2. காதலற்ற பெட்டகம்
உள்ளம் உருக்கி, உயிர் உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர்சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
* * * * * *
பட்டுவிரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்,
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!
* * * * * * *
கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழிநடந்தேன்!-காதல் திருவுருவம்!
ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனியிரண்டு தெரிய இருக்கு மெழில்
மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ, நான்தான்.
வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்து சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம்.
மாதுளமும் அங்கு வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,
- ஜெகதீஸ்வரன்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2009
காதல் நினைவுகள்- 1
1. ஆடுகின்றாள்
கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்--கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.
விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.
சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்--வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.
செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்--பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.
கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்--தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.
இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்--உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.
கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்--கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.
விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.
சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்--வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.
செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்--பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.
கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்--தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.
இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்--உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.
இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?
இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?
நான் விவசாய குடும்பத்தை சார்ந்தவன்.என்னுடைய அப்பா ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.தற்போது விவசாயத்தை செய்து வருகின்றார்.விவசாயத்தை லாபகரமான தொழில் என கூறமுடியாது.எத்தனையோ பேர் விவசாயம் வேண்டாம் ஒரு கடை வைத்து நடத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர்.நான் கூட இன்டர்நெட் சென்டர் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.
எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டார்.காரணம் கேட்டதற்கு இது தான் தனக்கு திருப்தியாக இருப்பதார் கூறினார்.அதிலிருந்து எனக்கும் விவசாயத்தின் மீது அதிக பற்று ஏற்பட்டுவிட்டது.
சென்ற மகா சிவராத்திரிக்கு வைரசெட்டிபாளையத்திற்கு சென்றோம்.இரவை பெரியசாமி கோவிலில் கழித்துவிட்டு மறுநாள் காலை கொல்லிமலையிலுள்ள ஆழுக்கு சென்றோம்.அங்கு வழி நெடுகிலும் சீரக சம்பா என்னும் நெல் விளைந்திருந்தது.இது அருவடைக் காலம் என்பதால் அனைவரின் வயலிலும் ஒரு எந்திரம் அருவடை செய்து கொண்டிருந்தது.நான் முன்பே இதைப் போன்றதைப் பார்த்திருக்கின்றேன்.ஆனால் இப்படி ஐந்தாறு வண்டிகள் வேலை செய்வதைப் பார்த்ததில்லை.ஆர்வம் கொண்டு விசாரித்தால் அங்கு பயிரிட்டிருந்த்தெல்லாம் பெரு விவசாயிகள்.இன்றைய ஆள் பற்றாக்குறைகளை சரிசெய்ய இதுபோல் இயந்திரங்கள் மட்டுமே மாற்றுவழி என்பது ஒரு மறுக்க முடியாத செய்தி.
பெரு விவசாயிகளால் மட்டுமே இந்த இயந்திரங்களை பயண்படுத்த இயலும் காரணம் பொருளாதாரம்.சிறுவிவசாயிகள் இந்த இயந்திரத்திற்கு கொடுக்கும் விலையில் பாதியைக்கூட மீட்க முடியாது.இந்தியாவில் சிறுவிவசாயிகள் அதிகம்.ஆள் பற்றாக்குறை,லாபகரமாக இயங்காத விவசாயம்,நாளுக்கு நாள் ஏறிப்போகும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை என பல தொல்லைகள் இருந்தால்,அதற்கு மேல் வந்து நிற்கின்றது அரசாங்கத்திடம் வாங்கிய கடன்.
பெரு விவசாயிகளால் மட்டும் பயண்படுத்த முடிகின்ற இயந்திரங்களை சிறு விவசாயிகள் பயன்படுத்த ஒற்றுமை ஒன்று மட்டும் போதும்.எப்படி என்று கேட்கிரீகளா.பதில் மிகவும் சுலபமானது.இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் ஒன்றாக இனைய வேண்டும்.இதனால் சிதறிக் கிடக்கின்ற பூமியானது ஒன்றுபடும்.ஐம்பது நூறு என மொத்தமாக இருக்கும் நிலத்தில் பாகுபாடில்லாமல் அனைவரும உழைக்க வேண்டும்.ஒரே நிர்வாக்த்தின் கீழிருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும்.இயந்திரங்களை பயண்படுத்துவது எளிதாகவும்,முறையாகவும் போய்விடும்.அதைவிட சிறு விவசாயிகள் பொருட்களை அழகாக ஏற்றுமதியும் செய்ய முடியும்.
