தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 26 ஜூன், 2010

விரதம் என்பது எது? -அவ்வையார்

* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்

கலைஞர்தான் தமிழுக்கு காப்பு - வாலியின் கவிதை

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்‌னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

- கவிஞர் வாலி

ஞாயிறு, 20 ஜூன், 2010

ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியின் அவலம்



என்னுடைய பள்ளி என பெருமை கொள்ளும் காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி சமீபகாலமாக சரியில்லாத நிர்வாகத்தினால் அழிந்து போகும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதைப் பற்றிய வேதனை மிகுந்த முன்னாள் மாணவனின் புலம்பல், இது.

தோற்றம் -

காட்டுப்புத்தூரை தலைமை இடமாக கொண்டு நிகரில்லாத அதிகாரத்தினை அங்கு வசிக்கின்ற ஜெமிந்தார்கள் கொண்டிருந்தார்கள். ஆண்டைக்கும், அடிமைக்கும் இடையேயான வேறுமைகளை கழியும் வகையில் சிதம்பர ரெட்டியார் என்ற மாமனிதர் உதித்தார். கல்வியே மக்களின் சொத்தென உணர்ந்தவர்.

கி.பி 1903 ஆம் ஆண்டு காவேரிக் கரை கிராமமான சீலைப்பிள்ளையார் புதூரில் ஜெமிந்தார் மேல்நிலைப் பள்ளியை தொடங்கினார். கடந்த 2003 ஆண்டோடு நூற்றாண்டைக் கடந்த இந்தப் பள்ளி, மெதுவாக வீழத்தொடங்கியுள்ளது.

ஆசிரியர்கள் -

வகுப்பிற்கு அறுபது முதல் எழுபது வரை நான் படிக்கும் காலத்தி்ல் இருப்போம். ஆரம்பகாலத்தில் முறையான ஆசிரியர்களும், கல்வியாளர்களும் இருந்தார்கள். பள்ளியின் மேல் வழக்குகள் நடந்து கொண்டிருந்ததால் ஆசிரியர்கள் ஓய்வு பெருவது மட்டும் தொடர்ந்தது. அந்தக் காலி இடங்களில் புதிய ஆசிரியர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. ஆசிரியர்களின் பற்றாக் குறையினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இப்போதும் பாதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கட்டிடங்கள் -

மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள், அந்தக் காலத்தில் கட்டப்பட்ட குதிரை லாயங்களும், மாட்டுத் தொழுவங்களும் என்பது பல மாணவக் கண்மணிகளுக்குத் தெரியாது. நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட அவைகளின் தரம், பரமரிப்பின்றி எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். லேசான மழைக்கே இடிந்து விழும் அபாயங்கள் இருப்பினும், யாரும் அதைக் கண்டுக் கொள்வதில்லை. பள்ளிக்கு விசிட் அடிக்க வந்த அதிகாரி பார்த்து பதரிப் போய், அந்தப் பகுதியில் இருந்து மாணவர்களை வெறியேற்றி இருக்கிறார்.

கழிவறை வசதிகள்-

நான் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கென தனியான கழிவறைகள் இல்லை. மாணவிகளுக்கு இருந்தமையும் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த இயலாததாக இருந்தது. இன்னும் இந்தக் குறைகள் சரி செய்யப் படவில்லை என்பது கூடுதல் வேதனை. சுகாதரமின்மை எந்தளவு தங்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என கிராம மக்களுக்கு தெரிவதில்லை. முறையான நேரத்தி்ல் கழிவுகளை அகற்றாமல் வருகின்ற வியாதிகளுக்கு அளவே இல்லை.

ஆசிரியர்களை அகற்றும் அவலம் -

இந்த விசயங்கள் பொதுமக்களிடம் கசியத்தெடங்க, மாணவர்களின் சேர்க்கையும் மிகக் குறைந்து போனது. மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஆசிர்கள் எதற்கென அவகளின் பணி இறுதி அடிப்படையில், அதாவது கடைசியாக சேர்ந்துள்ள ஆசிரியர்களின் வகையில் நீக்கம் நடைபெருகிறது.

மாவட்ட ஆட்சியாலரின் நேரடி தலையீடு -

சரியாக நிர்வாகம் செய்யதா ஜமிந்தார் வாரிசுகளை அழைத்து மாவட்ட ஆட்சியாளர் பேசியிருப்பதாக தகவல். அதனால் மீண்டும் பழைய பெருமைகளுடன் பள்ளி நடக்கும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர்.நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சி@

மேலும் காண்க -

விக்கிப் பீடியாவில் காட்டுப்புத்தூர் கட்டுரையில் என் பங்கு!.

காட்டுப்புத்தூர்