காணப்படுகின்றன. இதனை கணக்கில் கொண்டும் வீட்டில் சூரிய வெளிச்சம் பரவ ஏற்றவாரும் எப்படி வீட்டை அமைப்பது என சொல்வது வாஸ்து. இப்போது வியாபாரமாகிவிட்டதால் பலரும் தவறு செய்கின்றார்கள்.

நட்ச்திரம், ராசி , ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை நம்புவதோ உயர்விற்கு பலன் தராது. ஜாதகம் என்பது ஒரு கணக்கீடு, வெகு சிலர் மட்டுமே அந்த கணக்கீட்டில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றார்கள்.(உலக புகழ் பெற்ற நாஷ்டோடாமஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிரீர்களா) புதிய கோள்கள் கண்டறியப்பட்டும் கூட பழைய முறையை இன்னும் ஜாதகம் பார்ப்பவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் முறையான கணக்கீட்டை அவர்களால் கணித்து கூறுவது கடினம். பெயரை மாற்றுவது, வீட்டை மாற்றுவது, வாகண எண்ணை மாற்றுவது என செய்யாமல் உங்களுடைய கவணத்தினை தொழில் பக்கம் மாற்றினாலே வெற்றி கிடைத்துவிடும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Hindu gods, religion questions and answers, Hindu questions and answers, big religion questions and answers, Tamil Hindu questions and answers, questions and answers in Tamil, wrongs and rites

வெள்ளி, 20 நவம்பர், 2009

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்



குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் இன்று.

தன் எடையில் சரி பாதி புத்தகம் சுமக்கும் கழுதையாய், பெற்றோர்களின் வறுமையை துடைத்தெரிய தொழிலாளியாய், பிச்சையெடுக்கும் மக்களுக்கு கருவியாய், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் அன்பு கிடைக்காமல் தனிமையாய் இன்னும் எத்தனை எத்தனையோ. இதில் புதியதாக சேர்ந்திருக்கிறது பாலியல் வன்கொடுமை. ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன இந்த கொடூரத்தில். இதை தடுக்கவும், விழிப்புணர்வு செய்திடவும் இங்கு ஆளில்லை என்பதே உண்மை.

தனக்கு என்ன நடக்க போகிறது என்று அறியாமலேயே ஒரு சாக்லேட்டுக்கும், விளையாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்பட்டு செத்து போகும் குழந்தைகள் பற்றி நம்மில் எத்தனை பேர் கவலை படுகின்றோம். சரியாக சொல்லப் போனால் யாருமில்லை. நொய்டா பிரட்சனை பகிரங்கமாக தெரிந்தும் இதற்கென சிறப்பு தடுப்பு சட்டம் போடாமல். நம் அன்றாட பிரட்சனையை கவணிக்க போய் விட்டோம்.



நகரெங்கிலும் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கும் வேளையிலும் அந்தப் பெண்களிடம் போகாமல் குழந்தைகளை ருசி பார்த்து அலைகின்றது ஒரு கூட்டம். காவல் அதிகாரிகள் பிடித்து கொடுத்தாலும் விசாரனை முறைகளில் வெளியே வந்து விடுகின்றார்கள் குற்றவாளிகள். நாடு விட்டு நாடு வந்து ஒருவன் பல குழந்தைகளை சீரழித்திருக்கின்றான். அவனை பிடித்து ஊர் மக்கள் காவலர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இப்போது அவன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். எப்படி வெளிவந்தான் என எல்லோருக்குமே தெரிந்துவிட்டது.

மற்ற பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் நடைபெறும் குற்றங்களை கூட நாம் பெரிது செய்ய இயலாது. தனக்கு ஒத்து வராத மேல் அதிகாரிகள், கணவன் குடும்பத்தினர் என எல்லோரையும் சில பெண்கள் பழி தீர்ப்பதற்காக அபாண்ட குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள். காதல் என்று சொல்லி பலருடன் ஊர் சுற்றி கர்பம் தரித்துவிட்டு கலைக்க முடியாது போனால் மட்டுமே திருமணம் என்ற கொள்கை வைத்திருக்கின்றார்கள் பெண்கள்.மனைவி இருக்கும் போதே பிற பெண்களை தேடும் கணவன்கள். தங்களின் மகிழ்வுக்காக பெண்களை கிண்டல் செய்யும் வாலிபர்கள் என பலரும் இருக்கின்றனர்.

நாம் இவர்களுக்காக தான் கவலைப் படுகின்றோம். குழந்தைகளை மறந்து விடுகின்றோம். அவர்களுக்கென புத்தகங்கள் இல்லை, திரைப்படங்கள் இல்லை, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இல்லை. மொத்தத்தில் கவணிப்பாரற்று தங்கள் போக்கில் வளரும் காட்டு செடியாக இருக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் சிறுமியும் சிறுவன் எந்தளவிற்கு கொடுமையை அனுபவிக்கிறான் என பள்ளியில் போய் பாருங்கள். பேச்சாலே கொல்லும் ஆசிரியர்கள் முதல் விதவிதமான கொடுமை செய்யும் சாடிஸ்டுகள் வரை இப்போது பள்ளிகளில் இருக்கின்றார்கள்.

மலரினும் மெல்லிய குழந்தைகள் கசக்கப்படுவதை முயன்றவரை தடுத்திடுவோம். அதற்காக உறுதி எடுத்திடுவோம்.



இந்தக் அழகிய குழந்தை யாரென தெரிகின்றதா.



உலகையே தனக்குகீழ் கொண்டுவர முயன்ற ஹிட்லர். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த மனிதனின் குழந்தை பருவமும் அழகு தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா – சிறுகதை

அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் அறையில்,

“ஐந்து வயசாயிடுச்சா”

“ஆயிடுச்சுங்க”

தலைமையாசிரியர் ஒரு தாளை எடுத்து எழுது தொடங்கினார்

“பொண்ணு பேரு”

“பூங்கொடி”

“அப்பா பேரு”

“நான்தானுங்க”

“யாருன்னா கேட்டேன். பேரைச் சொல்லுயா”

“ராசய்யா சாமி”

“இந்து தானே”

“ஆமாம் சாமி”

“முன்னையெல்லாம் பேரைச் சொன்னாலே மதமும் தெரிஞ்சு போயிடும். இப்ப மதம் மாறினாலும் பேரையும் விடரதில்லை, சாதியையும் விடரதில்லை” என மெதுவாக முனகியபடி,

“சரி, என்ன சாதி”

“ ****************** ”

“பார்க்கரப்பவே நினைச்சேன்” மீண்டும் முனகல்.

“பையனை பள்ளிக்கூடத்துல சேத்தாச்சு. வலது கை பக்கமா போயி ஒன்னவது வகுப்பு எதுன்னு கேளு, சொல்லுவாங்க அங்க உட்காரவைச்சுட்டு போ”

“ஏ புள்ள சாமிக்கு வணக்கம் வையி”. சிறுமி வணக்கம் வைத்தாள். ஏதோ ஞாபகம் வந்தவராக,

“பொண்ண, பின்னாடி வரிசையில உட்கார சொல்லு”

“நல்ல படிப்பா சாமி, அதனால...”

“சொல்லரத கேளுயா, நீங்க பாட்டுக்கு முன்வரிசையில உட்கார வைச்சிட்டு போயிடறீங்க, எப்படி எங்க குழந்தைகங்க அவங்கள தாண்டிப் போயி உட்காருன்னு மேல்சாதி காரங்க சண்டைக்கு வாராங்க”

முகம் வாடிப்போய் அவர் வெளியேர, சிறுமி சுவரில் மாட்டப்பட்டுருந்த படத்தை பார்த்தபடியே அவருடன் சென்றாள். தலைமையாசிரியரும் கவணித்தார் பாரதியாரின் புகைப்படம் கீழ் “சாதிகள் இல்லையடி பாப்பா” வரிகள் மின்னின. அதை நோக்கி சென்றார் அகற்றுவதற்கு.

