தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 27 ஜூலை, 2009

சித்தமெல்லாம் சிவமயம் - 1

சித்தர்களின் பாடல்களை படித்து இன்புற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்து சித்து விளையாட்டில் உலகத்தையே நல்வழிப்படுத்திய மகாபுருசர்களின் வரலாறுகளையும், அவர்களின் மர்மங்களையும், வாழ்க்கையையும் அறிந்திட தயாராகுங்கள்.

சித்தர்கள் –

தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.

சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

புதிதாக தெரிந்த செய்தி –

பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.

பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி

வேறுபாடுகள் அற்றவர்கள் –

இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.

108 சித்தர்களின் பெயர்கள் -

நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.

1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.

ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.

இந்தப்பட்டியல் தொகுக்கப்பட்ட ஒன்று என்பதால் நீங்கள் படித்திருந்த, கேள்விபட்டிருந்த சில சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டு போயிருக்கலாம், அப்படி ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ கருத்துரையில் தெரிவிக்கவும். என்னுடைய பணியில் நண்பர்கள் நீங்களும் பங்கெடுத்து கொள்ள மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்.சித்தர்கள் பற்றிய செய்திகள், வலைப்பூக்கள் என தங்களுக்கு தெரிந்ததை அடியேனுக்கு அருள jagadees1808@gmai.com மெயில் அனுப்புங்கள்.

மர்மங்கள் தொடரும்...

வெள்ளி, 24 ஜூலை, 2009

தட்டச்சு கருவி இல்லாமலேயே...

இந்த முறை நாம் பார்க்ப்போவது ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் XP ன் ஒரு உபயோகமுள்ள செயல்முறை. (WINDOS XP INVISSIBE PROGRAM)

தட்டச்சு கருவி இல்லாமல் தட்டச்சு செய்ய முடியுமா?.
முடியும்.

எதிர்பாராத விதமாக உங்களுடைய தட்டச்சு கருவி பழுதாகினாலோ, இல்லை தட்டச்சு கருவின் ஒரு சில எழுத்துகள் மட்டும் பழுதாகினாலோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய விண்டோஸ் XP-ல் அதற்காக ஒரு புதிய வழி முறை உள்ளது.



நீங்கள் செய்ய வேண்டியது இது தான்,

1. START மெனுவிவை சொடுக்கி கீழே காண்பிக்கப்பட்டுள்ள வழியில் செல்க.

2. START-> ALL PROGRAMS-> ACCESSORIES->ACCESSIBIITY-> On-Screen Keyboard

3. இப்போது On-Screen Keyboard ஐ சொடுக்கினால் உங்களுக்கு தட்டச்சு கருவி விண்டோஸிலேயே கிடைக்கும்.

அல்லது விண்டோஸ் கீயுடன் R கீயையும் அழுத்தி கிடைக்கும் RUN –ல் osk என தட்டச்சு செய்த பின்னும், இதை பெறலாம். தட்டச்சு கருவி சரி வர இயங்காத நிலையில் இந்த வழிமுறை பயனற்றதாக இருக்கும் என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்.

ஆனால் ஒரு சில தட்டச்சு கீகளை தவிற மற்றவை வேலை செய்தால், இரண்டாவது முறை மிகவும் எளியது.

பிறகென்ன தட்டச்சு செய்ய வேண்டியது தானே?...

ஆட்டம் போடும் புகைப்படங்கள்

இது என்னுடைய நண்பர்கள் சொல்லிக் கொடுத்த வழி முறை. முதன் முதலாக நான் இதைச் செய்து பார்த்த போது வியப்பில் மூழ்கிப்போனேன். அதே வியப்பு உங்களுக்கும் வந்திட வேண்டுமல்லாவா எனவே இந்த முறை செயல் விளக்கப் படங்களை மட்டுமே இடுவதாக முடிவு செய்தேன்.

HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.

இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்

இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);

2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)



3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.

அல்லது

4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்

5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.

6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.

இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.

எளிய முறையில் START மெனுவை திறக்க இரண்டு வழிகள்

நீங்கள் கணிப்பொறியை வெகு நாட்களாக உபயோகம் செய்கிறீர்கள் என்றால் இந்த வழி முறை உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்.கணினியை பயண்படுத்துபவர்களின் நேரத்தினை மிச்சம் படுத்த KEYBOARD SHORTCUTS பயண்படுகின்றன.



புதிய கணிப்பொறி பயண்பாட்டாளர்கள் இதனை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த வழி முறைகள் உங்களுக்கு எளிமையான இருப்பதோடு, நேரத்தையும் மீதப் படுத்தும்.

1. WIN கீயுடன் சேர்த்து R கீயையும் அழுத்தவும். இப்போது விண்டோவில் START மெனு கிடைக்கும்.
அல்லது
2. தட்டச்சு கருவியில் (KEYBOARD ) விண் கீயை அழுத்தவும். இப்போதும் விண்டோவில் START மெனு கிடைக்கும்.

