தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

புதன், 28 ஏப்ரல், 2010

மாதா அமிர்தானந்த மயி சிந்தனைகள்




யாரையும் புகழ வேண்டாம்

* பிறரிடம் கூறி உங்களது கவலைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். கூறுவது என்று முடிவெடுத்தால் கடவுளிடம் மட்டும் கூறுங்கள். நம் கவலைகளை சர்வேஸ்வரனிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்.

* நான் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் இறைவனே செய்கிறார் என்ற உறுதியான உணர்வு கொண்டவன் எந்த இடத்திலும் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவன் எல்லா இடத்திலும் ஆண்டவனையே பார்க்கிறான்.

* நான் செய்கிறேன் என்ற எண்ணம் கொண்டவன் தான் செய்யும் நல்ல, தீய செயல்களுக்குப் பொறுப்பாளியாகிறான். அவனுக்கு எல்லாச் செயல்களையும் கடவுள் செய்விக்கிறார் என்ற எண்ணம் உண்டாவதில்லை.

* எச்செயலையும் இறைவனுக்கு அர்ப்பணமாக்கி செய்யத் தொடங்கினால் அச்செயல் புனிதமாகி விடும். சாப்பிடுவதாக இருந்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பின்பே சாப்பிடும் போது உணவு புனிதமாகி விடுகிறது.

* ஆன்மிக வாழ்வின் நோக்கமே நமக்கு சொந்தமில்லாதவற்றை உதறி விடுவதாகும். இதைத் தான் துறத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு சொந்தமான கடவுளை மட்டும் பற்றி நிற்பதே உண்மையான ஆன்மிக நிலைப்பாடாகும்.

* யாரையும் புகழ வேண்டாம்.புகழ்ச்சியை விரும்பவும் வேண்டாம். புகழை விரும்பினால் நம்மை அறியாமலேயே அகங்காரம் வளர்ந்து விடும். என்றும் ஒரே நிலையில் இருக்கும் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழக்கூடாது.


உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்


* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா?

* சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும்.

* உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல்.

* மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள்.

அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம்.

* ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது. வேறொருவருக்கு ஏணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, ஞானிகள் இறைவனுடன் நேரடித் தொடர்புடையவர்கள்; நாமோ இறைவனை படிப்படியாய் முயன்று அடைகிறவர்கள். அவரவர் பக்குவத்துக்கேற்ப சாதனம் தேவைப்படும்.

* நம் உறவினரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவரையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. ''படத்தை ரொம்ப அருமையா எடுத்திருக்கிறார் போட்டோகிராபர்,'' என்போம். அதற்குமேல் போட்டோகிராபரோ, கேமரா நுணுக்கமோ நம் நினைவுக்கு வராது. அதுபோல் தான் இறைவனின் நற்குணங்கள் தெரியும். அவனை ஆராய வேண்டுமென்றால் முடியாது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இசுலாத்தில் தீண்டாமை

இந்து மதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறது என்றார் பெரியார். அது கிறித்துவ மதத்திற்கும் இப்போது போய்விட்டது. இஸ்லாத்தில் இல்லை என்றார்கள். ஆனால் விக்கிப் பீடியாவில் இப்படியொரு கட்டுரை.

சாதியமைப்பு

அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர் என்பதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அஷ்ரப் அல்லாதவர்களில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.


முஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகின்றனர்.


இந்திய முஸ்லிம் பண்பாட்டு ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளதாக குறிப்பிடுகிறார். வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லப்பட்டனர்.


ஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.


வங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகளை முஸ்லிம் ஆய்வாளர் எம்.கே.ஏ. சித்தீகு விளக்குகிறார். டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்.


இந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.


ஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.


மேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொழி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.


பஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்.


உத்திரபிரதேசத்தில் முஸ்லிம் சாதி கலாச்சார தொடர்பு குறித்த தனது ஆய்வில் கெüஸ் அன்சா தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகளுக்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு[சான்று தேவை]. .