பி.கு –

பள்ளிக்கு படிக்க வருகின்ற குழந்தை முதன் முதலாக கற்றுக் கொள்வது தனது சாதியைதான். பள்ளியின் குறிப்புகளிலிருந்து அகற்றினாலே சாதிகள் அழிந்துவிடும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக-

Short story, Tamil story, Tamil short story, small Tamil story, free story

வியாழன், 19 நவம்பர், 2009

கவுண்டரும் கருத்துப்படமும்










கருத்துப்படம் போட்டு சின்னாதாய் ஒரு கலகம் உண்டு பண்ணலாம் என தோன்றியதும் கவுண்டரிடம் போனேன். சின்னக்கவுண்டர் இல்லைங்க, நம்ம புரட்சி புயல் கவுண்ட மணி. அவரிடம் கால் சீட்டு கிடைச்சிருச்சு. அதோட செந்திலும் வாரேனுட்டார். இனி அவர்கள்...(நவம்பர் 18ம் தேதி வெளிவந்த செய்திகளை வைத்து ஒரு கற்பனை.)

கவுண்டர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்க, செந்தில் வீட்டிற்குள் வருகிறார்.

கவுண்டர் – டேய் கம்பியூட்டர் தலையா, எங்கடா போய் ஊர் சுத்திட்டு வார?

செந்தில் – அது ஒன்னுமில்லைண்ணே, நாட்டுல என்ன நடக்குதுன்னு போய் பார்த்துட்டு வாரேன்.

கவுண்டர் – ஆமா இவர் பெரிய ஐநா செயலாலரு நாட்டை பத்தி பேசராரு. அப்படி என்னாடா நடக்குது நாட்டுல?

செந்தில் – ஆடு நடக்குது, மாடு நடக்குது...

கவுண்டர் – அப்படியே ஓங்கி உதைச்சானா ஒசாமாகிட்டயே போயிடுவ, ஒழுங்கா சொல்லுடா.

செந்தில் – நம்ப முதல்வரு அழுவராருன்ணே(செந்திலும் குலுங்கி குலுங்கி அழுவராரு)

கவுண்டர் – (கவுண்டருக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போகிறது.இருந்தாலும் மனசை தேற்றிக் கொண்டு)நீ அழாதடா நாயே, கலைஞர் ஏன் அழுவராரு. கொள்ளு தாத்தாவா ஆனதக்கப்புறமும் முதலமைச்சர் நாற்காலியை விட்டு நவுர மாட்டேங்குராரு என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவருக்கு என்னாடா கஷ்டம்

செந்தில் – விடுதலை புலிகள் செஞ்ச தவறுகளால தான் இன்னைக்கி ஈழத் தமிழர்கள் கஷ்டப்படராங்கன்னு சொல்லி பழைசை நினைச்சி அழுவராரு!

கவுண்டர் – அட முள்ளம்பன்றி தலையா அது நீலிகண்ணீர்டா. புள்ளைக்கு மந்திரி சீட் வாங்க அவர் டெல்லி போனது, தமிழ்நாடு நதிகள் இணைப்பு தள்ளிப்போட்டது, முல்லை பெரியாரு அனை பிரச்சனை என எல்லாம் இப்ப அவருக்கு எதிரா மக்களுக்கு தெரிஞ்சுபோச்சில்ல.அதான் தந்திரமா திசை திருப்பராரு.

செந்தில் – ஏன்ணே இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்கலாண்ணே.

கவுண்டர் – இதுவும் பண்ணுவாங்க, இதுக்கு மேலையும் பண்ணுவாங்கடா. நீ வேணா பாரு தமிழ்நாட்டு அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தம்பிதான். எப்பவோ வந்திருக்க வேண்டியவரு இன்னும் சும்மாவே இருக்காரு. அப்புறம் டெல்லில நம்ம ராகுல் தான்.

செந்தில் – ஏன்னே இவ்வளவு செய்சும் மக்கள் நம்பராங்களான்னே

கவுண்டர் – அதான் விதிங்கிறது. பக்கத்து நாட்டுல போர் செஞ்சு மக்களை கொன்னு குமிக்கும் போது இவுங்க காசு வாங்கி ஓட்டு போட்டாங்க. அனுபவிக்கட்டும், அப்பதான் புத்தி வரும். வேர என்னடா செய்தி.

செந்தல் – சர்மிலி மலையாளப் படத்துள்ள நடிக்க போகுதாண்ணே

கவுண்டர் – இந்த புள்ள ஏன் அங்கே போவுது. ஏற்கனவே ஷகிலானால லாலோட படங்கூட ஓடமாட்டேங்கிதுன்னு இப்பதான் அத வெளியே துரத்தினாங்க. பாவம்பா கேரளா நடிகருங்க.

செந்தில் – அண்ணே அப்புறம் ஷெட்லி பத்தி,...

கவுண்டார் – டேய் வேணான்டா அவுன்கள சிபிஐ பாத்துக்கும் நீ சாப்பிட ரெண்டு இட்லி கொண்டா

செந்தில் – (தயங்கியபடி மெதுவான குரலில்)அண்ணே எல்லா இட்லியும் நானே சாப்பிட்டேன்னே.

கவுண்டர் – அடே பாம் தலையா இப்படி நீ பண்ணுவேன்னு எனக்கு முதலையே தெரியுண்டா அதான் கடைக்கு முன்னாடியே சொல்லிவிட்டுட்டேன். இவ்வளவு விசயம் சொன்னியே உனக்கு ராசிபலன் பார்த்தியாடா

செந்தில் – பார்த்தேன்னே, யோகம் அடிக்கும் போட்டிருந்துச்சு.

கவுண்டார் – உனக்கு யோகமெல்லாம் அடிக்காது டா, இட்லியை ஒன்னுவிடாம தின்னதுக்கு நான் தான்டா அடிப்பேன். இந்தா வாங்கிக்கோ, இந்தா....

வழக்கம் போல செந்திலை கவுண்டர் துரத்துகிறார்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Politics leader, politics jokes, politics news, kounder, sendil, kowdamani sendil comedy, fake dialog , politics member and minister jokes, tamil nadu politics joke, karunaneethi, ragul Gandhi, Sonia Gandhi, prinka Gandhi, starlin, Tamilnadu chief minister , india prime minister , cine joke, south cinema news

சுஜாதா மென்நூல்கள்

சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் திருவரங்கத்தில் பிறந்தவர்.பெரும்பாலான கதைகளில் அதன் தாக்கம் நிறைந்திருப்பதை காண முடியும். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவுமே படிக்க படிக்க திகட்டாதவை.

சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் மென்நூல் வடிவில் கிடைப்பதில்லை. என்றாலும் இங்கு கொஞ்சம் மென்நூல்கள் இருக்கின்றன. தரவிரக்கம் செய்து படியுங்கள்.

ஆ நாவல் –

கணேஷ் வசந்த் நாவல்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஆ. ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஆ என்ற சொல்லுடன் முடித்திருப்பார். நான் சில இடங்களில் அது திணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இருப்பினும் மிக அழகாக புதிய முறையை புகுத்தியமை வியப்பு தருவதாக இருந்தது.

