சித்தர்களின் பாடல்களை படித்து இன்புற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்து சித்து விளையாட்டில் உலகத்தையே நல்வழிப்படுத்திய மகாபுருசர்களின் வரலாறுகளையும், அவர்களின் மர்மங்களையும், வாழ்க்கையையும் அறிந்திட தயாராகுங்கள்.
சித்தர்கள் –
தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.
சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
புதிதாக தெரிந்த செய்தி –
பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.
பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்
அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி
வேறுபாடுகள் அற்றவர்கள் –
இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.
அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.
இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.
108 சித்தர்களின் பெயர்கள் -
நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.
1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.
ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.
இந்தப்பட்டியல் தொகுக்கப்பட்ட ஒன்று என்பதால் நீங்கள் படித்திருந்த, கேள்விபட்டிருந்த சில சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டு போயிருக்கலாம், அப்படி ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ கருத்துரையில் தெரிவிக்கவும். என்னுடைய பணியில் நண்பர்கள் நீங்களும் பங்கெடுத்து கொள்ள மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்.சித்தர்கள் பற்றிய செய்திகள், வலைப்பூக்கள் என தங்களுக்கு தெரிந்ததை அடியேனுக்கு அருள jagadees1808@gmai.com மெயில் அனுப்புங்கள்.
மர்மங்கள் தொடரும்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,
- ஜெகதீஸ்வரன்.
திங்கள், 27 ஜூலை, 2009
வெள்ளி, 24 ஜூலை, 2009
தட்டச்சு கருவி இல்லாமலேயே...
இந்த முறை நாம் பார்க்ப்போவது ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் XP ன் ஒரு உபயோகமுள்ள செயல்முறை. (WINDOS XP INVISSIBE PROGRAM)
தட்டச்சு கருவி இல்லாமல் தட்டச்சு செய்ய முடியுமா?.
முடியும்.
எதிர்பாராத விதமாக உங்களுடைய தட்டச்சு கருவி பழுதாகினாலோ, இல்லை தட்டச்சு கருவின் ஒரு சில எழுத்துகள் மட்டும் பழுதாகினாலோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய விண்டோஸ் XP-ல் அதற்காக ஒரு புதிய வழி முறை உள்ளது.
.bmp)
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்,
1. START மெனுவிவை சொடுக்கி கீழே காண்பிக்கப்பட்டுள்ள வழியில் செல்க.
2. START-> ALL PROGRAMS-> ACCESSORIES->ACCESSIBIITY-> On-Screen Keyboard
3. இப்போது On-Screen Keyboard ஐ சொடுக்கினால் உங்களுக்கு தட்டச்சு கருவி விண்டோஸிலேயே கிடைக்கும்.
அல்லது விண்டோஸ் கீயுடன் R கீயையும் அழுத்தி கிடைக்கும் RUN –ல் osk என தட்டச்சு செய்த பின்னும், இதை பெறலாம். தட்டச்சு கருவி சரி வர இயங்காத நிலையில் இந்த வழிமுறை பயனற்றதாக இருக்கும் என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்.
ஆனால் ஒரு சில தட்டச்சு கீகளை தவிற மற்றவை வேலை செய்தால், இரண்டாவது முறை மிகவும் எளியது.
பிறகென்ன தட்டச்சு செய்ய வேண்டியது தானே?...
தட்டச்சு கருவி இல்லாமல் தட்டச்சு செய்ய முடியுமா?.
முடியும்.
எதிர்பாராத விதமாக உங்களுடைய தட்டச்சு கருவி பழுதாகினாலோ, இல்லை தட்டச்சு கருவின் ஒரு சில எழுத்துகள் மட்டும் பழுதாகினாலோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய விண்டோஸ் XP-ல் அதற்காக ஒரு புதிய வழி முறை உள்ளது.
.bmp)
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்,
1. START மெனுவிவை சொடுக்கி கீழே காண்பிக்கப்பட்டுள்ள வழியில் செல்க.
2. START-> ALL PROGRAMS-> ACCESSORIES->ACCESSIBIITY-> On-Screen Keyboard
3. இப்போது On-Screen Keyboard ஐ சொடுக்கினால் உங்களுக்கு தட்டச்சு கருவி விண்டோஸிலேயே கிடைக்கும்.
அல்லது விண்டோஸ் கீயுடன் R கீயையும் அழுத்தி கிடைக்கும் RUN –ல் osk என தட்டச்சு செய்த பின்னும், இதை பெறலாம். தட்டச்சு கருவி சரி வர இயங்காத நிலையில் இந்த வழிமுறை பயனற்றதாக இருக்கும் என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்.
ஆனால் ஒரு சில தட்டச்சு கீகளை தவிற மற்றவை வேலை செய்தால், இரண்டாவது முறை மிகவும் எளியது.
பிறகென்ன தட்டச்சு செய்ய வேண்டியது தானே?...
ஆட்டம் போடும் புகைப்படங்கள்
இது என்னுடைய நண்பர்கள் சொல்லிக் கொடுத்த வழி முறை. முதன் முதலாக நான் இதைச் செய்து பார்த்த போது வியப்பில் மூழ்கிப்போனேன். அதே வியப்பு உங்களுக்கும் வந்திட வேண்டுமல்லாவா எனவே இந்த முறை செயல் விளக்கப் படங்களை மட்டுமே இடுவதாக முடிவு செய்தேன்.
HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.
இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்
இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);
2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)
.jpg)
3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.
அல்லது
4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்
5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.
6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.
இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.
HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.
இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்
இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);
2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)
.jpg)
3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.
அல்லது
4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்
5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.
6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.
இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.
எளிய முறையில் START மெனுவை திறக்க இரண்டு வழிகள்
நீங்கள் கணிப்பொறியை வெகு நாட்களாக உபயோகம் செய்கிறீர்கள் என்றால் இந்த வழி முறை உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்.கணினியை பயண்படுத்துபவர்களின் நேரத்தினை மிச்சம் படுத்த KEYBOARD SHORTCUTS பயண்படுகின்றன.
.jpg)
புதிய கணிப்பொறி பயண்பாட்டாளர்கள் இதனை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த வழி முறைகள் உங்களுக்கு எளிமையான இருப்பதோடு, நேரத்தையும் மீதப் படுத்தும்.
1. WIN கீயுடன் சேர்த்து R கீயையும் அழுத்தவும். இப்போது விண்டோவில் START மெனு கிடைக்கும்.
அல்லது
2. தட்டச்சு கருவியில் (KEYBOARD ) விண் கீயை அழுத்தவும். இப்போதும் விண்டோவில் START மெனு கிடைக்கும்.
இப்போது கிடைக்கும் மெனுவில் சில கோடிட்ட எழுத்துகளை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக RUN –ல் R என்ற எழுத்து அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். உடனே நீங்கள் தட்டச்சுகருவியில் R தட்டச்சை அழுத்தினால் ரன் புரோகிராம் கிடைக்கும். ARROW கீயையும் உபயோகித்து உங்களுக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து பயண்படுத்தலாம்
CONTRO PANEL - C
HELP AND SUPPORT - H
SEARCH – S
RUN – R
நீங்கள் சாதாரணமாக மவுசை கொண்டு கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவை பெறும் போது உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
தட்டச்சு கருவியில் உள்ள எளிமையான வசதிகளை பிறகொரு இடுகையில் சொல்கிறேன்.
.jpg)
புதிய கணிப்பொறி பயண்பாட்டாளர்கள் இதனை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த வழி முறைகள் உங்களுக்கு எளிமையான இருப்பதோடு, நேரத்தையும் மீதப் படுத்தும்.
1. WIN கீயுடன் சேர்த்து R கீயையும் அழுத்தவும். இப்போது விண்டோவில் START மெனு கிடைக்கும்.
அல்லது
2. தட்டச்சு கருவியில் (KEYBOARD ) விண் கீயை அழுத்தவும். இப்போதும் விண்டோவில் START மெனு கிடைக்கும்.
இப்போது கிடைக்கும் மெனுவில் சில கோடிட்ட எழுத்துகளை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக RUN –ல் R என்ற எழுத்து அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். உடனே நீங்கள் தட்டச்சுகருவியில் R தட்டச்சை அழுத்தினால் ரன் புரோகிராம் கிடைக்கும். ARROW கீயையும் உபயோகித்து உங்களுக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து பயண்படுத்தலாம்
CONTRO PANEL - C
HELP AND SUPPORT - H
SEARCH – S
RUN – R
நீங்கள் சாதாரணமாக மவுசை கொண்டு கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவை பெறும் போது உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
தட்டச்சு கருவியில் உள்ள எளிமையான வசதிகளை பிறகொரு இடுகையில் சொல்கிறேன்.
நீங்கள் நகல் செய்ததை பார்க்க
உங்கள் கணினியில் நோட்பேட், வேர்ட் என எதிலும் நீங்கள் நகல்(COPY) செய்த வார்த்தைகளை CLIPBOARD எனப்படும் தனி அமைப்பில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.
இதைப் பார்க்க நீங்கள் செய்யவேண்டியது –
1. உங்கள் கணினியில் ரன் புரோகிராமை திறந்து கொண்டு, அதில் கீழ்காணும் சொல்லை தட்டச்சு சொல்லுங்கள்.
2. நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தை - cipbrd . பின்பு என்டர் கீயை அழுத்தவும்.
3. இப்போது உங்களுக்கு ஒரு விண்டோஸ் எஸ்.பியில் மறைந்துள்ள புரோகிராம் கிடைக்கும். இதில் நீங்கள் நகல் செய்த வார்த்தைகள் தெரியும்.
.jpg)
பயண்கள் –
சிலருக்கு எந்த வார்த்தையை நகல் செய்யதோம் என மறந்து விடுவதுண்டு. அவர்களுக்கு இது நிச்சயம் பயண்படும்.
இந்த இடுகை உங்களுக்கு பயணுள்ளதாக இருக்கிறதா?. கருத்துகளை சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.
இதைப் பார்க்க நீங்கள் செய்யவேண்டியது –
1. உங்கள் கணினியில் ரன் புரோகிராமை திறந்து கொண்டு, அதில் கீழ்காணும் சொல்லை தட்டச்சு சொல்லுங்கள்.
2. நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தை - cipbrd . பின்பு என்டர் கீயை அழுத்தவும்.
3. இப்போது உங்களுக்கு ஒரு விண்டோஸ் எஸ்.பியில் மறைந்துள்ள புரோகிராம் கிடைக்கும். இதில் நீங்கள் நகல் செய்த வார்த்தைகள் தெரியும்.
.jpg)
பயண்கள் –
சிலருக்கு எந்த வார்த்தையை நகல் செய்யதோம் என மறந்து விடுவதுண்டு. அவர்களுக்கு இது நிச்சயம் பயண்படும்.
இந்த இடுகை உங்களுக்கு பயணுள்ளதாக இருக்கிறதா?. கருத்துகளை சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)