தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 10 ஜூலை, 2009

பெயின்டில் படம் பாருங்கள்

பலருக்கும் பெயின்ட்டில்(PAINT) படம்(DRAWING) வரைவது தெரிந்திருக்கும்.ஆனால் நான் இப்போது சொல்லப்போவது திரைப்படங்களை(MOVIE) பெயின்ட்டில் பார்ப்பது பற்றி.இது மிகவும் எளிது.கவனமாக கவனியுங்கள்.

இனி செய்ய வேண்டியவை,
1. பெயின்டை திறந்து கொள்ளுங்கள்.
2.ஏதாவது ஒரு பிலேயரில்(PLAYER) படத்தை ஓடவிடுங்கள்.
3.அது ஓடிக்கொண்டிருக்கும் போது உங்கள் கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கீரினை(PRIENT SCREEN) அழுத்துங்கள்.
4.இப்போது பெயின்டில் CTRL+V ஐ அழுத்தி பேஸ்ட் செய்யுங்கள்.அல்லது பெயின்டில் எடிட்(EDIT) மெனுவிற்கு சென்று பேஸ்ட் செய்யுங்கள்.
5.பிலேயரை மினிமைஸ்(MINIMIZE) செய்யாமல் நீங்கள் பெயின்ட்டை திறந்தால் படம் ஓடுவது உங்களுக்கு தெரியும்.



படத்தினை பிலேயர் வழியாக இல்லாமல் பெயின் வழியாக பாருங்கள்.இது போன்ற சில வினோதமான ஆச்சிரியப்பட வைக்கும் வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்தால் கருத்துகளில் சொல்லுங்கள்.இல்லையேல் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

அடுத்த கணினி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

காணாமல் போகும் எழுத்துகள்

இதுவும் நோட்பேட்(NOTEPAD) அதிசயம்தான்.

இதற்கு செய்ய வேண்டியது,
1.நோடபேட் ஒன்றை புதிதாக திறக்கவும்.
2.அதில் Bush hid the facts என்று டைப் செய்யவும்.
3.இந்த நோட்பேட்ஐ ஏதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்(SAVE).
4.இப்போது நோட்பேடை மூடி விட்டு,மீண்டும் திறந்து பார்க்கவும்.





நீங்கள் டைப் செய்ய எழுத்துகள் மாறிப்போயிருக்கும்.சிலருக்கு படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்றும் வேறு சிலருக்கு கட்டம் கட்டமாகவும் தோற்றம் அளிக்கும்.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் 4 3 3 5 என்ற சொற்களால் அமைந்த வாக்கியங்கள் யுனிக்கோட்(UNICODE) முறையில் ஏற்றுக் கொள்ளப் படாத்தே என்கின்றனர் நண்பர்கள்.

வேறு சிலவற்றையும் முயன்று பாருங்கள்.அடுத்த கணிப்பொறி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துகள் இடுங்கள்.செய்து பார்த்துவிட்டு சந்தேகம் ஏற்பட்டால் jagadees1808@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இரட்டைக் கோபுர வினோதம்

அமெரிக்காவையே அதிரவைத்த இரட்டை கட்டிடங்களையும் விமானம் மூலம் தாக்கி அழித்த நிகழ்வை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விமானத்தின் பெயர் Q33N இதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.உங்கள் கனிணியில் NOTEPADஐ திறந்துகொள்ளவும்.
2.அதில் விமானத்தின் பெயரை Q33N என டைப் செய்யவும்.
3.NOTEPADன் FONT அளவை 72க்கு பெரிது படுத்திக் கொள்ளவும்.
4.இறுதியாக FONTஐ WINGDINGS ல் வைத்துக் கொள்ளவும்.







இப்போது உங்கள் கண் முன்னே இருப்பதைக் கண்டு ரசியுங்கள்....
அடுத்த ஆச்சிரியத்துடன் விரைவில் உங்களை சந்திக்கின்றேன்.

உங்கள் ஜெகதீஸ்வரன்

அன்பார்ந்த பட்டாம்பூச்சி வாசகர்களே,

காலம் செய்த கோலத்தால் தங்களை சந்திக்க சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது.கணினி துறையில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை.உலக பொருளாதார தேக்கம் எல்லோரையும் விட எங்கள் கனிணி துறையை மிகவும் பாதித்து இருக்கின்றது.

சென்னைக்கு வேலை தேடும் ஆர்வத்தில் வந்தவன்,இப்போது அறிவை வளர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறேன்.கணினி இன்று எல்லா இடங்களையும் சென்றடைந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் கணினி பற்றி எல்லாமும் நாம் தெரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.

நான் ஆங்கிலத்தில் படித்த,நண்பர்கள் எடுத்துக் கூறிய கணினி சம்மந்தப்பட்ட ஆச்சிரியங்களை இனி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.இதில் கொஞ்சம் என் சுயநலமும் உண்டு.ஆம் இடுகைகள் இடுவதற்காக நான் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை கண்டிப்பாக இந்த வலைப்பூ எனக்கு ஏற்படுத்தும்.அத்தோடு உங்களுக்கும் கொஞ்சம் நன்மையாகவும் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்...உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் கூறுங்கள்... பகிர்ந்து கொள்ளுதலில் பெருகும் குணம் கல்விச் செல்வத்திற்கு மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரனமான ஆசிர்வாதங்களோடு உங்கள் ஜெகதீஸ்வரன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

காதல் தோல்வி

காதலில் மட்டும் தான் தோல்வியின் வலிகளும் மிக அழகாக இருக்கும்.அந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் உருவான அற்புதக் கவிதைகள் இவைகள்.


காதல் தோல்வி

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!