இந்த நாவல் இந்து மதத்தின் பூர்வ ஜென்ம விசயங்களை சார்ந்தது. அதை மெய்யென சொல்லும் விதமாக எழுதப்பட்ட புனைவு கதை. தன் மனைவியை கொல்லும் ஒருவன், நான் அந்த கொலையை செய்யவில்லை என வாதிடுவதும், அந்த உண்மையை வக்கில் சரியாக வாதாடி நிறுபிப்பதும் கொஞ்சம் புதுமை. முக்கியமாக கட்டளை இடுவதாக ஒரு குரல் அவனுக்குள் ஒலிப்பது நமக்கு கூட சில சமயங்களில் இப்படி நடந்ததே என எண்ண வைக்கும். நாவல் படித்து பல மாதங்கள் ஆன பின்பும் கூட இன்னும் ஜெயலட்சுமி டீச்சர் மனதிலே இருக்கிறார். இது நாவலுக்கு கிடைத்திட்ட வெற்றி.

ஆ நாவல் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

அனிதாவின் காதல்கள்

அனிதா மாதிரி ஒரு லூஸ் இருக்குமா என்று கதையை படிக்கும் போது தோன்றியது. இதில் அனிதா என்ற பிரமணப் பெண் எதையும் முடிவெடுக்காமல் இருக்கின்றாள். அவளுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானித்தாலும் கடைசியாக அவள் ஒரு முடிவெடுப்பதுதான் கதை. மிக பெரிய பணக்காரன் ஒருவன், சொந்தகாரன் ஒருவன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழன் ஒருவன், இப்படி வருவோர் போவோரெல்லாம் அனிதாவை காதல் செய்வதாக நாவல் போகின்றது. கோடிகளில் புரலும் கணவன் திடீரென நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் ஒரு தமிழ் பெண் என்ன செய்வாள். பெண் குடும்பம் அதை எப்படி பார்க்கும், ஆண் குடும்பம் எப்படி பார்க்கும் என சாதாரண சமூகத்தின் கதை இது.

எழுத்தாளர் சுஜாதா எழுதியதிலேயே சுமாரான நாவல் இதுவாகத்தான் இருக்கும். கணேஸ் வசந்தை இந்தக் கதையில் எதிர்பார்த்து நான் அடைந்த ஏமாற்றமாக கூட இருக்கலாம்.இருப்பினும் சேர் மார்கெட் போன்ற விளக்கங்களை கேட்கும் போது சுஜாதா அவர்களின் பல்துறை அறிவு வியப்பளிக்கிறது.

அனிதாவின் காதல்கள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

கற்றதும் பெற்றதும் -

ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் தொகுப்பு. சுஜாதாவை வாரம் ஒரு முறை வீட்டிற்கு கூட்டிவந்த அற்புதமான தொடர். சுஜாதா சினிமா முதல் அரசியல் வரை அலசிய மேடை.

கற்றதும் பெற்றதும் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மெரினா நாவல் –

தீய நண்பர்களின் சகவாசமும் பணமும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதற்காக எழுதப்பட்ட நாவல். வழக்கமான முடிவை யூகம் செய்ய கூடிய நாம் கடைசியில் ஏற்படும் திருப்பத்தினை எண்ணி வியப்படைய வேண்டியிருக்கும்.

இது ஒரு கணேஷ் வசந்த் நாவல்.

மெரினா நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விக்ரம் நாவல் –
நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தின் மூலம் இந்த நாவல். இந்தக் கதை பலருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படம் வசுல் சாதனை புரியவில்லை என கமல் 50 ரசிகன் எக்ஸ்பிரசில் சொன்னார்கள்.

விக்ரம் நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.

சுஜாதா சிறுகதைகள் -

சுஜாதாவின் குட்டி குட்டி சிறுகதைகளின் தொகுப்பு. யதார்த்ததோடு விஞ்ஞானமும் கூடி கலக்க கூடிய கதைகள். ஹிமோபிலியா நோய் முதல் திருபதி கோவிலின் தீர்க தரிசனம் முதல் சின்ன சின்னதாய் வியப்பு ஒவ்வொரு கதையிலும் இருக்கிறது.

சுஜாதா சிறுகதைகள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய Sujathavin Sirukathaigal.pdf

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Sujatha Aah..!, Sujatha Anithavin Kaathalgal,Tamil Novel, Sujatha Katrathum Petrathum, Sujatha-Eppadiyum Vaazalaam,Sujatha-Kadavul Irrukkiraram,Sujatha-Kanayaliyin Kadaisi Pakangal, Sujatha-Oru Vingyana PaarvailIrundhu,Sujatha-Vikram, Sujathavin Sirukathaigal ,Sujatha books in pdf format,Sujatha all book links,download Sujatha e book free,free download novels,shoetstory, free tamil novel,short story in PDF format

சத்குருவும் சங்கரன் பிள்ளையும்

வாசுதேவ் என்றவுடன் உங்களுக்கு கௌம் வாசுதேவ் மேனன் ஞாபகம் வந்தால் நீங்கள் திரைப்பட ரசிகன்.அதுவே சத்குரு ஜக்கி வாசுதேவ் ஞாபகம் வந்தால் நீங்கள் வாழ்க்கையின் ரசிகன்.

புத்தகங்கள் ஆகட்டும், தொலைக்காட்சி ஆகட்டும் எதிலும் சத்குரு சொல்வதை கேட்கும் போது ஒரு நிம்மதி, ஒரு தெளிவு. நான் யோகா கற்றுக் கொள்வதற்காக ஈசாவுக்கு சென்றதில்லை என்றாலும் ஈசாவைப் பற்றி எனக்கு நிறைய தெரியும். அதற்கு புத்தகங்களும் தொலைக்காட்சியும் உறுதுனையாக இருந்தன.

அத்தனைக்கும் ஆசைப்படு என்ற புத்தகத்தில் சங்கரன் பிள்ளை என்றொரு கதாபாத்திரம் மூலமாக அவர் சொல்கின்ற கருத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அந்த சங்கரன் பிள்ளையை உங்களுக்காக வலைப்பூவில் உலவவிட்டிருக்கிறேன்.பாருங்கள் சங்கரன் பிள்ளையை......

நீதிபதியும் சங்கரன் பிள்ளையும் -

சங்கரன்பிள்ளை ஒரு முறை குடித்துவிட்டு கலாட்டா செய்தார். அவரை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்தனர். அவரிடம் நீதிபதி சலிப்பாக, “மறுபடி மறுபடி கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா உன்னை சொல்லி குற்றமில்லை.எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!” என்றார். உடனே சங்கரன்பிள்ளை “ உங்களுக்காவது உண்மையான காரணம் தெரிந்திருக்கிறதே!.என் மனைவி விஸ்கியை சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்” என்றார்.

நாமும் இப்படிதான் நம்முடைய இயலாமையை மறைத்துவிட்டு யார் யார் மேலோ குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறோம்.

“எண்களையும், எழுத்துகளையும் உருவாக்கியதே மனிதன் தானே?. அவை எப்படி மனிதனை உருவாக்க முடியும்?.உங்கள் திறமையை நம்பித் தொழிலை துவங்குவீர்களா?, இல்லை எண்களை நம்பியா?” என நியூமராலஜி, நேமாலஜி என சுற்றி கொண்டிருக்கும் மூடநம்பிகை மிக்கவர்களை சொல்லாலே திருத்துபவர் சத்குருவை தவிற வேறுயாராக இருக்க முடியும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sathguru Jaki vasudev , jaki book, sankaran pilli, hindu darma, hindu wisdom, hindu stages, legends of religion, story form tamil nadu, tamil kadai, vasudev book, guru story, guru talk, sathguru think

கருத்துப் படம்

நாம் கடந்து வந்த செய்திகளை வைத்து கார்ட்டூன் படங்கள். இப்ப வலைப்பூக்களில் இது தான் பேசன்.














அமெரிக்க ஜனாதிபதி அர்னாடுக் கிட்ட போட்டு கொடுக்குறாரு எல்லோரும் ஓடிப் போயிடுங்க. அட சங்கத்த கலைங்கப்பா.....