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும்.உலகின் முதல் தொழிலை மரியாதை செய்து காக்கவில்லையென்றால் நம்முடைய நிலை என்னவாகுமென கணிக்க முடியாது.
நான் விவசாய குடும்பத்தை சார்ந்தவன்.என்னுடைய அப்பா ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.தற்போது விவசாயத்தை செய்து வருகின்றார்.விவசாயத்தை லாபகரமான தொழில் என கூறமுடியாது.எத்தனையோ பேர் விவசாயம் வேண்டாம் ஒரு கடை வைத்து நடத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர்.நான் கூட இன்டர்நெட் சென்டர் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.
எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டார்.காரணம் கேட்டதற்கு இது தான் தனக்கு திருப்தியாக இருப்பதார் கூறினார்.அதிலிருந்து எனக்கும் விவசாயத்தின் மீது அதிக பற்று ஏற்பட்டுவிட்டது.
சென்ற மகா சிவராத்திரிக்கு வைரசெட்டிபாளையத்திற்கு சென்றோம்.இரவை பெரியசாமி கோவிலில் கழித்துவிட்டு மறுநாள் காலை கொல்லிமலையிலுள்ள ஆழுக்கு சென்றோம்.அங்கு வழி நெடுகிலும் சீரக சம்பா என்னும் நெல் விளைந்திருந்தது.இது அருவடைக் காலம் என்பதால் அனைவரின் வயலிலும் ஒரு எந்திரம் அருவடை செய்து கொண்டிருந்தது.நான் முன்பே இதைப் போன்றதைப் பார்த்திருக்கின்றேன்.ஆனால் இப்படி ஐந்தாறு வண்டிகள் வேலை செய்வதைப் பார்த்ததில்லை.ஆர்வம் கொண்டு விசாரித்தால் அங்கு பயிரிட்டிருந்த்தெல்லாம் பெரு விவசாயிகள்.இன்றைய ஆள் பற்றாக்குறைகளை சரிசெய்ய இதுபோல் இயந்திரங்கள் மட்டுமே மாற்றுவழி என்பது ஒரு மறுக்க முடியாத செய்தி.
பெரு விவசாயிகளால் மட்டுமே இந்த இயந்திரங்களை பயண்படுத்த இயலும் காரணம் பொருளாதாரம்.சிறுவிவசாயிகள் இந்த இயந்திரத்திற்கு கொடுக்கும் விலையில் பாதியைக்கூட மீட்க முடியாது.இந்தியாவில் சிறுவிவசாயிகள் அதிகம்.ஆள் பற்றாக்குறை,லாபகரமாக இயங்காத விவசாயம்,நாளுக்கு நாள் ஏறிப்போகும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை என பல தொல்லைகள் இருந்தால்,அதற்கு மேல் வந்து நிற்கின்றது அரசாங்கத்திடம் வாங்கிய கடன்.
பெரு விவசாயிகளால் மட்டும் பயண்படுத்த முடிகின்ற இயந்திரங்களை சிறு விவசாயிகள் பயன்படுத்த ஒற்றுமை ஒன்று மட்டும் போதும்.எப்படி என்று கேட்கிரீகளா.பதில் மிகவும் சுலபமானது.இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் ஒன்றாக இனைய வேண்டும்.இதனால் சிதறிக் கிடக்கின்ற பூமியானது ஒன்றுபடும்.ஐம்பது நூறு என மொத்தமாக இருக்கும் நிலத்தில் பாகுபாடில்லாமல் அனைவரும உழைக்க வேண்டும்.ஒரே நிர்வாக்த்தின் கீழிருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும்.இயந்திரங்களை பயண்படுத்துவது எளிதாகவும்,முறையாகவும் போய்விடும்.அதைவிட சிறு விவசாயிகள் பொருட்களை அழகாக ஏற்றுமதியும் செய்ய முடியும்.
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும்.உலகின் முதல் தொழிலை மரியாதை செய்து காக்கவில்லையென்றால் நம்முடைய நிலை என்னவாகுமென கணிக்க முடியாது.