லீலாடூப் கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவுகளில் வாழும் மக்களின் சமூக படிநிலை குறித்த ஆய்வில் மூன்று விதமான அடுக்குகளை குறிப்பிடுகிறார். பழங்குடி முஸ்லிம்கள் 95 சதவிகிதத்திற்கு மேல் இங்குதான் வாழுகிறார்கள். நம்பூதிகள், நாயர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் காரணமானவர்களாக கோயாக்கள் உள்ளனர். சமயத் தூய்மையின் அடையாளமாக கருதப்படும் இவர்கள் நிலங்களின் ஏகபோக உமையும், போக்குவரத்து படகுகளின் உமையும் பொருளாதார வலிமை கொண்டதாக உள்ளது. அடுத்தப் பிவினராக உருக்கார்ஸ் மாலுமிகள் படிகோட்டி சாதியினராகவும், மிளசேரிஸ் மரம் ஏறும் தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.


கபோயவு) பவுத்தர், இந்துக்கள் அதிகமாக வாழும் நேபாளத்தில் நான்கு சதவிகிதமே வாழும் முஸ்லிம்கள் பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீரத்து முஸ்லிம்கள் உயர்குடி அஷ்ரபுகளாக வாழ்கின்றனர். நாவிதத் தொழில், சுன்னத் செய்வதற்கு இந்திய முஸ்லிம்களிலிருந்து செலவு செய்து அழைக்கின்றனர். செல்வ நிலை உயர்ந்ததும் வேறு தொழிலுக்கு பெயர்ந்து விடுவதால், மீண்டும் புதிய நாவிதர்களை அழைக்கிறார்கள்.


காட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும்.

பாகிஸ்தானிலும் சாதியபடி நிலை அமைப்பு இறுக்கமாகவே காணப்படுகிறது. வடபாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் முஸ்லிம் சமூகம் குவாம்கள் குழுக்களாக தொழில் அடிப்படையில் பிரிந்துள்ளன. குழுக்களுக்கிடையிலான திருமணம், ஒன்றாக வாழ்தல் என்பவை மேல் - கீழ் பாகுபாடுகளால் பாதிப்படைந்தும் உள்ளன. மனிதக் கழிவுகளோடு தொடர்புடைய தொழில்களைச் செய்வோர் அடிநிலைப் பிவாகவே கருதப்படுகின்றனர். அடிநிலை சாதி முஸ்லிம்கள் உயர்சாதியினரால் உமைகள் மறுக்கப்படுபவர்களாகவும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்.


பாகிஸ்தானின் 1959, 1979 களில் இடம் பெற்ற நிலச்சீர்திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாமைக்கு காரணமாக நில உடைமைத்துவத்தை பாதுகாக்க நின்ற உலமாக்களை குறிப்பிடலாம். சிந்து மாகாணப்பகுதி முஸ்லிம் விவசாயிகள் தாழ்நிலை வாழ்வுக்கு காரணம் இறைவன் ஏற்படுத்திய தக்தீர் எனும் விதிக் கோட்பாடே என பிரச்சாரம் செய்யும் பீர் மற்றும் சீர்சாதாக்களின் கருத்தாளுமையாலும் ஒடுக்கப்பட்டே இருக்கிறார்கள். இந்த பீர் மற்றும் சீர்சாதாக்கள் கி.பி. 711ல் சிந்துவில் நுழைந்த அரபு பூர்வீகர்களின் வழித்தோன்றலில் உருவான இஸ்லாமிய சமயத் தலைவர்களாக இருக்கிறார்கள்.


முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இத்தகையதான சாதீய படிநிலை கட்டமைப்பை தத்துவரீதியாகவும், கோட்பாட்டு ரீதியான பார்வையிலும் அங்கீகக்கும் வகையில் திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துச் சொல்லி ஆதிக்க கருத்தியலை நிலைநாட்டத் தகுந்த விளக்கங்களை சில அறிஞர்கள் சொல்ல முற்படுகின்றனர்.


மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறை அச்சம் கொண்டவர்கள் தான். (திருக்குர்ஆன் அத். 49 அல்ஹ÷ஜ÷ராத், வசனம் 13)


திருக்குர்ஆன் ஆண் / பெண் என்பதான பாலின வேறுபாட்டையும், பல்வேறு குலங்கள், கோத்திரங்கள் சமுதாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த மேல் கீழ் வேறுபாடுந்தன்மையை இறை அச்சுக் கோட்டின் அடிப்படை மூலமே கண்டடையமுடியும் என்பதான கருத்தியலை முன்வைக்கிறது. சமூக தன்மையை, ஆன்மீகத் தன்மையால் இடம் பெயரச் செய்கிறது.