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Cartoon, pictures, today Story, karunaneethi cartoon, tamil nadu cartoon, obama cartoon, DMK cartoon, tv shows, vijay tv show, sun tv show, zee tv show, cartoon for tamil people, legends of tamil nadu, USA cartoon, Arnold cortoon, politics leader jokes, cine joke, cinema jokes and cartoons

செவ்வாய், 17 நவம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் – 3

அன்பு எதையும் பொருட் செய்யாது என்பதே உண்மை.ஈசன் அருளில் தொடரின் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.

சிவனோடு பதினென் சித்தர்களும்.




சித்த மருத்துவம் –

சித்தர்கள் மக்களுக்கு செய்த நன்மையில் மிக முக்கியமானது மருத்துவ உதவி. கொல்லிமலை, சதுரகிரி, பொதிகை மலை, பழனி மழை, திருவண்ணாமலை என பலபல மலைகளில் செடிகள், கொடிகள், பட்டைகள், வேர்கள் என ஆய்வு செய்து மருத்துவ துறைக்கே புதிய வழிமுறையை வகுத்தவர்கள். இதை நாம் தமிழ் மருத்துவம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பல பெயர்களில் அழைக்கிறோம்.

இந்த வைத்திய முறையில் மட்டுமே பக்க விளைவுகள் எனப்படும் பெரும்குறைபாடு இருக்காது. எளிமையான வழி முறைகளும், விலை அதிகமில்லா இயற்கை தாவரங்களும் மக்களிடம் சித்த மருத்துவத்தை தனித்தன்மையில் வைத்திருக்கின்றன. பல மருத்துவமுறைகளில் குணமாகாத நாள்பட்ட நோய்களுக்கும் சித்த மருத்தும் தீர்வு சொல்கின்றது.

சித்தர்கள் வெறும் செடி,கொடிகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை. மனிதனின் உடலினையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடிகள், பித்தங்கள், ஞானேந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தெளிவான மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

தாங்கள் கண்டறிந்த எண்ணற்ற மருத்துவ குறிப்புகளை மறைக்காமல் பாடல்களாக எழுதிவைத்தவர்கள். சில மதிப்புமிக்க குறிப்புகள் அடங்கிய நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது வருத்தமான செய்தி. இந்த குறிப்புகள் தமிழில் மட்டுமல்லாது, சீன மொழியிலும் காணப்படுவதாக வரலாற்று ஆசிர்யர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள ஆங்கில மருத்துவம் கூட அவற்றை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டது.

பக்க விளைவுகள் –

சித்த மருத்துவத்தைப் பொருத்த மட்டில் பின்விளைவுகள் என்ற பயங்கரம் இல்லை. மற்ற மருத்துவத்தில் ஒரு நோய் குணமாவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தானது மற்றொரு நோயை தோற்றுவிக்கும் குணம் படைத்தது.(என்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு கற்பப்பை புற்று நோய்க்கான மருத்தும் செய்யப்பட்டது. அந்த மருத்துவத்தின் பக்க விளைவால் சில நாட்களில் வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி அவருக்கு வந்துவிட்டது.) ஒரு நோயை குணப்படுத்திய மருந்து மற்றொரு நோய்க்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் கொடுமை மற்ற மருத்துவங்களில் இருக்கிறது. ஆனால் முறையான சித்த வைத்தியத்தில் இல்லை.

பத்தியம் -

சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லாதது எத்துனை சிறப்போ அது போலவே பத்தியமும். சில நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பத்தியம் எனப்படுகின்ற உணவு கட்டுப்பாடு உண்டு. இதன் மூலம் தேவையில்லாத ஒவ்வாமைகளை தடுக்கின்றனர்.

இரசவாதம் –

சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். இரசவாதம் என்பது ஒருவகையான வேதியியல் முறை. எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயாரிக்கும். சொர்ணம் என்றதுமே சொக்கி போய்விடும் மனிதர்களில் பலர் இந்த சூட்சமம் அறிந்துகொள்ள மலைகளில் அலைந்து கொண்டும், கோடிக்கணக்கான பணங்களை ஆய்வுக் கூடங்களிலும் செலவு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்போது தான் இதைப் பற்றி கேள்விப் படுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான முறையில் செய்தால் நிச்சியம் தங்கம் கிடக்கும்.இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.இதைப் பற்றிய ஆய்வுகள் உலகமெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல்...

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

இப்படி செய்தால் தங்கம் கிடைக்குமா என ஐயப் படவேண்டாம். நிச்சியம் கிடைக்கும், ஆனால் அவர்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான் சொர்ண ரகசியம் பலிக்க வேண்டுமென்றால் சொர்ணத்தின் மீது உங்களுக்கு ஆசை இருக்க கூடாது. உங்களுக்கு தங்கத்தின் மீது ஆசையில்லையென்றால் இரசவாத முறைகளை தேடிப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதிர்ஸ்டகாரனாக இருக்கலாம்.

பஞ்ச பட்சி சாத்திரம் –

ஐந்து வகையான பறவைகளை கொண்டு எழுதப்பட்ட சாத்திரம் பஞ்ச பட்சி சாத்திரம். அந்த பறவைகள் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். பறவைகளுக்கும் மனிதனுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து இந்த சாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும்.அந்த ஐந்து செயல்களை ஊண், நடை, நித்திரை, அரசு, மரித்தல் என்பர். ஆனால் வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறி நடக்கும்.

நாடி சோதிடம்-

பஞ்ச பட்சி சாத்திரம் போல இதற்கு தனி முறைகள் காணப்படுகின்றன. இதனைப் பற்றியும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றியும் பின்பு விரிவாக காணலாம். நாடி சோதிடம் மற்றும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றிய பாடல்களை எழுதியவர் அகத்தியர்.

தியானம் மற்றும் யோகா –

முதலில் தியானத்திற்கும் யோகாவிற்குமான வேறுபாட்டினை புரிந்துகொள்ள வேண்டும். தியானம் என்பது மனதினைக் கட்டுபடுத்தக் கூடிய வகையில் ஓரிடத்தில் அமர்ந்தோ நின்றோ செய்யக் கூடிய அகம் சம்மந்தமான செயல்.ஒரு பொருளைப் பற்றி மட்டும் சிந்தித்தல் தியானம் என்கின்றனர்.பல வகையான தியான முறைகள் இன்றளவும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. சற்குருவின் தியான லிங்க அமைப்பை ஆன்மீக அறிவியலின் புதிய முறையாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.

யோகா என்பது அகத்துடன் புறத்தையும் இணைத்து சில படிநிலை ஆசனங்கள் மூலம் இறை நிலை அடைதல். தற்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், வேதாந்திர மகரிசி, நித்தியாநந்தர் போன்றோரும் யோகா வழிமுறைகளை கற்று தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வழிமுறைகளும் சித்தர்களின் வழிமுறைகளை சார்ந்தே உள்ளது.என்றாலும் அவைகளை அடிப்படியாக எடுத்துக்கொண்டு நடைமுறைக்கு தக்கவாறு மாற்றம் செய்துள்ளார்கள்.

பாஷானம் –

பாஷானம் என்பது விஷம். பாதரசம் முதலிய பாஷானங்களிருந்து மருந்து தயாரிப்பது, அதைக் கொண்டே சிலைகள் செய்வது போன்ற பெரும் கலைகளில் வல்லவர்கள் சித்தர்கள்.இந்த பாஷான சித்தர்களில் மிகப் புகழ் பெற்றவர் போகர். இவர் தான் பழனிமலையில் இருக்கும் நவபாஷானத்தினாலான தண்டபாணி முருகன் சிலையை செய்தவர்.