இப்போது கிடைக்கும் மெனுவில் சில கோடிட்ட எழுத்துகளை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக RUN –ல் R என்ற எழுத்து அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். உடனே நீங்கள் தட்டச்சுகருவியில் R தட்டச்சை அழுத்தினால் ரன் புரோகிராம் கிடைக்கும். ARROW கீயையும் உபயோகித்து உங்களுக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து பயண்படுத்தலாம்

CONTRO PANEL - C
HELP AND SUPPORT - H
SEARCH – S
RUN – R

நீங்கள் சாதாரணமாக மவுசை கொண்டு கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவை பெறும் போது உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

தட்டச்சு கருவியில் உள்ள எளிமையான வசதிகளை பிறகொரு இடுகையில் சொல்கிறேன்.

நீங்கள் நகல் செய்ததை பார்க்க

உங்கள் கணினியில் நோட்பேட், வேர்ட் என எதிலும் நீங்கள் நகல்(COPY) செய்த வார்த்தைகளை CLIPBOARD எனப்படும் தனி அமைப்பில் தற்காலிகமாக சேமிக்கப்படும்.

இதைப் பார்க்க நீங்கள் செய்யவேண்டியது –

1. உங்கள் கணினியில் ரன் புரோகிராமை திறந்து கொண்டு, அதில் கீழ்காணும் சொல்லை தட்டச்சு சொல்லுங்கள்.

2. நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தை - cipbrd . பின்பு என்டர் கீயை அழுத்தவும்.

3. இப்போது உங்களுக்கு ஒரு விண்டோஸ் எஸ்.பியில் மறைந்துள்ள புரோகிராம் கிடைக்கும். இதில் நீங்கள் நகல் செய்த வார்த்தைகள் தெரியும்.


பயண்கள் –

சிலருக்கு எந்த வார்த்தையை நகல் செய்யதோம் என மறந்து விடுவதுண்டு. அவர்களுக்கு இது நிச்சயம் பயண்படும்.

இந்த இடுகை உங்களுக்கு பயணுள்ளதாக இருக்கிறதா?. கருத்துகளை சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.

புதன், 22 ஜூலை, 2009

பச்சையம்மனும் மகாமுனியும்

நாமக்கல் மாவட்டத்தில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சற்று தள்ளிய நிலையில் பசுமை போர்த்திய வயல்வெளிகளுக்கு நடுவே ஸ்ரீ பச்சையம்மன் மன்னாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

மகாமுனி -



பல உருவங்கள் கொண்ட ஈசனின் ஒரு உருவம் மகாமுனி. முனிஸ்வரன், முனி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டாலும், மகாமுனி என இங்கே ஸ்ரீ பச்சையம்மன் மற்றும் மன்னாத சுவாமி திருக் கோவிலில் பெருமையுடன் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் இங்கு உள்ள முனிஸ்வரன் தான் தமிழ்நாட்டிலேயே மிகவும் உயர்ந்த முனி. ஐயனார் தெய்வம், கருப்பு தெய்வம் போல மகாமுனியும் காவல் தெய்வம். எனவே பெரும்பாலும் கிராமப்புற எல்லையோரங்களில் கோவில் கொண்டிருப்பார். இந்த இடமும் வடகரைத்துவார் கிராமத்தின் எல்லைப் பகுதி தான்.

இங்குள்ள மகாமுனி அமர்ந்த நிலையில் வலது கையில் அரிவாலை ஓங்கியபடியும், இடது கையை தொடையில் வைத்து கம்பீரமான தோற்றத்துடன் இருக்கிறார். அவரைச் சுற்றி பாம்பு ஒன்று வெளியில் எட்டிப் பார்க்கின்றது. வலது காலில் ஒரு அரக்கனை மிதித்தபடியும், கண்களை அகல விழித்து, முறுக்கிய பெரிய மீசையுடன் பத்தர்களின் குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.


நிஜமான புற்று –



மகாமுனிக்கு பின்புறம் ஒரு செயற்கையான புற்று உள்ளது. சட்டென்று பார்க்கையில் நிஜ புற்றினைப் போலவும், அதிலிருந்து ஒரு பாம்பு எழுந்து வருவது போலவும் செய்யப் பட்டிருக்கின்றது.

ஆலைய மணியும் அரிவாலும் –

மகாமுனியின் இடது காலடியில் இரண்டு பிரம்மாண்டமான அரிவால்களும், ஒரு பெரிய கதையும் இருக்கிறது. பிறகு ஆலைய மணி கிட்டதிட்ட மகாமுனியின் உயரத்திற்கு கட்டப்பட்ட மணி மண்டபத்தில் இருக்கிறது.

