தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 19 நவம்பர், 2009

சத்குருவும் சங்கரன் பிள்ளையும்

வாசுதேவ் என்றவுடன் உங்களுக்கு கௌம் வாசுதேவ் மேனன் ஞாபகம் வந்தால் நீங்கள் திரைப்பட ரசிகன்.அதுவே சத்குரு ஜக்கி வாசுதேவ் ஞாபகம் வந்தால் நீங்கள் வாழ்க்கையின் ரசிகன்.

புத்தகங்கள் ஆகட்டும், தொலைக்காட்சி ஆகட்டும் எதிலும் சத்குரு சொல்வதை கேட்கும் போது ஒரு நிம்மதி, ஒரு தெளிவு. நான் யோகா கற்றுக் கொள்வதற்காக ஈசாவுக்கு சென்றதில்லை என்றாலும் ஈசாவைப் பற்றி எனக்கு நிறைய தெரியும். அதற்கு புத்தகங்களும் தொலைக்காட்சியும் உறுதுனையாக இருந்தன.

அத்தனைக்கும் ஆசைப்படு என்ற புத்தகத்தில் சங்கரன் பிள்ளை என்றொரு கதாபாத்திரம் மூலமாக அவர் சொல்கின்ற கருத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அந்த சங்கரன் பிள்ளையை உங்களுக்காக வலைப்பூவில் உலவவிட்டிருக்கிறேன்.பாருங்கள் சங்கரன் பிள்ளையை......

நீதிபதியும் சங்கரன் பிள்ளையும் -

சங்கரன்பிள்ளை ஒரு முறை குடித்துவிட்டு கலாட்டா செய்தார். அவரை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்தனர். அவரிடம் நீதிபதி சலிப்பாக, “மறுபடி மறுபடி கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா உன்னை சொல்லி குற்றமில்லை.எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!” என்றார். உடனே சங்கரன்பிள்ளை “ உங்களுக்காவது உண்மையான காரணம் தெரிந்திருக்கிறதே!.என் மனைவி விஸ்கியை சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்” என்றார்.

நாமும் இப்படிதான் நம்முடைய இயலாமையை மறைத்துவிட்டு யார் யார் மேலோ குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறோம்.

“எண்களையும், எழுத்துகளையும் உருவாக்கியதே மனிதன் தானே?. அவை எப்படி மனிதனை உருவாக்க முடியும்?.உங்கள் திறமையை நம்பித் தொழிலை துவங்குவீர்களா?, இல்லை எண்களை நம்பியா?” என நியூமராலஜி, நேமாலஜி என சுற்றி கொண்டிருக்கும் மூடநம்பிகை மிக்கவர்களை சொல்லாலே திருத்துபவர் சத்குருவை தவிற வேறுயாராக இருக்க முடியும்.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sathguru Jaki vasudev , jaki book, sankaran pilli, hindu darma, hindu wisdom, hindu stages, legends of religion, story form tamil nadu, tamil kadai, vasudev book, guru story, guru talk, sathguru think