விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !
- கவிஞர் வாலி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,
- ஜெகதீஸ்வரன்.
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 26 ஜூன், 2010
வெள்ளி, 4 டிசம்பர், 2009
வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.
உலகம் முழுதும் தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லி திரியும் கூட்டத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள் மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாய் இருப்பதை உலகிற்கு எடுத்து சொல்வதே இக் கட்டுரை.
ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.

என்பதாம் திருமணம் கருணாநிதியின் ஊரான திருவாருர் தியாகராஜர் சந்ததியில் ரகசியமாக நடந்ததாக சில நாளேடுகள் சொன்னன. தகுந்த ஆதாரம் இல்லாத்தால் அவற்றை விட்டுவிட வேண்டிதுதான். ஆனால் நெருப்பின்றி புகையாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் பூஜை செய்து கடவுள் அருளை பெறலாம். தினம் கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழ் நாட்டின் ஏழை பாமரன் மட்டும் பூஜை செய்ய கூடாது. இதாவது பரவாயில்லை. இந்து மதத்தின் விழாக்களை பொய் என்றும் அவற்றை கொண்டாட கூடாதென்றும் அறிக்கை விட்டுவிட்டு குடும்பத்துடன் இவர்கள் கொண்டாடியிருக்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி தீபாவளியின் போது ஆதவன் படம் பற்றி பேச சூரியாவுடன் காப் வித் அனுவில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது தீபாவளி என்றால் மாறன் மாமா குடும்பம், மற்றும் எல்லா சொந்தங்களும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது 5000 வாலா, 10000 வாலா போன்ற பெரிய பெரிய பட்டாசுகளையெல்லாம் மாமா, அப்பா போன்ற பெரியவர்கள் வைப்பார்கள், நான் குஜிலி பட்டாசு வைப்பேன் என்று சொன்னார்.
நரகாசுரன் செத்து போனதை நாத்திகர்களின் தலைவன் குடும்பம் கொண்டாடலாம். அதுவும் மாறன் போன்ற தி.மு.க பெரியவர்கள் குடும்பத்துடன். ஆனால் பாவப்பட்ட ஏழை தொண்டனின் குடும்பமும், குழந்தையும் கொண்டாட கூடாது. அடடா என்ன ஒரு தீர்ப்பு. என்ன ஒரு தீர்மானம். பல வருடங்களாக குடும்பமே சேர்ந்து தீபாவளியின் போது ஆயிரமாயிரம் வாலாக்கலாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி எதுவும் நடக்காதது போல நரகாசுரனைப் பற்றியும் , பகவான் கிருஷ்ணனைப் பற்றியும் குறை பேசி அறிக்கை விட்டுவிட்டு பட்டாசு கொலுத்த போய் விடுகிறார். அதெல்லாம் தெரியாமல் பாவப்பட்ட நாத்திகன் தன் குழந்தையை தெருவில் வேடிக்கை பார்த்து வைக்கின்றான்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் இந்து சாமியார் சத்திய சாய் பாபாவை வீட்டிற்கே அழைத்துவந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அதுவும் யார் முன்னிலையில் பகுத்தறிவு பகலவன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் முன்னிலையில். உண்மையான நாத்திகவாதியென்றால் அப்படி செய்ய விட்டிருப்பாரா. கருணாநிதியின் மனைவி மட்டுமல்ல உடன் இருந்த தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்டார்கள். இந்துகளில் சிலரே நம்பாத சாமியாரான சத்திய சாய் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரிடம் மோதிரமும் செயினும் வாங்கியதை மேடையில் பரவசமாய் பேசிவிட்டு இவர்களால் எப்படி மீண்டும் பெரியாரை பற்றி பேச முடிகிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என்றல்லவா இந்த கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பார்களா நம் மக்கள்.
இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்த எல்லா மனிதர்களுக்கும் அவரின் மீது அமர்ந்திருக்கும் மஞ்சள் துண்டைப் பற்றி தெரியும். தொடக்க காலத்தில் திமுகாவினரின் தெருகூட்டும் துண்டுகளை தான் கருணாநிதியும் அணிந்திருந்தார். பதவி ஆசையும், அதை தக்க வைக்கவும் பிரபல சோதிடர் அணிய சொன்னது தான் அந்த மஞ்சள் துண்டு என்றும் அதனால் தான் தலைவர் அதை விடாமல் அணிந்து கொண்டிருக்கின்றார் என்கின்றார்கள். எப்படி பட்ட மூட நம்பிக்கை பாருங்கள். அவரிடம் சென்று கேட்டால் மஞ்சள் துண்டை அணிவதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியல் இடக்கூடும். நாத்திகர்கள் யாராவது அந்த செயலை எனக்காக செய்து வரவும். எங்கள் ஊர் சோதிடர்கள் இதை சொல்லிதான் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அந்த பட்டியலை கொடுத்தால் அவர்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். ஒரு பொருளுக்கு எவ்வாறு நிறம் வருகின்றது என்பது அறிவியலில் இயற்பியல் பாடம் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த மஞ்சள் துண்டின் மகிமையை எவ்வாறு சொல்ல.

கருணாநிதியின் மிக அருகே இருக்கும் சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இந்த பவள மோதிரம். ஏனென்றால் தூரத்திலிருக்கும் மக்களின் கண்களுக்கு இது தெரிவதில்லை. மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக திகழும் கருணாநிதி கற்களின் மூலமாக வாழ்க்கையில் முன்னேரலாம் என்று நம்புகிறார். சாதாரண மக்களின் சின்ன சின்ன நம்பிக்கைகளை கேலி செய்யும் கூட்டத்தின் தலைவர் மூடநம்பிக்கைகளால் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்வாரா. சிரிப்பொலி தொலைக்காட்சியில் தினம் தினம் விவேக்கின் நகைச்சுவையை பார்த்து சிரிப்பவர்கள் இதையும் பார்த்து சிரியுங்கள்.
சல்லடை ஒன்று ஊசியைப் பார்த்து உனக்கும் ஒரு ஓட்டை என்றதாம் அது போல மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கும் நாத்திக கூட்டம் இதையும் கவணிக்கட்டும். தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டு இந்து மதத்தின் மூடநம்பிக்கை வரை எல்லாவற்றையும் கடைபிடிக்கும் கலைஞரை ஓர் நாத்திகன் என்று இனியும் யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து இப்படி கூறுங்கள்..... முட்டாள்கள்.
உண்மையான நாத்திகம் எது என்பதை நாத்திக மக்கள் மறந்துவிட்டார்கள். பெரியார் சொன்ன அளவு கூட நாத்திகம் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை முன் வைக்கில் இந்து மதம் தவிற மற்ற மதங்களைப் பற்றி பேச பயந்து ஓடிவிடுகின்றார்கள். பதவிக்காகவும், மறைமுக அரசியல் செல்வாக்கிற்காகவும் நாடகம் நடத்துகின்றார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் நாத்திக தலைவரென ஊரை ஏமாற்றும் கருணாநிதியின் சுயரூபத்தினை காட்டவே இங்கு எழுதினேன்.

நாத்திகத்தினை பக்குவமில்லாத பெரும்பாலும் இளைஞர்கள் தான் கடைபிடிக்கின்றனர். பக்குவம் வந்ததும் ராமா, கிருஷ்ணா, ஏசு, அல்லா என சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசியல் சாராத துறையிலிருக்கும் நாத்திக மனிதர்களும் ஆன்மீகத்தை விட்டு விலக மறுக்கின்றார்கள் என்பது கண்கூடான உண்மை.
தினம் நடக்கும் பூஜை –
ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.

என்பதாம் திருமணம் கருணாநிதியின் ஊரான திருவாருர் தியாகராஜர் சந்ததியில் ரகசியமாக நடந்ததாக சில நாளேடுகள் சொன்னன. தகுந்த ஆதாரம் இல்லாத்தால் அவற்றை விட்டுவிட வேண்டிதுதான். ஆனால் நெருப்பின்றி புகையாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் பூஜை செய்து கடவுள் அருளை பெறலாம். தினம் கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழ் நாட்டின் ஏழை பாமரன் மட்டும் பூஜை செய்ய கூடாது. இதாவது பரவாயில்லை. இந்து மதத்தின் விழாக்களை பொய் என்றும் அவற்றை கொண்டாட கூடாதென்றும் அறிக்கை விட்டுவிட்டு குடும்பத்துடன் இவர்கள் கொண்டாடியிருக்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.