மக்காவில் வாழ்ந்த அரபிகள் குறித்த பார்வையிலும் இறைவனையும் மறுமையையும் நம்பாத அரபிகள் குறித்து எதிர்மறைக் கருத்துக்களையே திருக்குர்ஆன் முன்வைக்கிறது. நாட்டுப்புறத்து அரபிகள் அல்லது காட்டரபிகள் குறித்த பல பதிவுகளில் கீழ்க்கண்டதும் ஒன்று. நிராகப்பிலும் வஞ்சகத்திலும் காட்டரபிகள், மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். (அத்யாயம் 9: அத்தெüபா வச. 97)


நபிமுகமது வாழ்ந்த அரபுச் சமூகங்களில் இன, குல, கோத்திர வேறுபாடுகளும், ஒரு இனம் அல்லது குலத்தின் மேலாதிக்கமும் இருந்துள்ளது. ஹதீஸ்களின் மூலமாக தெயவருகிறது. அரேபிய சமூகத்தில் இன அடிப்படையில் மிகப்பிரதானமாக அரபுகள், பாரசீகர்கள், ரோமர் இனங்கள் வலுவாக இருந்துள்ளன. அரபு இனத்திற்குள்ளேயே குறைஷியர், தமீம், முளர், ரபீஅ உள்ளிட்ட பல கபாயில் குலங்களும் அஸ்ஸம், கிஃபார், முûஸனர் குலங்களும், பிறவகைகளான பனூதமீம், பனூஆமிர், பனூஅஸத், பனு சதப்பான், ஹவாசின், கஹ்தான் குலங்களும் வாழ்ந்து வந்தன.


நபி முகமது வாய்மொழி வரலாறுகளின் வழி குறைஷி குலமே மிகமுக்கியமாக அரபுச் சமூகத்தின் பின்பற்றத்தக்க குலமாகவும் ஆளும் தகுதி படைத்த உயர்குலமாகவும் கருதப்பட்டுள்ளது.


1. மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளை பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமிலிருப்பவர்கள் குறைஷிகளில் முஸ்லிமாயிருப்பவரை பின்பற்றுபவர் ஆவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறைமறுப்பாளரை பின்பற்றுபவர் ஆவார். (புகா, ஹதீஸ் 3495, அபுஹ÷ரைரா அறிவிப்பு)


2. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. (புகா ஹதீஸ் 3501, இப்னு உமர் (ரலி) அறிவிப்பு) இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் கபாவின் நிர்வாகமும், ஹாஜிகளுக்கு நீர், உணவு அளிக்கும் பொறுப்பும் குறைஷிகளுக்கே இருந்துள்ளது. ஆட்சியதிகாரம் மட்டுமல்ல, குறைஷி குலம் பேசிய வழக்கு மொழியில்தான் அமைந்துள்ளது குர்ஆன் கூட இறங்கப்பட்டது.


கிழக்கு திசையிலிருந்துதான் குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் ரபீஅ மற்றும் முஸர் குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையேதான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும். (புகா ஹதீஸ் 3498, அபூமஸ்ஊத் அல் அன்சா அறிவிப்பு)


ரபீஅ மற்றும் முஸர் குலாம்களைச் சார்ந்த கிராமப்புற மக்கள் முரட்டுத்தன்மையும், இறுகிய பிடிவாத குணமும் கொண்டுள்ளவர்கள் என்பதான குற்றச்சாட்டு ஆதிக்கத் தன்மை நோக்கிலான பிற குலங்களின் அணுகுமுறையாக அமைந்துள்ளதை கவனப்படுத்திக் கொள்ளலாம். இந்த வகை ஆதிக்க கருத்தியல் அணுகுமுறை இந்திய முஸ்லிம் அமைப்பின் சாதீய படிநிலைக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறதா என்பதான கேள்வியும் இங்கு எழுப்பப்படுகிறது.