சித்தர்கள் வான் வழியே பறப்பவர்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி அவர்கள் பறப்பதற்கு பாதரசம் என்ற பாஷானத்திலிருந்து ஒருவகையான மணியை செய்து பறந்து செல்வார்கள் என ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த மணியின் பெயர் சூதவான் மணி.

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இந்த மணியைப் பற்றிய செய்தி இருக்கிறது.

கற்பக மூலிகைகள் -

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடல் -
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.

இவர்கள் இயற்றிய பல தமிழ் நூல்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், மருத்துவம் முதனான துறைகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றன.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.

மேலும் அற்புதங்களுக்கு -

1.துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்.

2.முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்.

3. http://snapjudge.wordpress.com/2008/04/29/ட்விட்டர்த்துவம்/#comment-12568.

4. விக்கிபீடியா

பி.கு –

அடுத்த சித்தமெல்லாம் சிவமயத்தில் அகத்திய மாமுனியின் அற்புதங்கள். காத்திருங்கள் அகத்தியரின் தரிசனத்திற்கு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sivan, Sivan Story, tamil old people, cetharkal, Sithairkal, Sithergal, Sithargal,mamuni, akatheyar,tamil medical, tamil Songs, tamil poems, 18 hindu guru, munevarkal, munigal

மர்மங்கள் தொடரும்...

திங்கள், 16 நவம்பர், 2009

ஆத்தா நானும் பாஸாயிட்டேன்



இது பட்டாம்பூச்சி வலைப்பூவின் வெற்றிகரமான நூறாவது இடுகை. அனைவருக்கும் நன்றி.

படத்தில் நூறு பூனைகளுடன் ஒரு எலியும் இருக்கிறது. அந்த எலியை கண்டுபிடிச்சுட்டா நீங்கதான் புலி



கண்டுபிடிக்காதவங்க கீழே போங்க. கண்டுபிடிச்சவங்க பேரை கருத்துரையில் பதிவு செஞ்சிடுங்க.















இது தான் அந்த எலி.

இலவச காமிக்ஸ் புத்தகங்கள்

மசாலா படம்




நகைச்சுவை படம்




கருத்துப்படம்



குழந்தை படம்



மசாலா படங்கள், நகைச்சுவை படங்கள், கருத்துப் படங்கள் என பல்வேறு படங்கள் இருந்தாலும் அந்தகாலம் முதல் இந்த காலம் வரை குழந்தைகள் படங்கள் என்றாலே எல்லோருக்கும் தனி ஆசைதான். ஆனால் குழந்தைகளுக்கு?. சந்தேகமே வேண்டாம் அவை காமிக்ஸ் புத்தகங்கள். இந்த இடுகை என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்காகவே.

புத்தக உலகின் ராஜ இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை புத்தகங்கள். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவை என்ன ஆனது என தெரியவில்லை. இப்போது இவற்றை தொகுத்து வழங்கும் பிரத்தியோக வலைப்பூக்கள் காணப்படுகின்றன.

வலைப்பூக்கள் என்றில்லை தின பத்திரிக்கைகளிலிலும் கார்டூன் படங்கள் வருகின்றன. நான்கே படங்களைப் போட்டு தினத்தந்தியை இன்று கின்னஸ்க்கு கூட்டிப்போகும் அளவிற்கு மாற்றியது கன்னித்தீவு படக்கதைதான். சிந்துபாத் கதையை பழைய தூர்தசனில் விடமல் பார்ப்பேன். ஆனால் கன்னி்த்தீவு முடியுமா என தலைமுறை. முடியவேண்டாம் என்றே மனம் விரும்புகிறது.

தலைமுறைகளை தாண்டி நிற்கும் ஹாலிவுட் படங்களான எஸ்.மேன், ஸ்பைடர் மேன், அயன் மேன், பேட் மேன் போன்றவை காமிக்ஸிலிருந்து திரைப்படமானவை. மார்வெல் நிறுவனமும் டிஸ்னி வேல்டும் உலக கதையில் முதலிடம் பிடித்து வெகு நாட்கள் ஆகின்றன. உயர்தரமான நாவல்களை கதையாக கொண்ட படங்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் குறையாமல் பல மில்லியன் கணக்கில் பணத்தினை குவித்ததவை இந்த படங்கள்.

இங்கு மோகன்லால், மமுட்டி போன்ற கதாநாயகர்கள் நடிக்கும் படத்தை விட சேச்சி படம் வசூல் சாதனை செய்கின்றது.குழந்தைகளுகான படம் என்ற பெயரில் பெரியவர்களுக்கான படங்களை தான் எடுக்கின்றார்கள்.இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும்.குழந்தைகளுக்கென பிரத்யோக தொலைக்காட்சிகள் வந்துவிட்டன என்றாலும், சில கதைகள் காதலை மையம் கொண்டு குழந்தைகளை கெடுக்கின்றன.ஆனாலும் டோராவும், புஜ்ஜியும் அதையெல்லாம் தாண்டி வெற்றிபெற்றிருக்கின்றன.

ரோடு சைடு ரோமியோ என்ற புதிய படத்தின் புத்தகமும், வேதாளரின் திறமையை சொல்லும் புத்தகமும், 007 ஜேம்ஸ்பாண்டு துப்பரியும் இரண்டு புத்தகங்களும் கணினி மென்நூல்வடிவில் கிடைத்தன. ஏகப்பட்ட காமிஸ் புத்தகங்கள் இணையத்தில் இருந்தாலும் இந்த நான்கும் தமிழ் புத்தகம்.

பல வலைதளங்கள் காமிக்ஸ் கதைகளை படங்களாக தருகின்றன. யாரெனும் புத்தகங்களாக மாற்றி இதுபோல் இட்டால் நன்றாக இருக்கும்.வருமானம் வரும் போது என்னால் முடிந்ததை உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு செய்வேன்.இப்போது பொறுப்பை வேறு யாராவது ஏற்றுக் கொள்ள வேண்டும். இருப்பினும் மென்நூல் புதையல்களை நானும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.தேடுதல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.நான் படித்து ரசித்த அந்த புத்தகங்களின் முகவரிகள் உங்களுக்கு.பதிவிரக்கம் செய்து படியுங்கள்.




ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் கடல்கன்னி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ரத்த காட்டேறி தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

வேதாளர் புகழ்சொல்லும் மந்திரக்கள்ளி மாயம் தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.

குட்டிநாயின் சாகசங்கள் நாய் ரோட் சைட் ரோமியோ தமிழ் புத்தகத்தினை பதிவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்குங்கள்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Greatest Ever Comics, comics book in pdf, Roadside Romeo Tamil Comics, Veethaalam-Mandhirak Kalli Maayam, Kadalkanni, and James Bond Raththak Kaatteri , famous tamil comics, picture story, free eBooks comics in Pdf format

இந்து மதத்தினை வளர்கக மதமாற்றம் அவசியமா

வாருங்கள் அன்பு தோழர்களே,

உலகமுழுவதும் இரண்டு பெரு மதங்கள் யானைகளைப் போல மோதிக் கொண்டிருக்கின்றன.ஒன்று மக்களுக்காக செத்துப்போன புண்ணிய ஏசுவின் கிறிஸ்துவ மதம், மற்றொன்று நபிகள் மூலம் வளர்ந்து இருக்கும் இஸ்லாம். ஒன்றையொன்று அழிக்கும் முயற்சியில் பல தீவிரவாத இயக்கங்களாக மாறி நாளைய உலகையே கேள்விக் குறியாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.எல்லா மதத்திற்கும் அடிப்படை அன்புதானே என்று யாராவது குறுக்கே சென்றால் அவர்கள் இரண்டுபுறமும் அடிவாங்கி சாக வேண்டியதான்.

