தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 19 நவம்பர், 2009

கவுண்டரும் கருத்துப்படமும்










கருத்துப்படம் போட்டு சின்னாதாய் ஒரு கலகம் உண்டு பண்ணலாம் என தோன்றியதும் கவுண்டரிடம் போனேன். சின்னக்கவுண்டர் இல்லைங்க, நம்ம புரட்சி புயல் கவுண்ட மணி. அவரிடம் கால் சீட்டு கிடைச்சிருச்சு. அதோட செந்திலும் வாரேனுட்டார். இனி அவர்கள்...(நவம்பர் 18ம் தேதி வெளிவந்த செய்திகளை வைத்து ஒரு கற்பனை.)

கவுண்டர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்க, செந்தில் வீட்டிற்குள் வருகிறார்.

கவுண்டர் – டேய் கம்பியூட்டர் தலையா, எங்கடா போய் ஊர் சுத்திட்டு வார?

செந்தில் – அது ஒன்னுமில்லைண்ணே, நாட்டுல என்ன நடக்குதுன்னு போய் பார்த்துட்டு வாரேன்.

கவுண்டர் – ஆமா இவர் பெரிய ஐநா செயலாலரு நாட்டை பத்தி பேசராரு. அப்படி என்னாடா நடக்குது நாட்டுல?

செந்தில் – ஆடு நடக்குது, மாடு நடக்குது...

கவுண்டர் – அப்படியே ஓங்கி உதைச்சானா ஒசாமாகிட்டயே போயிடுவ, ஒழுங்கா சொல்லுடா.

செந்தில் – நம்ப முதல்வரு அழுவராருன்ணே(செந்திலும் குலுங்கி குலுங்கி அழுவராரு)

கவுண்டர் – (கவுண்டருக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போகிறது.இருந்தாலும் மனசை தேற்றிக் கொண்டு)நீ அழாதடா நாயே, கலைஞர் ஏன் அழுவராரு. கொள்ளு தாத்தாவா ஆனதக்கப்புறமும் முதலமைச்சர் நாற்காலியை விட்டு நவுர மாட்டேங்குராரு என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவருக்கு என்னாடா கஷ்டம்

செந்தில் – விடுதலை புலிகள் செஞ்ச தவறுகளால தான் இன்னைக்கி ஈழத் தமிழர்கள் கஷ்டப்படராங்கன்னு சொல்லி பழைசை நினைச்சி அழுவராரு!

கவுண்டர் – அட முள்ளம்பன்றி தலையா அது நீலிகண்ணீர்டா. புள்ளைக்கு மந்திரி சீட் வாங்க அவர் டெல்லி போனது, தமிழ்நாடு நதிகள் இணைப்பு தள்ளிப்போட்டது, முல்லை பெரியாரு அனை பிரச்சனை என எல்லாம் இப்ப அவருக்கு எதிரா மக்களுக்கு தெரிஞ்சுபோச்சில்ல.அதான் தந்திரமா திசை திருப்பராரு.

செந்தில் – ஏன்ணே இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்கலாண்ணே.

கவுண்டர் – இதுவும் பண்ணுவாங்க, இதுக்கு மேலையும் பண்ணுவாங்கடா. நீ வேணா பாரு தமிழ்நாட்டு அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தம்பிதான். எப்பவோ வந்திருக்க வேண்டியவரு இன்னும் சும்மாவே இருக்காரு. அப்புறம் டெல்லில நம்ம ராகுல் தான்.

செந்தில் – ஏன்னே இவ்வளவு செய்சும் மக்கள் நம்பராங்களான்னே

கவுண்டர் – அதான் விதிங்கிறது. பக்கத்து நாட்டுல போர் செஞ்சு மக்களை கொன்னு குமிக்கும் போது இவுங்க காசு வாங்கி ஓட்டு போட்டாங்க. அனுபவிக்கட்டும், அப்பதான் புத்தி வரும். வேர என்னடா செய்தி.

செந்தல் – சர்மிலி மலையாளப் படத்துள்ள நடிக்க போகுதாண்ணே

கவுண்டர் – இந்த புள்ள ஏன் அங்கே போவுது. ஏற்கனவே ஷகிலானால லாலோட படங்கூட ஓடமாட்டேங்கிதுன்னு இப்பதான் அத வெளியே துரத்தினாங்க. பாவம்பா கேரளா நடிகருங்க.

செந்தில் – அண்ணே அப்புறம் ஷெட்லி பத்தி,...

கவுண்டார் – டேய் வேணான்டா அவுன்கள சிபிஐ பாத்துக்கும் நீ சாப்பிட ரெண்டு இட்லி கொண்டா

செந்தில் – (தயங்கியபடி மெதுவான குரலில்)அண்ணே எல்லா இட்லியும் நானே சாப்பிட்டேன்னே.

கவுண்டர் – அடே பாம் தலையா இப்படி நீ பண்ணுவேன்னு எனக்கு முதலையே தெரியுண்டா அதான் கடைக்கு முன்னாடியே சொல்லிவிட்டுட்டேன். இவ்வளவு விசயம் சொன்னியே உனக்கு ராசிபலன் பார்த்தியாடா

செந்தில் – பார்த்தேன்னே, யோகம் அடிக்கும் போட்டிருந்துச்சு.

கவுண்டார் – உனக்கு யோகமெல்லாம் அடிக்காது டா, இட்லியை ஒன்னுவிடாம தின்னதுக்கு நான் தான்டா அடிப்பேன். இந்தா வாங்கிக்கோ, இந்தா....

வழக்கம் போல செந்திலை கவுண்டர் துரத்துகிறார்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Politics leader, politics jokes, politics news, kounder, sendil, kowdamani sendil comedy, fake dialog , politics member and minister jokes, tamil nadu politics joke, karunaneethi, ragul Gandhi, Sonia Gandhi, prinka Gandhi, starlin, Tamilnadu chief minister , india prime minister , cine joke, south cinema news