இஸ்லாமியர் ஆட்சியின் மத்திய கால உலமாக்களின் நூல்களில் சாதீய படிநிலைக்கு ஆதரவான கருத்தியல்கள் பல இடம் பெற்றுள்ளன என்பதை நவீனகால இஸ்லாமிய ஆய்வாளர்களில் ஒரு சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லி நேரு பல்கலைக்கழக அரபு மொழித்துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மசூத் ஆலம் பலா இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி þ தீண்டாமை குறித்த ஆய்வில் இதனை தெவித்துள்ளார்.


இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி அறிமுகப்படுத்தி எழுதியும் வரும் யோகிந்தர் சிக்கந்த் இந்திய முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமும் சாதிய வேறுபாடுகளும் ஆய்வின் வழியாகவும் இதனை நிறுவுகிறார். உலக முஸ்லிம்களின் இரு முக்கியப் பிவுகளாக சுன்னி மற்றும் ஷியாக்கள் உள்ளனர். திருக்குர்ஆன், ஹதீஸ் நபிமுகம்மதுவின் வழிகாட்டுதல்களோடு சுன்னிகளும், கூடவே நபிமுகமதுவின் மருமகனார் இமாம் அலி மற்றும் அவர் தம் மரபினர்களின் ஹதீதுகளோடும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக ஷியாக்களும் உள்ளனர்.


இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தேவ்பந்த், பரெல்வி எனப்படும் தெற்காசிய முஸ்லிம்களில் சுன்னி பிவினர் இருபெரும் சட்டப் பள்ளிகளுக்குள் தங்களை வரையறுத்துக் கொள்கின்றனர். ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிகி என்பதான துணைப் பிவுகளான மத்ஹபுகளின் சிந்தனைகளும் இதில் உள்ளடங்கும்.


டெல்லியில் 1867ல் தேவ்பந்த் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்ட மதரஸô இஸ்லாமிய சமய நிறுவனத்திலிருந்து உருவாகி வரும் சமய அறிஞர்கள் தேவ்பந்த் அறிஞர்களாக கருதப்படுகின்றனர். இந்த தோற்றுவாயிலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி, தலிபானியம், வகாபிய இயக்கங்களின் அறிஞர்களும் உருவாகி வந்துள்ளனர். ஹனபி மார்க்கச்சட்டப் பள்ளி சார்ந்த கருத்துக்களை, நூற்களை எழுதியுள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர். சவூதி ஹன்பலி மத்ஹபு சிந்தனைகளின் தாக்கமும் மிகுந்த அளவில் இதன் வழியாகவே உருவாகியுள்ளது. இப்பிவின் பெரும்பான்மையினர் சூபிச கோட்பாட்டிற்கு எதிராகவுமே இயங்கியுள்ளனர்.


இதற்கு மாற்றமாக பரெல்லி பிவினர் சூபிசம், சூபிஞானிகளின் தர்கா வழிபாடுகளில், தங்களை பழக்கப்படுத்திக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதம் பரெல்லி, இருபது சதவிகிதம் தேவ்பந்த், விஷயாக்கள் பதினெட்டு சதவிகிதம் பரெல்லி இருபது சதவிகிதம், தேவ்பந்த், ஷியாக்கள் பதினெட்டு சதவிகிதம் அஹ்லெ ஹதீத் 4 சதவிகிதம், இஸ்மாயிலிகள், அகமதியாக்கள் இரண்டு சதவிகிதம், பிற சிறுபான்மையினர் நான்கு சதவிகிதம் என்பதான ஒரு கணக்கீடும் உள்ளது.


தேவ்பந்த், பரேல்வி, அஹ்லெஹதீத், ஜமாத்-இஸ்லாமி அறிஞர்களின் நூல்களை ஆய்வு செய்து மசூத் ஆலம் பலா சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். தேவ்பந்த் மதரசா கல்வி நிறுவனத்தில் பிறப்பு அடிப்படையிலான தகுதிக் கோட்பாடான காஃபாவை முன்வைத்து இஸ்லாத்தில் சாதித் தன்மையை வலியுறுத்தும் நடைமுறை இருப்பதுவும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என்கிறார். மேலும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தியாவின் சூபி அறிஞரான ஷாவலியுல்லாவும் பிறப்பு அடிப்படையிலான காஃபா கோட்பாட்டுக்கு வெளியே மணஉறவு கொள்வது கொலை செய்வதை விடவும் அபாயகரமானது எனக்கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.


