தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

இரட்டைக் கோபுர வினோதம்

அமெரிக்காவையே அதிரவைத்த இரட்டை கட்டிடங்களையும் விமானம் மூலம் தாக்கி அழித்த நிகழ்வை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.அந்த விமானத்தின் பெயர் Q33N இதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.உங்கள் கனிணியில் NOTEPADஐ திறந்துகொள்ளவும்.
2.அதில் விமானத்தின் பெயரை Q33N என டைப் செய்யவும்.
3.NOTEPADன் FONT அளவை 72க்கு பெரிது படுத்திக் கொள்ளவும்.
4.இறுதியாக FONTஐ WINGDINGS ல் வைத்துக் கொள்ளவும்.







இப்போது உங்கள் கண் முன்னே இருப்பதைக் கண்டு ரசியுங்கள்....
அடுத்த ஆச்சிரியத்துடன் விரைவில் உங்களை சந்திக்கின்றேன்.

உங்கள் ஜெகதீஸ்வரன்

அன்பார்ந்த பட்டாம்பூச்சி வாசகர்களே,

காலம் செய்த கோலத்தால் தங்களை சந்திக்க சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது.கணினி துறையில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை.உலக பொருளாதார தேக்கம் எல்லோரையும் விட எங்கள் கனிணி துறையை மிகவும் பாதித்து இருக்கின்றது.

சென்னைக்கு வேலை தேடும் ஆர்வத்தில் வந்தவன்,இப்போது அறிவை வளர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறேன்.கணினி இன்று எல்லா இடங்களையும் சென்றடைந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் கணினி பற்றி எல்லாமும் நாம் தெரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.

நான் ஆங்கிலத்தில் படித்த,நண்பர்கள் எடுத்துக் கூறிய கணினி சம்மந்தப்பட்ட ஆச்சிரியங்களை இனி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.இதில் கொஞ்சம் என் சுயநலமும் உண்டு.ஆம் இடுகைகள் இடுவதற்காக நான் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை கண்டிப்பாக இந்த வலைப்பூ எனக்கு ஏற்படுத்தும்.அத்தோடு உங்களுக்கும் கொஞ்சம் நன்மையாகவும் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்...உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் கூறுங்கள்... பகிர்ந்து கொள்ளுதலில் பெருகும் குணம் கல்விச் செல்வத்திற்கு மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரனமான ஆசிர்வாதங்களோடு உங்கள் ஜெகதீஸ்வரன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

காதல் தோல்வி

காதலில் மட்டும் தான் தோல்வியின் வலிகளும் மிக அழகாக இருக்கும்.அந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் உருவான அற்புதக் கவிதைகள் இவைகள்.


காதல் தோல்வி

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!

தமிழ்தாயின் நிலை என்ன?

என்ன நண்பர்களே இன்னும் எத்தனை நாட்கள்தான் ராஜேஸ்குமார்,பட்டுக்கோட்டை நாவல்களையே படித்துக் கொண்டிருப்பீர்கள்.குழந்தையாக இருந்துகொண்டே இருக்கலாமா?.எப்போது பெரியவர்களாகப் போகின்றீர்கள்?.என்ன யோசனை?.கட்டூரையை மேலும் தொடரலாமா வேண்டாமா என்றா சந்தேகமே வேண்டாம்.இந்தக் கட்டூரை உங்களின் வாழ்க்கையை மாற்றிப் போடலாம்.தொடருங்கள்.

என்னுடைய கல்லூரி நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை.சிலருக்கு தமிழை வாசிக்கவும் தெரியவில்லை.தமிழன் என்ற பின்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயனாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.அப்படியானால் தமிழ் நிலை என்ன?பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச்சாகுமா?.அந்த நிலைக்கு நாம் தமிழை விடலாமா?.மாற்றானின் தாய்க்கு பணிவிடைகள் செய்துகொண்டு நம்தாயை தெருவில் அனாதையாக விட்டுவிடலாமா?கூடாது,கண்டிப்பாக கூடாது.

நாயன்மார்களும்,ஆழ்வார்களும்,சித்தர்களும் வெறும் சமயத்தினை மட்டும் வளத்தார்கள் என்று சொன்னால் அது நம்முடைய அறியாமை.அவர்கள் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்கள்.அவர்களை போல தமிழை நாம் நேசிக்க வேண்டும்.இன்று வலைதளங்களில் என்னற்ற பெரும் மனிதர்கள் தங்களின் சிந்தனைகளை பதித்து வருகின்றனர்.இது போற்றதக்கது.வலைகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றி திரியும் நண்பராக இருந்தால் உங்களால் முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக் கொள்ளுங்கள்.

சித்த புருசர்களின் பாடல்கள் சிவநாமத்தை மறைமுகமாகவே உணர்த்துகின்றன.அவர்களின் விருப்பமெல்லாம் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதுதான்.எளிமையான பாடல்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.தமிழை தமிழர்களே புறக்கனிக்க காரணம் தமிழ் மொழியால் வேலை கிடைக்காதுதான் என்கின்றனர் என் நண்பர்கள்.வெறும் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?தமிழ் பேசவும்,எழுதவும் தெரியாதவன் தமிழாக பிறந்து என்ன பயன்?ஒரு முறை காந்தியடிகள் திருக்குறளின் பெருமைமிக்க குறள்களின் பொருளை அறிந்து கொள்ள தான் தமிழனாக பிறக்கவில்லை என வருத்தப்பட்டாராம்.தமிழனாக பிறந்த நாம் திருக்குறளை படிக்க விருப்பம் கொள்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை.

தமிழ் மொழி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை உண்டானால்தான்.தமிழை அழிவுப்பாதையிலிருந்து மீட்க முடியும் இல்லையென்றான்றால்....எப்படி சொல்ல...தமிழ் இனி மெல்ல சாகுமென....

வாருங்கள் கை கொடுங்கள் தமிழ் வளர்ப்போம்,தமிழனென பெருமை கொள்வோம்.

பிகு-கணிப்பொறி சம்மந்தப்பட்ட செய்திகளை தமிழில் பதிக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால் எண்ணங்களை செயல்படுத்த சற்று காலம் காத்திருக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஞானம்

காப்பு

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1


கட்டளைக் கலித்துறை

அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1

அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2


தரவு கொச்சகம்

அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3

வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4


கட்டளைக் கலித்துறை

வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5

எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8


நேரிசை வெண்பா

இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9

ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10

சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11

வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12

முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13

காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14

கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15

என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16

உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17

அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18

எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19


(முடிந்தது)