மனிதனுடைய வளர்ச்சியினால் எப்படி மற்ற உயிரினங்கள் மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றனவோ அது போல இந்த இரண்டு மதங்களின் வளர்ச்சியினால் சிறிய மதங்கள் பல அழிந்து கொண்டுதான் இருக்கின்றன. நாளுக்கு நாள் இந்தியாவில் இருக்கும் இந்துகள்,சீக்கியர்கள்,ஜைனர்கள் குறைந்து கொண்டே போகின்றார்கள்.மதமாற்றத்திற்கு இந்த இரண்டு மதமும் கையாளுவது இரண்டு பெரிய உத்திகள்.

1. பணம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் தங்கள் மதத்திற்கு ஏழை மக்களையும், பேராசை பிடித்தவர்களையும் மாற்றம் செய்வது.

2. பணத்தினால் முடியாததை பயம் காட்டி சாதிப்பது.

இந்த இரண்டும் செய்ய முடியாததை கொலை செய்து சாதித்துக் கொண்டிருக்கின்றன அல்கொய்தா,ஹிஸ்புல்லா என்று மக்களுக்கு தெரிந்த மிக பிரபலமான தீவிரவாத இயக்கங்கள். இவர்கள் கடவுளுக்கு செய்கின்ற பணியாக இதனை கருதி கொண்டிருக்கின்றனர் என்பது வேறு விசயம்.

மதமாற்றத்தின் விளைவாக இவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.வெரும் மக்களுடைய எண்ணிக்கை. ஏசுவிற்கு காமாட்சி விளக்கு வைக்கும் கிறிஸ்துவர்கள்,கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொன்னாலும் மெக்கா போன்ற படங்களை மாட்டி பூ வைக்கும் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்து மதத்தின் தாக்கத்தினாலோ, இல்லை அவர்கள் உடலில் ஓடும் இந்து ரத்தத்தினாலோ இப்படி செய்கின்றாகள்.முழுமையான இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ வாழாமல் பெயருக்காக வாழும் இவர்கள் அந்தந்த மதங்களின் கொள்ளிக் கட்டைகள் என்பதை மறக்க வேண்டாம். இந்துக்களின் பல கடவுள்களோடு ஏசுவும் சேர்ந்து கொண்டார் என்பதை கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொண்டு சிரிப்பார்களா அல்லது அழுவார்களா என தெரியவில்லை.(ஏனென்றால் இந்து மதம் ஏசுவை சேர்த்துக் கொள்ள கூடாது என்று சொல்லாது.ஏசுவின் பெருமைகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தாய் மதம் அது).நாளையே அந்த லிஸ்டில் அல்லாவும் சேரலாம்.

மதமாற்றத்தின் மூலமாக அவர்கள் செய்வது மதத்தின் மீது நம்பிக்கையில்லாத ஒரு கூட்டத்தையும், மதநெறிகளை கடைபிடிக்க தெரியாத முட்டாள்களையும் தங்கள் மத அழிவிற்காக அழைத்து செல்வது மட்டுமே. பல இஸ்லாமிய பெரியோர்களின் கல்லறை இந்து மத பெரியோர்களின் மடத்திற்கு ஈடாக புகழ்பெற்று நிற்கின்றன. கடவுளோடு கலந்துவிட்ட மனிதர்களை இந்துக்கள் போல மதிக்க கற்றுக் கொண்டனர். மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒரு இஸ்லாமிய ஆலையத்தின் முன்பு தினமும் பூ விற்பனை ஜரூராக நடக்கின்றது.

கணபதி துணை, மாரியம்மன் துணை என காணப்படும் வாகணங்களில் ஏசுவே துணை வசனங்களும் அடிக்கடி தென்படுகின்றன. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற தமிழை கொலை செய்கின்ற வசனம் வேறு. கடவுளை உருவத்தினாலேயே அடக்கி கொள்ள இயலாது என்று சொல்லும் இஸ்லாமியர்களும் ஒரு எண்ணை வாகணங்களில் பொறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.

இப்படி புரியாத மனிதர்களை மதமாற்றம் செய்வதை விட நம்முடைய மதத்தில் இருக்கும் மதநெறிகள் புரியாதவர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பதே சிறந்தது.வெறும் பணத்திற்காகவும் சலுகைக்காகவும் மதம் மாறி போகின்ற மானம் கெட்டவர்கள், நாளை அந்த மதத்தினை அழிக்கும் கையாட்களாக மாறக் கூடும். இந்து மதம் வலுவடைய எண்ணிக்கை வேண்டாம். உண்மையான மதநெறி தெரிந்த மனிதர்களே போதும். இல்லையென்றால் இஸ்லாமியர்களும்,கிறிஸ்துவர்களும் செய்து கொண்டிருக்கும் பெருந் தவறை நாமும் செய்வது போல ஆகிவிடும்.

மதமாற்றம் மூலமாக இந்து மதத்தினை வளக்க வழியுண்டா.இருக்கலாம் என்றால் கருத்துகளை சொல்லுங்கள்.என்னுடைய தனிப்பட்ட கருத்து இது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.இருப்பினும் உயரிய காரணங்கள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

இந்துக்களுக்கு எதிரான மறைமுகப் போரில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதிரிகள் என்பதை மறவாதீர்கள்.இது விஷ விதையல்ல விழிப்புணர்வு.

பி.கு:-
என்னைப்போலவே மதமாற்றத்தினை வெறுக்கும் மக்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். இந்த கட்டூரையை படிக்கும் வேற்று மதத்தின நண்பர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Hindu, Muslim, christen, religion transaction, bad hobbit, how to serve Hindu, Hindu service, rss

சனி, 14 நவம்பர், 2009

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

வரலாற்றில் மன்னர்களைப் பற்றி வீரம் மிகுந்தவர்கள், ராஜதந்திர்கள், வள்ளல்கள் என ஓவராக மக்களுக்கு பொய் சொல்லிவிட்டு சில நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து விட்டனர். இதையெல்லாம் சேர்த்திருந்தால் வரலாறே பிடிக்கதே மக்கள் அதன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்திருப்பார்கள்.எப்போதுமே வெறும் ஆண்டுகளையும் அரசன் ஆண்ட பகுதிகளையும் மட்டுமே சொல்லி கொடுத்து நம்மை அலறவைக்கும் ஆசிரியர்கள் இதைப் படித்தாலாவது திருந்தட்டும்.

நாம் மன்னன் ஆண்ட ஆண்டு, அவருடைய சாதனை என்பதையெல்லாம் மறந்து ஜாலியாக ஒரு டூர் போவோம். மன்னரெல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல நம்மைப் போன்ற சாதாண மனிதர்கள் என்று நீங்கள் உணர்ந்து சமூக அறிவியல் புத்தகத்தினை தேடிப் போனால் அதுவே வெற்றி. வாருங்கள் பயணத்தினை ஆரமிப்போம்.


தைமூர் –:

தைமூர் இந்தப் பெயர் வரலாற்று ஆசிரியர்களிடையே மிகவும் பிரபலம். இந்தியாவிற்கு வந்து பலவித சேதங்களை ஏற்படுத்திய கொடூரன்.என்னத்தான் பெரிய ஆள் பயங்கர கொலைகாரன் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும்.அவன் செய்த ஒரு காரியம் நம்மை 23ம் புலிகேசிசியே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.அப்படி அவன் என்னதான் செய்தான்

டெல்லியை கைப்பற்ற வந்து அதையும் செய்தவனுக்கு ஒரு இந்திய விசயம் பிடித்துப் போனது.அது தான் யானை.பல இந்து அரசர்களிடம் யானைப் படை இருந்தது குறிப்பிடதக்கது.அதைப் பார்த்த அவன் சுமார் நூற்றி இருபது யானைகளை படைக்காக வரவழைத்தான்.டெல்லியையே கைப்பற்றியிருந்தாலும் அவன் தங்கியது அரண்மனைக்கு முன் டென்ட் அடித்து.(துரைக்கு அரண்மனையில தங்கனுமுன்னு கூட அறிவில்லை. அதுக்கு பின்னாடி பண்ணினார் பாரு ஒன்னு.)வந்திருந்த யானைகளை குளிப்பாட்டி மஞ்சள்,பச்சை,நீளம்,சிகப்பு என உடல் முழுக்க வண்ணம் பூசி கூடாரத்தை சுற்றி நிற்க வைத்தான்.(நினைச்சு பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது).