திருக்குர்ஆன் முஸ்லிம்களின் சமத்துவம் பற்றி பேசினாலும் சாதி இந்திய முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது. மேல் - கீழ் தன்மை வெளிப்படுகிறது. தொழில்வகை சாதிக் குழுக்கள் இந்து சமூக நிலையின் கூறுகள், பிராமணிய பிரதிகளில் உள்ள உயர்சாதி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய நீதி வல்லுனர்கள் சாதியின் ஒப்புத் தன்மைக்கு, காபா என்னும் தகுதிக் கோட்பாட்டிற்கு சமயரீதியான விளக்கமும் அளிக்கிறார்கள். காபா, சாதி, சாதீய மேலாண்மை கொடை சமூக அடுக்குகள், உலமாக்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் திருக்குர்ஆனின் சமத்துவத்திற்கு எதிராகவே இது செயல்படுகிறது.


பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்துயிசமிருந்துதான் மதம் மாறியிருக்கிறார்கள். தனிநபர் மதமாற்றம் மத்தியகாலத்தில் மிகவும் குறைவு. மதமாற்றம் கூட்டு சமூக நடவடிக்கை. எனவே இம்மாற்றத்திற்கு பிறகு திருமணங்கள் உண்மையான சாதிக்குழுக்களிடையே நடைபெற்றது. மதமாற்றம் நிகழ்ந்தபோதும் உள்ளூர், இஸ்லாத்திற்கு முந்திய நம்பிக்கைகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்தன. இந்து கலாச்சார தாக்கமும், நம்பிக்கைகளும் சாதி கலந்த நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தில் நிலவின.


இந்திய முஸ்லிம்கள் பற்றிய எழுத்துக்களில் மேன்மைமிகு சாதியினர் அல்லது அஷ்ரப், கீழ்நிலையினர் அல்லது ரஸில், கமின் அல்லது அஜ்லப் ஆயினர். நவீன சமூக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே இந்த அஷ்ரப் þ அஜ்லப் பிரிவினையாகும். இதனை மத்திய காலத்து அஷ்ரப் அறிஞர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி தங்கள் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள்.


உள்ளூரில் மதம் மாறியவர்களைவிட அரபு மத்திய ஆசியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழித்தோன்றல்கள்தான் சமூக அந்தஸ்து மிக்கவர்களாக பாவிக்கின்றனர். இது இன வித்தியாசத்தையும் உள்ளடக்கியதாக குறிப்பாக அஜ்லவுகள் கறுத்த தோலுடையவர்களாகவும், அஷ்ரபுகள் வெள்ளை நிறம் சார்ந்ததும், அரசியல் ஆதிக்க படிப்பாளிகளாகவும் அதே சமயம் அஜ்லப்கள் முன்னோன் கைவினைத் தொழில், விவசாயம் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த அடித்தள தொழில்ககளை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். குர்ஆனை தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஏற்ப பயன்படுத்தியும் கொண்டார்கள்.


மிகப்பெரிய கட்டுரை இது. படிக்க ஆர்வம் கொண்டவர்கள் இங்கு சொடுக்கவும்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

குருநானக் கதை

ஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.


ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. இத்துடன் குளிர் வெட வெடக்க வைப்பதாக இருந்தது.


அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.


அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!''


இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. "ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?'


"ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?'


அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை! என்றாலும் எவரும் கேட்கவில்லை. அவர்கள் அங்கிருந்து நடக்கத் துவங்கினர். அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.


"இங்கு என்ன நிலைமையோ?' என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.


அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், ""வாருங்கள், வாருங்கள்...'' என்று மிக மிக அன்புடன் வரவேற்றனர்.


""சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?'' என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டினர். அவர்களுக்கு உணவு தரப்பட்டது. நீர் தரப்பட்டது. தங்கியிருக்க இடம் தரப்பட்டது. படுக்கை தரப்பட்டது. பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.


சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.


""இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.'' என்றார்


இந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.


""என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு... இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?


""இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு!'' இதைக் கேட்டு விட வேண்டும்! என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை. சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.


""அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.


""ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழி யில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.


""விருந்தினர்கள் நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும் நகரம் எங்கும், நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்று விளக்கம் கூறினார்.


குருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.


மனதில் தெளிவு வேண்டும்!