பெரிய சூளாயுதம் –



அம்மனுடைய கோவிலுக்கு முன்பாக சுமார் 21 அடி உயரமான பெரிய சூளாயுதம் உள்ளது. அந்த சூளாயுத்த்தை சுற்றி ஒரு பாம்பு வளைந்து நெளிந்து ஏறுகிறது. அதன் அடியில் பக்தக் கோடிகளால் எழுமிச்சை பழங்கள் வைக்கப் பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் ஈசனின் வாத்தியக் கருவியான உடுக்கையும் வேலில் கட்டப்பட்டுள்ளது.

பச்சையம்மன் –



மகாமுனின் இடது புறத்தில் அழகிய கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன். பெயருக்கு ஏற்றாற் போல அம்மனின் திருமேனி பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. புற்றுமண்ணில் இருந்த அம்மன் சிலை சிதலமடைந்ததால் பத்தர்கள் ஒன்று கூடி அம்மனின் திருமேனியை மீண்டும் செய்திருக்கிறார்கள்.

அம்மனுடைய முகம் மிகுந்த பொழிவுடன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சாந்தசொருபமாக இருக்கிறது. கலைவேலை பாடுகள் மிக்க ஆசானத்தில் பச்சையம்மன் அமர்ந்திருக்க இரு புறமும் இரண்டு பெண்கள் அம்மனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். அம்மனின் கிரீடத்திற்க்கு மேலே ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்கின்றது. மொத்த்த்தில் ராஜகம்பீரமாக பச்சையம்மன் காட்சி தருகிறார்.

கோவிலின் சிறப்பு –



மனநலம் குன்றியவர்களுக்கும், உடல் பலம் குறைந்தவர்களுக்கும் இந்த தளம் மிகப் பெரிய வரப் பிரசாதம். இந்த முனிஸ்வரனை தினமும் ஒன்பது முறை ஒரு மண்டலம் சுற்றி வந்தால் எல்லா குறையும் போவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றர்.

மற்ற சிறப்புகள் –

தினத்தந்தி நாளிதலில் 04-07-.2009 ஆம் நாள் இக் கோவிலைப் பற்றிய கட்டூரை வெளிவந்துள்ளது. அந்த கட்டூரை கீழே.

திருச்செங்கோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் பரமத்திவேலூர் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது ஜேடர்பாளையம். அங்கே வடகரையாழ்வார் கிராமத்தில் மன்னர் சுவாமி கோவிலில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மகாமுனிஸ்வர் எழுந்தருளியுள்ளார்.அமர்ந்த நிலையிலேயே மகாமுனிஸ்வர்ரின் உயரம் 69 அடி. முனிஸ்வரனின் கையில் இருக்கும் இரும்பு கத்தியின் உயரம் 27 அடி. அது மட்டுமன்றி அதன் எடை ஒரு டன். மீசையின் நீளம் பத்து அடி.முதுகை சுற்றி ஒரு பாம்பு வளைந்து வந்து முன்புறம் எட்டிப் பார்க்கின்றது.இது 13 ஆண்டுகால உழைப்பில் உருவான சிலை.

வேண்டுதல்கள் –

நிறைவேரிய வேண்டுதல்கலுக்காக வேல் வாங்கி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
பிள்ளையில்லாதவர்கள் பால் மரத்தில் தொட்டில் கட்டும் வழக்கம் நிலவுகிறது.
உருவ பொம்மை கொடுக்கும் வழக்கம் மிக அதிகமாக தென்படுகின்றது.
பக்தர்கள் வேண்டுதல்களுக்கு தக்கபடி நேர்த்திகடன்களையும் செய்கிறார்கள்.







எப்போது போகலாம் –

காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பூஜை செய்யப்படுவதாக அங்குள்ள பூசாரி கூறுகிறார்.

எங்கு அமைந்துள்ளது –

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் வடகரைத்துவார் என்னும் கிராமத்தில் இக் கோவில் உள்ளது.


மிகப் பிம்மாண்டமான கோவிலை மட்டும் பார்த்து வந்தவர்கள், பிரம்மாண்டமான அழகிய சிலையையும் கடவுளின் அருளையும் பெற விரும்பினால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஓர் இடம் இந்த மகாமுனி பச்சையம்மன் ஆலையம்.