சனி, 4 ஏப்ரல், 2009
மல்லதாசனின் மகிமை
சிவராத்திரி கதைகள்
மல்லதாசனின் மகிமை
மல்லதாசன் என்றோரு சிவனடியார்.தினமும் சிவனுக்கு பூஜை செய்து கும்பிடாமல் சாப்பிடமாட்டார்.ஒரு நாள் வியாபார விஷயமாக மைத்துனரை அழைத்துக் கொண்டப வெளியூர் சென்றார்.அன்று சிவராத்திரி.பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டார் என்பது மைத்துனனுக்கு தெரியும்.இரவு ஆனது.அவனுக்கு அகோரப் பசி.தானியம் அளக்க உதவும் படி ஒன்றை எடுத்துச் சென்று ஒரு புதரில் கவிழ்த்து வைத்துவிட்டு வந்தான்.மாமா அங்கே ஒரு புதரில் சிவலிங்கம் இருக்கிறது.தரிசனம் செய்து வரலாமா என்று அழைத்தான்.
அவரும் ஆனந்தமாக கிளம்பினார்.இருட்டில் படியை வலம் வந்து வணங்கிவிட்டு திரும்பினார்.திருப்தியுடன் சாப்பிட்டார்.வயிறு முட்ட சாப்பிட்ட மைத்துனன், ஐயோ மாமா நான் சும்மா கவிழ்த்து வைத்த படியை சிவலிங்கம் என்று நினைத்து விழுந்து வணங்கினீர்கள்.நன்றாக ஏமாந்து விட்டீர்கள் என கிண்டல் செய்தான்.
மூடனே நான் வணங்கியது சிவலிங்கத்தை தான் என்றார் மல்லதாசன்.கடகடவெனச் சிரித்த மைத்துனன்,சரி வாருங்கள் யார் சொல்வது சரியென பார்த்துவருவோம் என்று கிளம்பினான்.அங்கு சென்று பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதரே ஆலமரமாகவும் அதனுள் அவன் கவிழ்த்து வைத்த படியே அழகிய சிவலிங்கமாகவும் காட்சியளித்தது.பிரம்மித்துப் போனான்.
உண்மையான அடியவர்களுக்கு சிவபெருமான் எந்த பொருளிலும் காட்சி கொடுப்பார்.இனி இப்படி விளையாடாதே என்றார் மல்லதாசன்.
அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் மைத்துனன்.
மல்லதாசனின் மகிமை
மல்லதாசன் என்றோரு சிவனடியார்.தினமும் சிவனுக்கு பூஜை செய்து கும்பிடாமல் சாப்பிடமாட்டார்.ஒரு நாள் வியாபார விஷயமாக மைத்துனரை அழைத்துக் கொண்டப வெளியூர் சென்றார்.அன்று சிவராத்திரி.பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டார் என்பது மைத்துனனுக்கு தெரியும்.இரவு ஆனது.அவனுக்கு அகோரப் பசி.தானியம் அளக்க உதவும் படி ஒன்றை எடுத்துச் சென்று ஒரு புதரில் கவிழ்த்து வைத்துவிட்டு வந்தான்.மாமா அங்கே ஒரு புதரில் சிவலிங்கம் இருக்கிறது.தரிசனம் செய்து வரலாமா என்று அழைத்தான்.
அவரும் ஆனந்தமாக கிளம்பினார்.இருட்டில் படியை வலம் வந்து வணங்கிவிட்டு திரும்பினார்.திருப்தியுடன் சாப்பிட்டார்.வயிறு முட்ட சாப்பிட்ட மைத்துனன், ஐயோ மாமா நான் சும்மா கவிழ்த்து வைத்த படியை சிவலிங்கம் என்று நினைத்து விழுந்து வணங்கினீர்கள்.நன்றாக ஏமாந்து விட்டீர்கள் என கிண்டல் செய்தான்.
மூடனே நான் வணங்கியது சிவலிங்கத்தை தான் என்றார் மல்லதாசன்.கடகடவெனச் சிரித்த மைத்துனன்,சரி வாருங்கள் யார் சொல்வது சரியென பார்த்துவருவோம் என்று கிளம்பினான்.அங்கு சென்று பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதரே ஆலமரமாகவும் அதனுள் அவன் கவிழ்த்து வைத்த படியே அழகிய சிவலிங்கமாகவும் காட்சியளித்தது.பிரம்மித்துப் போனான்.
உண்மையான அடியவர்களுக்கு சிவபெருமான் எந்த பொருளிலும் காட்சி கொடுப்பார்.இனி இப்படி விளையாடாதே என்றார் மல்லதாசன்.
அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் மைத்துனன்.