தீபாவளி கொண்டாடிய கருணாநிதி குடும்பம் -
விஜய் தொலைக்காட்சியில் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி தீபாவளியின் போது ஆதவன் படம் பற்றி பேச சூரியாவுடன் காப் வித் அனுவில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது தீபாவளி என்றால் மாறன் மாமா குடும்பம், மற்றும் எல்லா சொந்தங்களும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது 5000 வாலா, 10000 வாலா போன்ற பெரிய பெரிய பட்டாசுகளையெல்லாம் மாமா, அப்பா போன்ற பெரியவர்கள் வைப்பார்கள், நான் குஜிலி பட்டாசு வைப்பேன் என்று சொன்னார்.
நரகாசுரன் செத்து போனதை நாத்திகர்களின் தலைவன் குடும்பம் கொண்டாடலாம். அதுவும் மாறன் போன்ற தி.மு.க பெரியவர்கள் குடும்பத்துடன். ஆனால் பாவப்பட்ட ஏழை தொண்டனின் குடும்பமும், குழந்தையும் கொண்டாட கூடாது. அடடா என்ன ஒரு தீர்ப்பு. என்ன ஒரு தீர்மானம். பல வருடங்களாக குடும்பமே சேர்ந்து தீபாவளியின் போது ஆயிரமாயிரம் வாலாக்கலாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி எதுவும் நடக்காதது போல நரகாசுரனைப் பற்றியும் , பகவான் கிருஷ்ணனைப் பற்றியும் குறை பேசி அறிக்கை விட்டுவிட்டு பட்டாசு கொலுத்த போய் விடுகிறார். அதெல்லாம் தெரியாமல் பாவப்பட்ட நாத்திகன் தன் குழந்தையை தெருவில் வேடிக்கை பார்த்து வைக்கின்றான்.
உலகிற்கே தெரிந்த பக்தி –

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் இந்து சாமியார் சத்திய சாய் பாபாவை வீட்டிற்கே அழைத்துவந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அதுவும் யார் முன்னிலையில் பகுத்தறிவு பகலவன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் முன்னிலையில். உண்மையான நாத்திகவாதியென்றால் அப்படி செய்ய விட்டிருப்பாரா. கருணாநிதியின் மனைவி மட்டுமல்ல உடன் இருந்த தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்டார்கள். இந்துகளில் சிலரே நம்பாத சாமியாரான சத்திய சாய் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரிடம் மோதிரமும் செயினும் வாங்கியதை மேடையில் பரவசமாய் பேசிவிட்டு இவர்களால் எப்படி மீண்டும் பெரியாரை பற்றி பேச முடிகிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என்றல்லவா இந்த கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பார்களா நம் மக்கள்.
மஞ்சள் துண்டு –
இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்த எல்லா மனிதர்களுக்கும் அவரின் மீது அமர்ந்திருக்கும் மஞ்சள் துண்டைப் பற்றி தெரியும். தொடக்க காலத்தில் திமுகாவினரின் தெருகூட்டும் துண்டுகளை தான் கருணாநிதியும் அணிந்திருந்தார். பதவி ஆசையும், அதை தக்க வைக்கவும் பிரபல சோதிடர் அணிய சொன்னது தான் அந்த மஞ்சள் துண்டு என்றும் அதனால் தான் தலைவர் அதை விடாமல் அணிந்து கொண்டிருக்கின்றார் என்கின்றார்கள். எப்படி பட்ட மூட நம்பிக்கை பாருங்கள். அவரிடம் சென்று கேட்டால் மஞ்சள் துண்டை அணிவதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியல் இடக்கூடும். நாத்திகர்கள் யாராவது அந்த செயலை எனக்காக செய்து வரவும். எங்கள் ஊர் சோதிடர்கள் இதை சொல்லிதான் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அந்த பட்டியலை கொடுத்தால் அவர்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். ஒரு பொருளுக்கு எவ்வாறு நிறம் வருகின்றது என்பது அறிவியலில் இயற்பியல் பாடம் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த மஞ்சள் துண்டின் மகிமையை எவ்வாறு சொல்ல.