வியாழன், 16 ஜூலை, 2009

விசைக் குறியின் மூலம் விந்தைகள்

விசைக் குறி என நான் சொல்லுவது ARRO KEY ஐயை தான். நீங்கள் மைக்ரோ சாப்ட் ஆபிஸ் வேர்ட் டாக்குமென்ட்(WORD DOCKUMENT), நோட் பேட்(NOTEPAD) போன்றவற்றில் வலது, இடது விசைக் குறியை(LEFT AND RIGHT ARROW KEYS) அழுத்தினால் அது ஒரு எழுத்தினை விட்டு அடுத்த எழுத்திற்கு செல்லும். அதுவே மேல்,கீழ் விசைக்குறிகளை(UP AND DOWN ARROW KEYS) அழுத்தினால் ஒரு வரியை(SENTENCE) விட்டு அதன் மேலுள்ள அல்லது கீழுள்ள வரிகளுக்கு செல்லும். இப்படியில்லாமல் அதே குறிகளைக் கொண்டு ஒரு பத்தியிலிருந்து(PARAGRAPH) இன்னொரு பத்திக்கு செல்ல முடியும். அதே போல ஒவ்வொறு வார்த்தையாகவும் செல்ல முடியும்.

இனி செய்ய வேண்டியது-

1. கன்ரோல்(CTRL) கீயை அழுத்திக் கொண்டு விசைக் குறிகளை இயக்குங்கள். நீங்கள் இயக்குவது வலது மற்றும் இடது விசைக் குறிகளாக இருப்பின், உங்களுடைய கர்சர்(CURSER) ஒவ்வொறு வார்த்தைகளாக போகும்.

2. அல்லது நீங்கள் இயக்குவது மேல் மற்றும் கீழ் விசைக் குறிகளாக இருந்தால் உங்களுடைய கர்சர் பத்தி பத்தியாக செல்லும்.

முயன்று பாருங்கள்... இந்த வழிமுறைகள் உங்களுடைய செயல்களை எளிமையாக மாற்றும் என நினைக்கிறேன்.

இடுப்பு - குட்டி சிறுகதை

முன்னால் போகும் பைக்கில் உக்காந்திருக்கும் மாமியின் இடுப்பை பார்த்தபடியே மெதுவாக போய்க் கொண்டிருந்த ராகவனை `ஏங்க வேகமாக போங்க பின்னாடி ஒருத்தன் என் இடுப்பை ஒருமாதிரி பார்த்துக் கிட்டே வாரான்` என்று அவன் மனைவி சொன்னாள், அவனுடைய கள்ளத்தனம் அறிந்து.

லஞ்சம் - குட்டி சிறுகதை

இந்த லிஸ்டில் உள்ள பொருளெல்லாம் நீ கடையில போய் வாங்கிவந்தேனா, உனக்கு பிடிச்ச சாக்லேட் தாரேன் என்று மகனை தாஜா செய்து கொண்டிருந்த ராகவி, தனக்கு வந்த போனை அட்டன் செய்கையில் அம்மா உங்க புருசன லஞ்சம் வாங்கின குற்றத்திற்காக போலிஸ் கைதுபண்ணிருக்கு, சீக்கிரம் பூந்தமல்லி ஸ்டேசனுக்கு போங்க என்றது ஒரு குரல்.

ஒரே செய்தி மீண்டும் மீண்டும் வந்திட

ஒரே செய்தி நீங்கள் படித்த முடித்த பின்னும் மீண்டும் மீண்டும் வந்து உங்களை கடுப்பேத்தும் படி உங்கள் நண்பர்கள் யாரேனும் செய்திருக்கிறார்களா. ஆம் என்றால் அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் நண்பர்களை கொஞ்சம் திக்குமுக்காட செய்திடுங்கள். இது ஒருவகையான குட்டி வைரஸ்(VIRUS) எனவோ, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலோ(HACKING) இல்லை என்றாலும் நண்பர்களை தவிர மற்றவர்களிம் விளையாடி விபரீதங்களை வளர்த்து கொள்ள வேண்டாம்.

நீங்கள் விளையாட்டுக்கு செய்யப் போய் அது வில்லங்கமாய் முடிந்து விடப் போகிறது. ஜாக்கிரதை(BEWARE)...

இனி செய்ய வேண்டியது-
1. உங்களுடைய நோட்பேடை(NOTEPAD) திறந்து(OPEN) கொள்ளவும்.

2. அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புரோகிராமை(PROGRM) அப்படியே தட்டச்சு(TYPE) செய்யவும். உங்களுக்கு மேலும் எளிதாக இருக்க நகலொன்றை(COPY) வேண்டுமாலாலும் எடுத்துக் கொண்டு அதை ஒட்டி(PASTE) விடலாம். ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வெறும் நகலெடுக்கும் பழக்கம் மட்டும் இருந்தால் அதில் உள்ள நுனுக்கங்களை கற்றுக் கொள்ள இயலாது போய்விடும். @ECHO off
:Begin
msg * Hi friend,
msg * This is a trick for
msg * Cycle Msg
msg * I learn from
msg * jagadeesktp.bogspot.com
GOTO BEGIN


3. எல்லாவற்றையும் தட்டச்சு செய்த பிறகு எதாவது ஒரு பெயரில் BAT கோப்பாக சேமித்துக் கொள்ளுங்கள். அதற்காக அதனுடைய கடைசியில் .BAT என்று தட்டச்சு செய்தால் போதுமானது.