மாலிக் கபூர் –:

மன்னன் அலாவுதின் கில்ஜியை கொண்றுவிட்ட தளபதி மாலிக் கபூர். அலாவுதினின் மகனை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.அரண்மனை சிறையிலிருக்கும் இளவரசர் முபாரக் தான் அணிந்திருந்த ஆபரத்திலிருந்த வைரம் போன்ற விலையுயர்ந்த கற்களை அவர்களை நோக்கி வீச வந்தவர்கள் அதையெல்லாம் பொறுக்கிக் கொண்டு மாலிக் கபூரை கொன்றுவிட்டனர்.பல காலம் தளபதியாக இருந்து எல்லா காய்களையும் சரியாக நகர்த்தி ஆட்சிக்கு வந்த 36ம் நாளே மாண்டு போனான் மாலிக்.(ஒரே பீலிங்கா இருக்குதப்பா)

மாலிக் கபூர் ஒரு அலி (திருநங்கை) என்றாலும் அரசன் அலாவுதினின் மூன்றாவது மனைவியை அதற்குள் திருமணமும் செய்திருந்தான்.(என்ன கொடுமை சார் இது.ஆமா பஸ்ட் நைட்டுல என்ன பண்ணிருப்பாரு.)


முபாரக் –:

அவமானச்சின்னம் என்று முஸ்லீம்கள் கூறுவது இவனைதான்.அப்படி என்ன செய்தான் முபாரக்...

பெண்களெல்லாம் சலித்துப் போக இருதியில் குஸ்ரூகான் என்ற என்ற இளைஞனுடன் அந்தப்புறத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான். (ஓ இப்ப இதுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க) இவன் தான் முதல் ஓரினச் சேர்க்கை சுல்தான்.அந்தப்புறத்தில் இருந்த அழகிகலெல்லாம் சும்மா இவர்களின் கூத்தை பார்த்தபடி என்கிறது வரலாறு.(வெறென்ன செய்ய முடியும்).


துக்ளக் –:

ஜோக், நகைச்சுவை என்பது மட்டும் பிடிக்காது துக்ளக்கிற்கு. ஆனால் கோமாலித்தனம் என்றதுமே நினைவுக்கு வருகின்ற முதல் சுல்தான் இவர்தான். (துக்ளக் லக் இல்லாத மனுசன் போல) வரலாறு முழுக்க தேடிப்பார்த்தாலும் இவர் நடத்திய காமெடிகள் போல யாரும் செய்யவில்லை.( ஐயோ பாவம்)

சீன நாட்டினைப் பார்த்து பணத்தினை அச்சடித்தார். அவரை விட அறிவாளியான நம் மக்கள் கள்ள பணத்தினை அச்சடித்தார்கள்.(அப்பவேவா).அதன் பின்பு பணம் அச்சடிப்பதை சுல்தான் நிறுத்திவிட்டார்.டெல்லியிலிருந்து தேவகிரி என்ற ஊருக்கு தலை நகரை மாற்றினார்.பின்பு மீண்டும் டெல்லிக்கே போனார்.(அட போங்கப்பா)இப்படி ஒன்று செய்வதும் பின்பு அதையையே மாற்றி பழைய நிலைக்கே வருவதும் என காமெடி செய்து கொண்டிருந்தவர் செத்தும் ஒரு காமெடியே.... எப்படி தெரியுமா

மசாலா மீனை தின்றவர் அது ஒத்துக் கொள்ளாமல் போக நோயால் அவதிப்பட்டு இறந்துபோனார்.வீரமரணம், இயற்கை மரணம் என்ற இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இவர் இறந்த்து வியப்பு என்றாலும் இவரை மிஞ்சும் வகையில் இறந்த சுல்தான்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்(இதுக்கும் மேலையா).


குத்புதின் –:

நான்கு ஆண்டுகள் டெல்லியை ஆண்டவர் குத்புதின்.குதுப்மினாரை கட்டிய புண்ணியவான் என்றால் எல்லோருக்கும் தெரியலாம்.இதிலென்ன காமெடி இருக்கிறதென்றால் ஒருமுறை போலோ என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்த சுல்தான் குதிரையிலிருந்து இடறி விழுந்து செத்து போனார். எதிரிகளால் பழி தீர்க்கப்பட்டு மரணமடைந்தவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், நோயின் மூலம் இறந்தவர்கள் என பல மன்னர்களைப் பற்றி படித்திருந்தாலும் இப்படி கீழே விழுந்து செத்துப் போன மன்ன்ன் வரலாறும் இருக்கத்தான் செய்கின்றது.(இதுக்கு துக்ளக்கே தேவலாம்)


பாபர் –:

பாபர் என்ன தான் பெரிய முகலாய அரசனாக இருந்தாலும் இரவுகளில் திருப்தி அடையாத அவர் முதல் மனைவி அவரை விட்டு ஓடிவிட்டார்.ஆனால் அதனை பாபரை விட்டு விலகிவிட்டார் என்று மென்மையாக சொல்கின்றன வரலாற்று நூல்கள்.(அதான்னே பார்த்தேன், அரசர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை மறைப்பதே வேளையாகப் போய்விட்டது).


ஹூமாயூன் –:

மூட நம்பிகையின் மொத்த உருவம் இந்த மன்னர்.பாபரின் வாரிசு என்றாலும் எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப்பவர்.அதை கணிக்கும் திறமையும் இருந்த்தாக சொல்கின்றனர். எங்கு கிளம்பினாலும் வலது காலை முன் வைத்தே நடக்க கூடியவராக இருந்தார்.ஒரு அமைச்சா இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே வர, அவரை வெளியே அனுப்பி மீண்டும் வலது காலை முன்வைத்து வரச்சொல்லிய மகா அறிவாளி.

அவருடைய மரணம் கூட சற்று சோகமான காமெடி தான்.மந்திரியுடன் பேசிக் கொண்டு படிகளில் கீழிரங்கியவரின் காதுகளில் தொழுகைக்கான அழைப்புவிழ, உடனே திரும்ப முயன்று கால் இடறி மாடிப்படிகளில் உருண்டு கோமா நிலைக்கு போய் இறந்தார்.( ஐயோ பாவம்)


அக்பர் –:

முகலாய பெரும் சக்கிரவர்த்தி என்றே எல்லோறும் கூறினாலும் என் முகமதிய நண்பன் ஒருவன் அக்பர் முஸ்லிமே இல்லை என கூறுகிறான்.அந்த அளவிற்கு மற்ற மதங்களின் மீதும் மதிப்பு கொண்டிருந்தார் அக்பர்.

பீர்பாலைப் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை.அவருடைய கதைகளை நாடே அறியும்.ஆனால் பீர்பால் இல்லாமலே அக்பர் தனியாக ஒரு காமெடி செய்தார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.

அக்பருக்கு 54 வயதாகிவிட்டதே நினைவில் இல்லை.ஏதோ தன்னை இளைஞனாக நினைத்துக் கொண்டு ஒரு பௌணர்னமி இரவில் மானைப் பிடிக்க சென்றிருக்கிறார்.மான் கையில் மாட்டிக் கொண்டதும் அக்பருக்கு சந்தோசம்.மான் என்ன நினைத்த்தோ அவர் கைகளிலிருந்து திமிர அந்த மானின் கொம்பு பதம் பார்த்த்தோ அக்பரின் மர்ம உறுப்பில் இருக்கும் கொட்டைகளை.அந்த விபத்திருந்து மீண்டுவர அக்பருக்கு இரண்டு மாதம் ஆனதாம்.

