* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,
- ஜெகதீஸ்வரன்.
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 26 ஜூன், 2010
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு - வாலியின் கவிதை
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !
- கவிஞர் வாலி
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !
- கவிஞர் வாலி
வியாழன், 16 ஏப்ரல், 2009
தமிழ்தாயின் நிலை என்ன?
என்ன நண்பர்களே இன்னும் எத்தனை நாட்கள்தான் ராஜேஸ்குமார்,பட்டுக்கோட்டை நாவல்களையே படித்துக் கொண்டிருப்பீர்கள்.குழந்தையாக இருந்துகொண்டே இருக்கலாமா?.எப்போது பெரியவர்களாகப் போகின்றீர்கள்?.என்ன யோசனை?.கட்டூரையை மேலும் தொடரலாமா வேண்டாமா என்றா சந்தேகமே வேண்டாம்.இந்தக் கட்டூரை உங்களின் வாழ்க்கையை மாற்றிப் போடலாம்.தொடருங்கள்.
என்னுடைய கல்லூரி நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை.சிலருக்கு தமிழை வாசிக்கவும் தெரியவில்லை.தமிழன் என்ற பின்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயனாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.அப்படியானால் தமிழ் நிலை என்ன?பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச்சாகுமா?.அந்த நிலைக்கு நாம் தமிழை விடலாமா?.மாற்றானின் தாய்க்கு பணிவிடைகள் செய்துகொண்டு நம்தாயை தெருவில் அனாதையாக விட்டுவிடலாமா?கூடாது,கண்டிப்பாக கூடாது.
நாயன்மார்களும்,ஆழ்வார்களும்,சித்தர்களும் வெறும் சமயத்தினை மட்டும் வளத்தார்கள் என்று சொன்னால் அது நம்முடைய அறியாமை.அவர்கள் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்கள்.அவர்களை போல தமிழை நாம் நேசிக்க வேண்டும்.இன்று வலைதளங்களில் என்னற்ற பெரும் மனிதர்கள் தங்களின் சிந்தனைகளை பதித்து வருகின்றனர்.இது போற்றதக்கது.வலைகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றி திரியும் நண்பராக இருந்தால் உங்களால் முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக் கொள்ளுங்கள்.
சித்த புருசர்களின் பாடல்கள் சிவநாமத்தை மறைமுகமாகவே உணர்த்துகின்றன.அவர்களின் விருப்பமெல்லாம் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதுதான்.எளிமையான பாடல்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.தமிழை தமிழர்களே புறக்கனிக்க காரணம் தமிழ் மொழியால் வேலை கிடைக்காதுதான் என்கின்றனர் என் நண்பர்கள்.வெறும் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?தமிழ் பேசவும்,எழுதவும் தெரியாதவன் தமிழாக பிறந்து என்ன பயன்?ஒரு முறை காந்தியடிகள் திருக்குறளின் பெருமைமிக்க குறள்களின் பொருளை அறிந்து கொள்ள தான் தமிழனாக பிறக்கவில்லை என வருத்தப்பட்டாராம்.தமிழனாக பிறந்த நாம் திருக்குறளை படிக்க விருப்பம் கொள்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை.
தமிழ் மொழி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை உண்டானால்தான்.தமிழை அழிவுப்பாதையிலிருந்து மீட்க முடியும் இல்லையென்றான்றால்....எப்படி சொல்ல...தமிழ் இனி மெல்ல சாகுமென....
வாருங்கள் கை கொடுங்கள் தமிழ் வளர்ப்போம்,தமிழனென பெருமை கொள்வோம்.
பிகு-கணிப்பொறி சம்மந்தப்பட்ட செய்திகளை தமிழில் பதிக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால் எண்ணங்களை செயல்படுத்த சற்று காலம் காத்திருக்க வேண்டும்.
என்னுடைய கல்லூரி நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை.சிலருக்கு தமிழை வாசிக்கவும் தெரியவில்லை.தமிழன் என்ற பின்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயனாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.அப்படியானால் தமிழ் நிலை என்ன?பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச்சாகுமா?.அந்த நிலைக்கு நாம் தமிழை விடலாமா?.மாற்றானின் தாய்க்கு பணிவிடைகள் செய்துகொண்டு நம்தாயை தெருவில் அனாதையாக விட்டுவிடலாமா?கூடாது,கண்டிப்பாக கூடாது.