பவள மோதிரம் –
கருணாநிதியின் மிக அருகே இருக்கும் சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இந்த பவள மோதிரம். ஏனென்றால் தூரத்திலிருக்கும் மக்களின் கண்களுக்கு இது தெரிவதில்லை. மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக திகழும் கருணாநிதி கற்களின் மூலமாக வாழ்க்கையில் முன்னேரலாம் என்று நம்புகிறார். சாதாரண மக்களின் சின்ன சின்ன நம்பிக்கைகளை கேலி செய்யும் கூட்டத்தின் தலைவர் மூடநம்பிக்கைகளால் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்வாரா. சிரிப்பொலி தொலைக்காட்சியில் தினம் தினம் விவேக்கின் நகைச்சுவையை பார்த்து சிரிப்பவர்கள் இதையும் பார்த்து சிரியுங்கள்.
சல்லடை ஒன்று ஊசியைப் பார்த்து உனக்கும் ஒரு ஓட்டை என்றதாம் அது போல மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கும் நாத்திக கூட்டம் இதையும் கவணிக்கட்டும். தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டு இந்து மதத்தின் மூடநம்பிக்கை வரை எல்லாவற்றையும் கடைபிடிக்கும் கலைஞரை ஓர் நாத்திகன் என்று இனியும் யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து இப்படி கூறுங்கள்..... முட்டாள்கள்.
உண்மையான நாத்திகம் எது என்பதை நாத்திக மக்கள் மறந்துவிட்டார்கள். பெரியார் சொன்ன அளவு கூட நாத்திகம் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை முன் வைக்கில் இந்து மதம் தவிற மற்ற மதங்களைப் பற்றி பேச பயந்து ஓடிவிடுகின்றார்கள். பதவிக்காகவும், மறைமுக அரசியல் செல்வாக்கிற்காகவும் நாடகம் நடத்துகின்றார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் நாத்திக தலைவரென ஊரை ஏமாற்றும் கருணாநிதியின் சுயரூபத்தினை காட்டவே இங்கு எழுதினேன்.

நாத்திகத்தினை பக்குவமில்லாத பெரும்பாலும் இளைஞர்கள் தான் கடைபிடிக்கின்றனர். பக்குவம் வந்ததும் ராமா, கிருஷ்ணா, ஏசு, அல்லா என சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசியல் சாராத துறையிலிருக்கும் நாத்திக மனிதர்களும் ஆன்மீகத்தை விட்டு விலக மறுக்கின்றார்கள் என்பது கண்கூடான உண்மை.
வியாழன், 19 நவம்பர், 2009
கவுண்டரும் கருத்துப்படமும்




கருத்துப்படம் போட்டு சின்னாதாய் ஒரு கலகம் உண்டு பண்ணலாம் என தோன்றியதும் கவுண்டரிடம் போனேன். சின்னக்கவுண்டர் இல்லைங்க, நம்ம புரட்சி புயல் கவுண்ட மணி. அவரிடம் கால் சீட்டு கிடைச்சிருச்சு. அதோட செந்திலும் வாரேனுட்டார். இனி அவர்கள்...(நவம்பர் 18ம் தேதி வெளிவந்த செய்திகளை வைத்து ஒரு கற்பனை.)
கவுண்டர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்க, செந்தில் வீட்டிற்குள் வருகிறார்.
கவுண்டர் – டேய் கம்பியூட்டர் தலையா, எங்கடா போய் ஊர் சுத்திட்டு வார?
செந்தில் – அது ஒன்னுமில்லைண்ணே, நாட்டுல என்ன நடக்குதுன்னு போய் பார்த்துட்டு வாரேன்.
கவுண்டர் – ஆமா இவர் பெரிய ஐநா செயலாலரு நாட்டை பத்தி பேசராரு. அப்படி என்னாடா நடக்குது நாட்டுல?
செந்தில் – ஆடு நடக்குது, மாடு நடக்குது...
கவுண்டர் – அப்படியே ஓங்கி உதைச்சானா ஒசாமாகிட்டயே போயிடுவ, ஒழுங்கா சொல்லுடா.