புதன், 1 ஏப்ரல், 2009
விநாயகரின் திருவுருவங்களும் என் சிந்தனையும்
அன்பானவர்களே,
மிக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுதாங்கனின் வலைதளத்தில் விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்? என்ற கட்டூரையைப் படித்தேன்.மிகவும் எளிமையான எழுத்துகளில் விநாயகனின் வடிவங்களைப் பற்றி எழுதியிருந்தார்.அதைப்படித்து வியப்படைந்தேன்.மேலும் சில சிந்தனைகள் மனதினுள் எழுந்தது,அதன் விளைவே இந்தக் கட்டூரை.
விநாயகனின் ஐந்து கைகளுக்கு விளக்கமாக பஞ்ச பூதங்களின் சக்தியையும்.அவற்றின் செயல்களாக ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கும், ஒரு கை பெற்றோர்களுக்கும்,இரு கைகள் நம்மைக் காக்கவும் என்று கச்சியப்ப முனிவர் கூறியதை முன்வைக்கின்றார். விநாயகனுக்கு எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் அதன் பிறகு விரிவாகச் சொல்லுகிறார்.

முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:
1.ஸ்ரீபால விநாயகர்
2.ஸ்ரீ தருண விநாயகர்
3.ஸ்ரீ பக்தி விநாயகர்
4.ஸ்ரீ வீர விநாயகர்
5.ஸ்ரீ சக்தி விநாயகர்
6.ஸ்ரீ துவிஜ விநாயகர்
7.ஸ்ரீ சித்தி விநாயகர்
8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்
10.ஸ்ரீ விக்ன விநாயகர்
11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்
12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்
13.ஸ்ரீ மகர விநாயகர்
14.ஸ்ரீ விஜய விநாயகர்
15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்
16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்
17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்
18.ஸ்ரீ வரத விநாயகர்
19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்
20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்
21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்
22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்
23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்
24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்
25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்
26,ஸ்ரீ துண்டி விநாயகர்
27.ஸ்ரீ இருமுக விநாயகர்
28.ஸ்ரீ திரிமுக விநாயகர்
29.ஸ்ரீ சிங்க விநாயகர்
30.ஸ்ரீ யோக விநாயகர்
31.ஸ்ரீ துர்க்கா கணபதி
32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்
முப்பத்தியிரண்டு திருவுருவங்களின் பெயர்களை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.அவருடைய கட்டூரையில் இந்த திருவுருவங்களின் அமைப்புகளையும் கூறியிருக்கிறார்.அவருடைய கட்டூரையை படிக்க விரும்புகிறவர்கள் http://sudhanganin.blogspot.com/2008/09/blog-post.html க்கு சென்று படியுங்கள்.
என்னுடைய ஆச்சிரியம் என்னவென்றால் விநாயகர் என்னுடைய இஷ்ட தெய்வம்.அப்படியிருக்கும் போது அவருடைய அவதாரங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதுக் கூட இல்லை.இந்த இஷ்டதெய்வ வழிபாடு இந்து மதத்தில் இருக்கும் சிறப்புகளில் ஒன்று.தங்களுக்கு பிடித்த தெய்வத்தை வழிபட இந்து மதம் அனுமதி தருகின்றது.இது போன்ற சுகந்திரங்கள் தான் இந்து மதத்தினை பல காலம் அழியாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிற்றிதல்கள் என எல்லா ஊடகங்களிலும் ராமாயணமும்,மகாபாரதமும் மட்டுமே இடம் பிடிக்கின்றன.மற்ற கதைகளையோ,புராணங்களையோ அவைகள் மறந்து விடுகின்றன.சொன்ன கதைகளையே அவர்கள் சொல்வதும் அதையும் நாம் சலிக்காமல் மீண்டும் மீண்டும் படிப்பதும்,பார்ப்பதுமே வாடிக்கையாகிவிட்டது.இந்த அவலம் கண்டிப்பாக மாற வேண்டும்.அதற்கான சில முயற்சிகளை நானும் எடுக்கிறேன்.எந்த மாற்றமானாலும் அதை நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
கதைகளைத் தேடுவோம் கொட்டிக் கிடக்கும் புதையல்களிலிருந்து ராமாயணம்,மகாபாரதம் என்னும் இரண்டு முத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமா.மாணிக்கங்களையும்,வைரங்களையும் விட்டு சென்று விட முடியுமா.கொஞ்ச காலம் ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மறப்போம்.அப்போது தான் புதிய கதைகள் கிடைக்கும்.வாருங்கள் அன்பானவர்களே நம் தேடுதல் வேட்டையை இன்றையிலிருந்து தொடங்குவோம்.