நாயன்மார்களும்,ஆழ்வார்களும்,சித்தர்களும் வெறும் சமயத்தினை மட்டும் வளத்தார்கள் என்று சொன்னால் அது நம்முடைய அறியாமை.அவர்கள் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்கள்.அவர்களை போல தமிழை நாம் நேசிக்க வேண்டும்.இன்று வலைதளங்களில் என்னற்ற பெரும் மனிதர்கள் தங்களின் சிந்தனைகளை பதித்து வருகின்றனர்.இது போற்றதக்கது.வலைகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றி திரியும் நண்பராக இருந்தால் உங்களால் முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக் கொள்ளுங்கள்.
சித்த புருசர்களின் பாடல்கள் சிவநாமத்தை மறைமுகமாகவே உணர்த்துகின்றன.அவர்களின் விருப்பமெல்லாம் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதுதான்.எளிமையான பாடல்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.தமிழை தமிழர்களே புறக்கனிக்க காரணம் தமிழ் மொழியால் வேலை கிடைக்காதுதான் என்கின்றனர் என் நண்பர்கள்.வெறும் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?தமிழ் பேசவும்,எழுதவும் தெரியாதவன் தமிழாக பிறந்து என்ன பயன்?ஒரு முறை காந்தியடிகள் திருக்குறளின் பெருமைமிக்க குறள்களின் பொருளை அறிந்து கொள்ள தான் தமிழனாக பிறக்கவில்லை என வருத்தப்பட்டாராம்.தமிழனாக பிறந்த நாம் திருக்குறளை படிக்க விருப்பம் கொள்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை.
தமிழ் மொழி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை உண்டானால்தான்.தமிழை அழிவுப்பாதையிலிருந்து மீட்க முடியும் இல்லையென்றான்றால்....எப்படி சொல்ல...தமிழ் இனி மெல்ல சாகுமென....
வாருங்கள் கை கொடுங்கள் தமிழ் வளர்ப்போம்,தமிழனென பெருமை கொள்வோம்.
பிகு-கணிப்பொறி சம்மந்தப்பட்ட செய்திகளை தமிழில் பதிக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால் எண்ணங்களை செயல்படுத்த சற்று காலம் காத்திருக்க வேண்டும்.
வெள்ளி, 20 மார்ச், 2009
தமிழ் எண்கள்
நம்மில் பலருக்கு தமிழில் எழுத்துகள் இருப்பதைப் போல எண்களும் இருக்கின்றன என்பது தெரியாது.நாம் ஆங்கிலத்தின் பிடியில் சிக்கி நாட்கள் பல ஆகின்றன.சென்றதைப் பற்றி பேசுவதில் பலன் இல்லை என நினைப்பவன் நான்.இதுவரை அறியாததை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா.உங்களின் உதவிக்காக இந்த இடுகை.
நம்முடைய தமிழைப் பொருத்த வரை சுழிக்கென (பூஜ்ஜியத்திற்கென) தனியாக எண் இல்லை.அதற்கு பதிலாக 10,100 மற்றும் 1000க்கென தனியான எண்கள் உள்ளன.தமிழுடைய எண்களும் அதனுடைய எழுத்துக்களைப் போலவே இருக்கின்றன.சில எண்கள் தமிழ் எழுத்துகளின் பின்பமாக இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக 3782 என்பதை எடுத்துக் கொள்வோம்.இதை ௩௭௮௨ என்று நவீன முறைப்படியெல்லாம் எழுத முடியாது.அதற்கு பதிலாக ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨ என்று எழுதுவது சாலச் சிறந்தது.படிக்கும் போது எப்போதும் போல மூன்றாயிரத்து எழுநூற்றி என்பத்தி இரண்டு என படிக்கலாம்.
கீழே இருக்கும் பட்டியல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இதை படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்,பயண்பாட்டிற்கும் கொண்டு வாருங்கள்.
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
நம்முடைய தமிழைப் பொருத்த வரை சுழிக்கென (பூஜ்ஜியத்திற்கென) தனியாக எண் இல்லை.அதற்கு பதிலாக 10,100 மற்றும் 1000க்கென தனியான எண்கள் உள்ளன.தமிழுடைய எண்களும் அதனுடைய எழுத்துக்களைப் போலவே இருக்கின்றன.சில எண்கள் தமிழ் எழுத்துகளின் பின்பமாக இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக 3782 என்பதை எடுத்துக் கொள்வோம்.இதை ௩௭௮௨ என்று நவீன முறைப்படியெல்லாம் எழுத முடியாது.அதற்கு பதிலாக ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨ என்று எழுதுவது சாலச் சிறந்தது.படிக்கும் போது எப்போதும் போல மூன்றாயிரத்து எழுநூற்றி என்பத்தி இரண்டு என படிக்கலாம்.
கீழே இருக்கும் பட்டியல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இதை படிப்பதோடு நிறுத்திவிடாதீர்கள்,பயண்பாட்டிற்கும் கொண்டு வாருங்கள்.
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)