4. இப்போது அந்த FILE வேறு வடிவத்தில் இருப்பதால், உங்கள் நண்பர்கள் ஏமாற மாட்டர்கள். எனவே அவர்களிடம் காட்டும் போது ஐகானை(ICON) மாற்றி விடுங்கள்.


















அவர்கள் அதை கிளிக் செய்து விட்டு படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். பிறகு இந்த வழி முறைகளை கற்றுக் கொடுத்து பாராட்டை பெறுங்கள். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளால் உங்கள் நட்பு இன்னும் வலுபெறும் என்பதில் ஐயமில்லை.

சனி, 11 ஜூலை, 2009

கவனம் - குட்டி சிறுகதை

ஏங்க வீட்டை நல்லா பூட்டிக் கோங்க, நேத்து மாதிரி சமைச்சு வைச்சிட்டு உள்தாழ்பாள் போடாம தூங்கிடாதிங்க. நான் வேலைக்கு போயிட்டு மதியம் சாப்பிட வந்திடறேன் என்று சொல்லிவிட்டுப் போனாள் அந்த ஏரியா எஸ்.ஐ.ராகவி .

எல்லோரும் இப்படிதான் - சிறுகதை

ராதாவுக்கு மண்டை உடைஞ்சு போச்சி ராமு சொல்வதைக் கேட்டதும் சம்பூரணம் வீட்டில் உள்ளவர்கள் பேசத்தொடங்கினர். ராதா பக்கத்து தெரு பெண்.ராமு எல்லோர் வீட்டிலையும் எடுபிடி வேலை செய்யும் பையன். உடனுக்குடன் செய்திகளை பரப்புவதில் வல்லவன்.
இதோட, மூனாவுது பேர். இந்த மணல் லாரியையெல்லாம் ஏன்தான் இந்தப் பக்கம் அனுப்பராகளோ இது கமலத்தில் பேச்சு
அட கருமாந்திரம் புடிச்சவங்க வேகமா வந்து நம்ம உயிர எடுக்கரத்துக்கே பார்க்குரான்னுங்கோ இது ரத்தினம்
பாவி பயலுக, அவளுக்கு குழந்தை பொறந்து இரண்டு மாசம் தானே ஆவுது. பச்ச புள்ள எப்படி தாங்குறாளோ இது சம்பூரணம்.
எல்லோரும் கொஞ்சம் வாய மூடுறீகளா. சொல்லவந்ததை முழுசா கேட்காம நீங்கபாட்டுக்கு ஏதேதோ பேசுரீகளே. ராதாவுக்கு மண்டை உடைஞ்சது உண்மைதான். ஆனா லாரில அடிப்பட்டு இல்ல.
பின்ன எல்லோரும் ஆவலானார்கள்
ராதாவோட புருசன் குடிபோதையில அவள தள்ளி மண்டையை உடைச்சுப்புட்டான் என்று ராமு கத்தினான்.
ஓ... குடும்ப பிரட்சனையா... அது தானா சரியாப் போயிடும் எல்லோரும் அவரவர் வேலையை கவணிக்க தொடங்க ராமுவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது.

தேவையில்லாததை மறைய வைத்திடுங்கள்





இந்த முறை நாம் பார்க்கப் போகும் கணினி விந்தை(COMPUTER TRIKS) FLODER OPTIONS-ல் இருந்து.நீங்கள் சாதாரணமாக பயண்படுத்தும் விண்டோவில் File and folder tasks, other places, details ஆகியவை இருக்கும். இதை நீங்கள் பயண்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்றால் அதை உங்கள் கணினியிலிருந்து நீக்கி விடலாம்.

ஆனால் இவை மிகவும் எளிய முறையிலான செயல்கள். இதனைப் பற்றி பின்பு உங்களுக்கு விளக்கமாக கூறுகிறேன். இப்போது அதை மறைய வைக்க, நீங்கள் செய்ய வேண்டியது-

1. விண்டோவை திறந்து விட்டு அதில் இருக்கும் tools-> folder options ஐ தேர்வு செய்யவும்.
2. இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும் folder options ல் task பகுதியில் இருக்கும் இரண்டாவது தேர்வை கிளிக் செய்யவும், படத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதி.
3. APPLAY செய்துவிட்டு, பிறகு OK செய்யவும்.
4. இப்போது விண்டோவை பாருங்கள் அது அழகான தோற்றத்துடன் உங்களுக்கு காட்டிசியளிக்கும்.

FOLDER OPTIONS -ல் இருக்கும் மற்றவற்றையும் முயன்று பாருங்கள். மாற்றங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் கவலை கொள்ள வேண்டாம் இருக்கவே இருக்கிறது, அற்புதமான RESTORE DEFAULTS . அதை கிளிக் செய்து பழைய நிலையை திரும்ப பெற்றிடுங்கள்.