மிக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுதாங்கனின் வலைதளத்தில் விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்? என்ற கட்டூரையைப் படித்தேன்.மிகவும் எளிமையான எழுத்துகளில் விநாயகனின் வடிவங்களைப் பற்றி எழுதியிருந்தார்.அதைப்படித்து வியப்படைந்தேன்.மேலும் சில சிந்தனைகள் மனதினுள் எழுந்தது,அதன் விளைவே இந்தக் கட்டூரை.
விநாயகனின் ஐந்து கைகளுக்கு விளக்கமாக பஞ்ச பூதங்களின் சக்தியையும்.அவற்றின் செயல்களாக ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கும், ஒரு கை பெற்றோர்களுக்கும்,இரு கைகள் நம்மைக் காக்கவும் என்று கச்சியப்ப முனிவர் கூறியதை முன்வைக்கின்றார். விநாயகனுக்கு எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் அதன் பிறகு விரிவாகச் சொல்லுகிறார்.

முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:
1.ஸ்ரீபால விநாயகர்
2.ஸ்ரீ தருண விநாயகர்
3.ஸ்ரீ பக்தி விநாயகர்
4.ஸ்ரீ வீர விநாயகர்
5.ஸ்ரீ சக்தி விநாயகர்
6.ஸ்ரீ துவிஜ விநாயகர்
7.ஸ்ரீ சித்தி விநாயகர்
8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்
10.ஸ்ரீ விக்ன விநாயகர்
11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்
12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்
13.ஸ்ரீ மகர விநாயகர்
14.ஸ்ரீ விஜய விநாயகர்
15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்
16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்
17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்
18.ஸ்ரீ வரத விநாயகர்
19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்
20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்
21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்
22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்
23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்
24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்
25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்
26,ஸ்ரீ துண்டி விநாயகர்
27.ஸ்ரீ இருமுக விநாயகர்
28.ஸ்ரீ திரிமுக விநாயகர்
29.ஸ்ரீ சிங்க விநாயகர்
30.ஸ்ரீ யோக விநாயகர்
31.ஸ்ரீ துர்க்கா கணபதி
32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்
முப்பத்தியிரண்டு திருவுருவங்களின் பெயர்களை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.அவருடைய கட்டூரையில் இந்த திருவுருவங்களின் அமைப்புகளையும் கூறியிருக்கிறார்.அவருடைய கட்டூரையை படிக்க விரும்புகிறவர்கள் http://sudhanganin.blogspot.com/2008/09/blog-post.html க்கு சென்று படியுங்கள்.
என்னுடைய ஆச்சிரியம் என்னவென்றால் விநாயகர் என்னுடைய இஷ்ட தெய்வம்.அப்படியிருக்கும் போது அவருடைய அவதாரங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதுக் கூட இல்லை.இந்த இஷ்டதெய்வ வழிபாடு இந்து மதத்தில் இருக்கும் சிறப்புகளில் ஒன்று.தங்களுக்கு பிடித்த தெய்வத்தை வழிபட இந்து மதம் அனுமதி தருகின்றது.இது போன்ற சுகந்திரங்கள் தான் இந்து மதத்தினை பல காலம் அழியாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிற்றிதல்கள் என எல்லா ஊடகங்களிலும் ராமாயணமும்,மகாபாரதமும் மட்டுமே இடம் பிடிக்கின்றன.மற்ற கதைகளையோ,புராணங்களையோ அவைகள் மறந்து விடுகின்றன.சொன்ன கதைகளையே அவர்கள் சொல்வதும் அதையும் நாம் சலிக்காமல் மீண்டும் மீண்டும் படிப்பதும்,பார்ப்பதுமே வாடிக்கையாகிவிட்டது.இந்த அவலம் கண்டிப்பாக மாற வேண்டும்.அதற்கான சில முயற்சிகளை நானும் எடுக்கிறேன்.எந்த மாற்றமானாலும் அதை நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
கதைகளைத் தேடுவோம் கொட்டிக் கிடக்கும் புதையல்களிலிருந்து ராமாயணம்,மகாபாரதம் என்னும் இரண்டு முத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமா.மாணிக்கங்களையும்,வைரங்களையும் விட்டு சென்று விட முடியுமா.கொஞ்ச காலம் ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மறப்போம்.அப்போது தான் புதிய கதைகள் கிடைக்கும்.வாருங்கள் அன்பானவர்களே நம் தேடுதல் வேட்டையை இன்றையிலிருந்து தொடங்குவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)