சக்ரவர்த்தியின் பிரத்யோகமான அந்த காயத்திற்கு மருந்து போடும் பாக்கியம் எனக்கு கிடைத்து என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார் அப்துல் ஃபஸல்.(ஐயோ கருமம், கருமம்)

காமடிகள் மட்டுமல்ல “இந்துக்களிடையே இறந்தவருக்கு கூட குடி தண்ணீர் தருகின்ற பழக்கமிருக்கு, நீ ஒரு சிறந்த முஸ்லிம். உயிரோடு இருக்கும் தந்தைக்கு குடி தண்ணீர் தர மறுக்கலாமா” – ஷாஜகானான் ஔரங்கசிப்பிடம் அனுப்பிய கடிதம், முகமதியர்கள் அரண்மனையை கைப்பற்றியதும் தீக்குளித்து மாண்டு போன ராஜபுத்திர பெண்கள், கோயிலை காப்பாற்றுவதற்காக போராடி மாண்டு போன சாதாரண இந்து குடி மக்கள் போன்ற நெஞ்சத்தினை உருக்கும் கனமான சம்பவங்களும் உண்டு.

யாருக்காவது ஆங்கிலேயர்கள் செய்த காமெடிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள்.


நன்றி – :

வந்தார்கள் வென்றார்கள் விகடன் புத்தகம் – மதன் என்கின்ற மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார்.



ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக -:

King Muslim jokes, Jokes of kings, Akbar joke, death of Indian Famous kings, Real incidents of kings life, Baber joke, human jokes, Adult jokes, Child Joke, Old king joke, Sultan jokes

சிறுவர் கதைகள்

என்னத்தான் வயதானாலும் கதைகள் படிப்பதில் ஆர்வம் குறைவதே இல்லை. சிறுவர் மலர் படிக்கும் எத்தனையோ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.சிறுவயதில் வெள்ளியன்று வரும் புத்தகத்தினை அடுத்த வெள்ளி வரை படித்த அனுபவம் கூட எனக்கிருக்கிறது.

கதை தாகம் அடங்காமல் இன்று ஜெயகாந்தன் முதல் ராமகிருஷ்ணன் வரை படித்தாயிற்று. சில சிறுகதைகளையும் படைத்தாயிற்று. தொடருகின்ற பயணத்தில் ஒரு சின்ன திருப்பம் இது.

6ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

7ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய. இங்கு சொடுக்குங்கள்.

8ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

9ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

10ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி -1 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

11ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் பகுதி – 2 தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

12ஆம் வகுப்பு சிறுவர் கதைகள் தமிழில் இலவச மென்நூலாக பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tamil short Story, Story books downloading, free e books, free tamil story e books, school books in tamil, Tirumurai 1, Tirumurai 2, Kathai Kovai, Araneri Kathaikal, Siruvar Kathaikal

வலைப்பூக்களின் முகவரிகள்

பலவகையான தமிழ் வலைப்பூக்களின் முகவரியோடு சிறு அறிமுகம்.அதென்ன பதினெட்டு என்பவர்களுக்கு மகாபாரதம் நடந்தது 18 நாட்கள் என நினைவுகூறுகறேன்.அவ்வளவுதான்.

1. இந்துக்களின் முதன்மையான வலைப்பூவாக தன்னை நிறுத்திக் கொள்ளும் வலைப்பூ தமிழ்இந்து www.tamilhindu.com/

2. கடவுள் முதல் கவிதை வரை ஒரு வலைப்பூ எல்லாம் இருக்கும் வரை ellaam-irukkum-varai.blogspot.com/

3. திரைப்படங்கள் பற்றிய விளக்கமான பார்வையுள்ள வலைப்பூ கேபில் சங்கர் cablesankar.blogspot.com/

4. வா வாத்தியாரே ஊட்டாண்ட என அன்போடு அழைக்கும் நகைச்சுவை வலைப்பூ ஜாம் பஜார் ஜக்கு jambazarjaggu.blogspot.com/

5. சினிமா முதல் செய்தி வரை விமர்சனம் செய்யும் வலைப்பூ பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் jackiesekar.blogspot.com/

6. நீங்கள் புகைப்படங்களின் காதலன் என்றால் இது உங்களுக்கான வலைப்பூ pukaippadangal.blogspot.com/

7. 50% ஜாலி 50% லொள்ளு என நகைச்சுவையில் கலக்கும் வலைப்பூ இட்லிவடை idlyvadai.blogspot.com/

8. எனக்கு வள்ளலாரும் பெரியாரும் ஒன்றுதான் என நம்முடைய கருத்தை ஒத்துப்போகும் கோவி.கண்ணனின் வலைப்பூ காலம் govikannan.blogspot.com/

9. ஜென் கதைகள், இன்று ஒரு தகவல்,தெரியுமா உங்களுக்கு என பலவற்றின் கலவை வலைப்பூ மேலிருப்பான் padmahari.wordpress.com/

10. நகைச்சுவை மட்டுமல்ல சிறந்த இடுகளைகளையும் கையில் வைத்திருக்கும் வலைப்பூ லொடு்க்குபாண்டி lodukkupandi.blogspot.com

11. ஜோதிடத்தினைப் பற்றி அதை அறிந்தவர் கற்றுதரும் வலைப்பூ வகுப்பு அறை classroom2007.blogspot.com/

12. கண்ணதாசன் கவிதையால் கவலைகள் இல்லாமல் போனேன் என்று தன்னை அறிமுகம் செய்யும் மனிதரின் பல்சுவை வலைப்பூ devakottai.blogspot.com/

இவருடைய புகைப்படங்களுக்கு நான் பெரும் ரசிகன்.

13. நகைச்சுவைக்கான ஒரு தனி வலைப்பூ சிரிப்பு வருது orecomedythaan.blogspot.com/

14. உங்களில் யாருக்காவது முஸ்லிம் மதம் பற்றியோ அல்லது அவர்களின் நடவெடிக்கைகள் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கு சரியான விளக்கம் அளிக்கும் வலைப்பூ தமிழ் முஸ்லிம் tamilmuslim.wordpress.com/


15. பலவிதமான கணினி உபயோக குறிப்புகள் மற்றும் இணையதள முகவரிக்கான வலைதளம் இராஜகை ராபர்ட் denaldrobert.blogspot.com/

16. தமிழ் வலைப்பூக்களை வகை படுத்தி வைத்திருக்கும் வலைப்பூ தொகுப்பான் தமிழிஸ் www.tamilish.com

17. நாத்திகத்தின் தலைவன் பெரியாரின் கருத்துகளை தொகுத்து தரும் வலைப்பூ தமிழ்ஓவியா thamizhoviya.blogspot.com/

18. காமிக்ஸ்,வெளிநாட்டு கார்டூன்,சிறந்த படங்கள் கொண்ட வலைப்பூ அழகிய படங்களுடன் கூடியது www.neerottam.com/artpost


தமிழ் இந்து, தமிழ் முஸ்லிம் என நம் மொழியை மதத்துடன் இணைத்து வன்மம் இல்லாமல் தங்கள் தரப்பு ஞாயங்களையும், சாதனைகளையும் பட்டியல் போடும் தளங்களைப் போல மற்ற தளங்களும் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Tamil website links, use full websites, tamil Hindu website, tamil Muslim website, Comics website, religion websites, joke website, Computer link websites, Short Story website, Jen Story website, Jagadeeswaran’s website list, best list of different sites