செந்தில் – நம்ப முதல்வரு அழுவராருன்ணே(செந்திலும் குலுங்கி குலுங்கி அழுவராரு)
கவுண்டர் – (கவுண்டருக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போகிறது.இருந்தாலும் மனசை தேற்றிக் கொண்டு)நீ அழாதடா நாயே, கலைஞர் ஏன் அழுவராரு. கொள்ளு தாத்தாவா ஆனதக்கப்புறமும் முதலமைச்சர் நாற்காலியை விட்டு நவுர மாட்டேங்குராரு என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவருக்கு என்னாடா கஷ்டம்
செந்தில் – விடுதலை புலிகள் செஞ்ச தவறுகளால தான் இன்னைக்கி ஈழத் தமிழர்கள் கஷ்டப்படராங்கன்னு சொல்லி பழைசை நினைச்சி அழுவராரு!
கவுண்டர் – அட முள்ளம்பன்றி தலையா அது நீலிகண்ணீர்டா. புள்ளைக்கு மந்திரி சீட் வாங்க அவர் டெல்லி போனது, தமிழ்நாடு நதிகள் இணைப்பு தள்ளிப்போட்டது, முல்லை பெரியாரு அனை பிரச்சனை என எல்லாம் இப்ப அவருக்கு எதிரா மக்களுக்கு தெரிஞ்சுபோச்சில்ல.அதான் தந்திரமா திசை திருப்பராரு.
செந்தில் – ஏன்ணே இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்கலாண்ணே.
கவுண்டர் – இதுவும் பண்ணுவாங்க, இதுக்கு மேலையும் பண்ணுவாங்கடா. நீ வேணா பாரு தமிழ்நாட்டு அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தம்பிதான். எப்பவோ வந்திருக்க வேண்டியவரு இன்னும் சும்மாவே இருக்காரு. அப்புறம் டெல்லில நம்ம ராகுல் தான்.
செந்தில் – ஏன்னே இவ்வளவு செய்சும் மக்கள் நம்பராங்களான்னே
கவுண்டர் – அதான் விதிங்கிறது. பக்கத்து நாட்டுல போர் செஞ்சு மக்களை கொன்னு குமிக்கும் போது இவுங்க காசு வாங்கி ஓட்டு போட்டாங்க. அனுபவிக்கட்டும், அப்பதான் புத்தி வரும். வேர என்னடா செய்தி.
செந்தல் – சர்மிலி மலையாளப் படத்துள்ள நடிக்க போகுதாண்ணே
கவுண்டர் – இந்த புள்ள ஏன் அங்கே போவுது. ஏற்கனவே ஷகிலானால லாலோட படங்கூட ஓடமாட்டேங்கிதுன்னு இப்பதான் அத வெளியே துரத்தினாங்க. பாவம்பா கேரளா நடிகருங்க.
செந்தில் – அண்ணே அப்புறம் ஷெட்லி பத்தி,...
கவுண்டார் – டேய் வேணான்டா அவுன்கள சிபிஐ பாத்துக்கும் நீ சாப்பிட ரெண்டு இட்லி கொண்டா
செந்தில் – (தயங்கியபடி மெதுவான குரலில்)அண்ணே எல்லா இட்லியும் நானே சாப்பிட்டேன்னே.
கவுண்டர் – அடே பாம் தலையா இப்படி நீ பண்ணுவேன்னு எனக்கு முதலையே தெரியுண்டா அதான் கடைக்கு முன்னாடியே சொல்லிவிட்டுட்டேன். இவ்வளவு விசயம் சொன்னியே உனக்கு ராசிபலன் பார்த்தியாடா
செந்தில் – பார்த்தேன்னே, யோகம் அடிக்கும் போட்டிருந்துச்சு.
கவுண்டார் – உனக்கு யோகமெல்லாம் அடிக்காது டா, இட்லியை ஒன்னுவிடாம தின்னதுக்கு நான் தான்டா அடிப்பேன். இந்தா வாங்கிக்கோ, இந்தா....
வழக்கம் போல செந்திலை கவுண்டர் துரத்துகிறார்.
ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Politics leader, politics jokes, politics news, kounder, sendil, kowdamani sendil comedy, fake dialog , politics member and minister jokes, tamil nadu politics joke, karunaneethi, ragul Gandhi, Sonia Gandhi, prinka Gandhi, starlin, Tamilnadu chief minister , india prime minister , cine joke, south cinema news
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)