கோவில்கள் இடிப்பு முதல் புதுபிப்புகள் வரை

அமைதியாக இந்து மதம் போதிப்பது ஒன்றை மட்டும் தான், அது அன்பு. பல வலைப்பூக்களில் இந்து மதத்தினை புரிந்து கொள்ளாதவர்கள், சில சம்பவங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு (பெரும்பாலும் பாபர் மசூதி இடிப்பு) சாடுகின்றனர். ஒரு உண்மையான விவாதத்தில் ஒரு செயலை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் முடிவெடுத்துவிடக் கூடாது.

ஆயிரமோ, இலட்சமோ மக்கள் பின்பற்றுகின்ற மதம் இல்லை இந்த இந்து மதம். கோடான கோடி மக்களின் இதயங்களை செம்மைப் படுத்துகின்ற பெரு மதம் இந்த இந்துமதம். எப்படி முகமது அலி பதினெட்டு முறை படையெடுத்து வந்து கோயில்களின் பெரும் செல்வத்தை எடுத்துக் கொண்டு ஓடியதுடன், அந்த கோய்ல்களையும் இடித்து விட்டதாக வரலாறு சொல்கிறதோ, அது போல பாபர் மசூதி இடிப்பும் ஒரு வரலாறுதான்.

இன்று எத்தனை இந்துகள் முகமது அலியின் மீது பகையோடு இருக்கிறார்கள். அல்லது ஆப்கானில் இருந்த புத்தர்கள் சிலையை பீரங்கி வைத்து தகர்த்து எரிந்துவிட்ட முகமதியர்கள் மீது யாராவது பகையோடு இருக்கிறார்களா. எதுவும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக மக்களை கோமாளிகள் ஆக்கி இங்கு நடக்கும் செயள்கள் வேடிக்கையானவை.

மீண்டும், மீண்டும் எல்லை தாண்டிய பயங்கிரவாதமாக சிங்கிலர்கள் இங்கே தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர். அதைக் கண்டிக்கவும், அனையை உயர்த்துதல், புது அனையை கட்டுதல் என்று தமிழக விவாசாயத்தை அடியோடு அழித்திடும் கேரளா அரசின் போக்கை எதிர்க்கவும் ஊடகங்கள் ஒன்றுபட வேண்டும்.

இன்னும் எத்தனை காலங்கள் தான் பாப்பானியம், இந்துத்துவம் என்ற குற்றசாட்டுகளை மட்டுமே கையாளுவார்கள் எனத் தெரியவில்லை. இந்துக்களிலும் சில கோபக்கார ஆசாமிகள் உண்டு என்பதன் உண்மைதான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம். கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒருவேளை நீங்கள் நாத்திகர்களாக இருந்தால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பை கொண்டுவரவே மதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் இந்து மதம் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் புத்தமும், சமணமும் தோன்றிய நேரத்திலேயே இந்து மதம் அழிந்திருக்கும். மக்களுக்கு தேவைப்படுகின்ற ஒன்றை தடுப்பதற்கோ, விவாதம் செய்வதற்கோ எவருக்கும் உரிமையில்லை.

அடுத்து ராமர் பாலம் பிரட்சனை. மக்களுடை நம்பிக்கை, நலம் என்ற இரண்டு விதமான மாறுபட்ட செயல்கள் ஒன்றாய் இருக்கும் இந்த பிரட்சனையில், நான் மக்கள் நலனையே கவனத்தில் கொள்கின்றேன். ஒருவேளை சேது சமுத்திர திட்டம் சரியாக நிறைவேறினால் தமிழ் நாட்டிற்கு இரண்டு நன்மை உண்டு.
1. கப்பல்கள் வருகையால் பாதுகாப்பு கூடும், இது தமிழக மீனவர்களின் மீதான இலங்கை ரானுவத் தாக்குதல்களை குறைக்கும்.
2. மக்களுடைய வரிப்பணம் விரயமாவது தடுக்கப்படுவதோடு, தமிழக துறைமுகங்களில் கப்பல்களின் வருகை பெருகும்.

ஆனால் இது எல்லா மக்களின் பூரண சம்மதத்தோடு நடக்கவேண்டிய ஒன்று. மக்களின் சம்மதம் இல்லாமல் முந்நாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததுபோல, மீண்டும் ஒரு தவறை நிகழாமல் செய்யவேண்டும்.
என்னுடைய கவிதை வலைப்பூவிற்காக நான் எழுதிய கவிதை.

ராமர் பாலம்

கடவுள் மனிதனைக் காத்தது போய்
மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்
மக்களுக்கு நன்மையென்றால்
ராமனென்ன மறுக்கவாப் போகிறார்
பாலம் உடைத்து பாதை அமைக்க?

இந்து மக்கள் சேது சமுத்திர திட்டத்தை கண்டிப்பாக வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்கள் அன்பினால் ஆனவர்கள். தம்மை வருத்திக்கொண்டு பிறருக்கு உதவும் போக்கு அவர்களுக்குள் கலந்திருக்கின்றது.

இறுதியாக கோவில்கள் புதுப்பித்தலைப் பற்றி... பல பிரம்மாண்டமான இந்துக்கோவில்கள் பராமரிக்க யாருமின்றி இருந்தாலும். தற்போது சில கோவில்கள் அன்பர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் ஒவ்வொறு தெருவிலும் புதுப்புது கோவில்கள் உதித்துக் கொண்டிருந்தாலும், பழமையான புராதானச் சிறப்புகள் கொண்ட கோவில்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எனவே அதிக பணம் கொடுத்துதான் புதுபிக்க வேண்டும் என்றில்லை, இயன்றதை தந்து உங்கள் அருகிலுள்ள கோவில்களை பராமரியுங்கள். ஈசன் உங்களுக்கு என்றும் அருள் செய்வான்.

கணிப்பொறியில் மை கம்பியூட்டரை திறக்க எளிதான வழிகள்

மை கம்பியூட்டரை (MY COMPUTER) நீங்கள் ஓப்பன் செய்ய வேண்டுமானால், என்ன செய்வீர்கள்.ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று அதில் மை கம்பியூட்டரை கிளிக் செய்வீர்களா அல்லது டெஸ்க் டாபில் உள்ள மை கம்பியூட்டரின் சாட் கட்டை பயண்படுத்துவீர்களா.

அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படியுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும். சூ மந்திரக் காளி என்ற மந்திரம் போல இது வேகமாக செயல்படும்.(சும்மா தமாசுக்கு)

நீங்கள் செய்ய வேண்டியது-

1. விண்டோஸ் கீயுடன் சேர்த்து E பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு எஸ்போலர்(EXPLORER) கிடைக்கும்.இது ஒரு வகையான வழிமுறை.

2. விண்டோஸ் கீயுடன் சேர்த்து கீயை அழுத்தி ரன் புரோகராமை திறந்து கொள்ளவும். அதில் மூன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை வைத்துவிட்டு என்டர் செய்யவும். இப்போதும் உங்களுக்கு மை கம்பியூட்டர் கிடைக்கும்.

3. இறுதி வழி முறை என்னவென்றால் இரண்டாவது படியில் உள்ளதைப் போன்று ரன் புரோகிராமை திறந்துவிட்டு, அதில் explorer என்று டைப் செய்த பின் என்டர் செய்யவும்.

இந்த மூன்று வழிமுறைகளும் உங்களுடைய கணிப்பொறியை நீங்கள் இயக்கும் வேகத்தை அதிகரிக்கும் என்பதில் அச்சமில்லை. முயன்று பாருங்கள். நண்பர்களிடம் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். ஈசன் அருள் புரியட்டும்.

வலைப்பூவின் மாற்றம்

எமக்கென ஒரு தனித் தன்மை கிடைப்பதற்காக தான் இந்த பட்டாம்பூச்சி வலைதளத்தினை ஆரமித்தேன். அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதியாகவும், நடைமுறையில் அறிவியல் சார்ந்த படிப்பின் காரணமாகவும் எனக்குள் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் பகிர்தலினால் அறிவு குறைவதில்லை வளர்கின்றது. அதனால் தான் சிவராத்திரி கதைகள், சித்தர்களின் மகிமைகள், சித்தர்களின் பாடல்கள் என்பவைகளை வெளியிட்டு வந்தேன். பழைமைகளை மறக்காமல் கடைபிடித்தாலும், புதியவைகளின் தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

இத்தனை தமிழ் வலைப்பூக்கள் இந்த வலைதள உலகில் பூப்பதற்கு முக்கிய காரணம், தனித் தன்மையும், பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற பெரிய மனமும் தான். உலக அளவில் புகழ் பெற்றவர்கள் முதல் என்னைப் போன்ற மாணவர்கள் வரை வலைப்பூக்களை தொடங்க காரணமும் அதுதான். மொத்தத்தில் அனைவருக்கும் ஒரு தனி இடம் தேவைப்படுகிறது. என்னுடைய இடத்தினை நான் நிறைவு செய்ய சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரப் போகின்றேன்.

சற்று நாட்களுக்கு முன்பு வரை வெறும் ஆன்மீக வலைப்பூவாக வாசம் வீசிய இந்த வலைப்பூ, இனி கணினி பற்றிய தேடல்களுக்கு விடை சொல்லும் வலைப்பூவாகவும் மாறுகிறது. இந்த மாற்றம் சக வலைதள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் போய் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது வரை வந்தவை தொடரும், அத்துடன் கணினி சம்மந்தமான கட்டூரைகள், வினா விடை என புதிய பகுதிகளும் வெளிவரும்.

அறிவியலும் ஆன்மீகமும் கைகோர்த்து வலம் வரப்போகின்ற இந்த வலைப்பூவில், ஆங்கிலமும் சேருகிறது. கணினி பற்றிய சேதிகளில் சற்று கூடுதலாக தமிழில் தந்தால் மிகவும் அது சிரமமாக இருக்கும் என்பதாலும் பயண்பாடுகள் முறையில் ஆங்கிலம் தவிர்க்க இயலாததாக மாறிவிடுகின்ற காரணத்தினாலும் முழுமையான தூய தமிழில் கட்டூரைகளை வெளியிட இயலாது என்பது சற்று வருத்தமானது.

ஆனாலும் வலைதள நண்பர்கள் பலர் தமிழ்99 என்ற ஒரு பெரிய மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி, தமிழை காக்க போராடும் போது என்னுடைய இந்த சிறிய வலைப்பூவும் உதவும் என நம்புகிறேன். தமிழின் பெருமை அதன் தொண்மையில் இல்லை, அதன் பயண்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்ந்து பலரும் தமிழை பயண்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஈசனின் ஆசிர்வாதங்களோடு உங்களுடைய ஆசிர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கணினி பற்றிய தேடுதல்களுக்கும், தெரியாத புதிர்களுக்கும் விடை தேடி பயணத்தை தருகிறேன். எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வரை காத்திருந்த அன்பானவர்களுக்கு நன்றிகள் பல.

உங்கள் மேலான கருத்துகளை இடுங்கள், அது மட்டுமே இந்த அன்பன் மீது நீங்கள் வைத்திருக்கும் மாறாத அன்பிற்கு சான்று.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!

வெள்ளி, 10 ஜூலை, 2009

பெயின்டில் படம் பாருங்கள்

பலருக்கும் பெயின்ட்டில்(PAINT) படம்(DRAWING) வரைவது தெரிந்திருக்கும்.ஆனால் நான் இப்போது சொல்லப்போவது திரைப்படங்களை(MOVIE) பெயின்ட்டில் பார்ப்பது பற்றி.இது மிகவும் எளிது.கவனமாக கவனியுங்கள்.

இனி செய்ய வேண்டியவை,
1. பெயின்டை திறந்து கொள்ளுங்கள்.
2.ஏதாவது ஒரு பிலேயரில்(PLAYER) படத்தை ஓடவிடுங்கள்.
3.அது ஓடிக்கொண்டிருக்கும் போது உங்கள் கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கீரினை(PRIENT SCREEN) அழுத்துங்கள்.
4.இப்போது பெயின்டில் CTRL+V ஐ அழுத்தி பேஸ்ட் செய்யுங்கள்.அல்லது பெயின்டில் எடிட்(EDIT) மெனுவிற்கு சென்று பேஸ்ட் செய்யுங்கள்.
5.பிலேயரை மினிமைஸ்(MINIMIZE) செய்யாமல் நீங்கள் பெயின்ட்டை திறந்தால் படம் ஓடுவது உங்களுக்கு தெரியும்.



படத்தினை பிலேயர் வழியாக இல்லாமல் பெயின் வழியாக பாருங்கள்.இது போன்ற சில வினோதமான ஆச்சிரியப்பட வைக்கும் வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்தால் கருத்துகளில் சொல்லுங்கள்.இல்லையேல் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

அடுத்த கணினி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

காணாமல் போகும் எழுத்துகள்

இதுவும் நோட்பேட்(NOTEPAD) அதிசயம்தான்.

இதற்கு செய்ய வேண்டியது,
1.நோடபேட் ஒன்றை புதிதாக திறக்கவும்.
2.அதில் Bush hid the facts என்று டைப் செய்யவும்.
3.இந்த நோட்பேட்ஐ ஏதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்(SAVE).
4.இப்போது நோட்பேடை மூடி விட்டு,மீண்டும் திறந்து பார்க்கவும்.





நீங்கள் டைப் செய்ய எழுத்துகள் மாறிப்போயிருக்கும்.சிலருக்கு படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்றும் வேறு சிலருக்கு கட்டம் கட்டமாகவும் தோற்றம் அளிக்கும்.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் 4 3 3 5 என்ற சொற்களால் அமைந்த வாக்கியங்கள் யுனிக்கோட்(UNICODE) முறையில் ஏற்றுக் கொள்ளப் படாத்தே என்கின்றனர் நண்பர்கள்.

வேறு சிலவற்றையும் முயன்று பாருங்கள்.அடுத்த கணிப்பொறி ஆச்சிரியத்துடன் பிறகு சந்திக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துகள் இடுங்கள்.செய்து பார்த்துவிட்டு சந்தேகம் ஏற்பட்டால் jagadees1808@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள்.