தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 14 டிசம்பர், 2009

நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள்

நாடகமாடிய நேரு –

காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார்.

காந்தியின் பேச்சையே கேட்கவில்லை –

இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற்கு சில மணிதுளிகள் முன்பு கூட படேல் நேரு செய்யும் தவறுகளை காந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம். எத்தனை முறை சொன்னாலும் நேரு திருந்துவதாக தெரியவில்லை வருத்தப்பட்டாராம் காந்தி.

வெளிநாட்டு மங்கையர் மோகம் –

சோனியா என்ற வெளிநாட்டு பெண்ணை நேருவின் பேரன் திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளையனே வெளியேரு என இந்திய மக்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில் கூட ஆங்கிலப் பெண்களுடன் கொட்டம் அடித்து இருக்கிறார் நேரு. பெண்களிடம் பேசி சிரித்தை கூட பொருத்துக் கொள்ளலாம், அந்த பெண்ணின் வாயில் சிகரெட் எல்லாம் வைத்திருக்கின்றார், ஒரு தேசத்தின் பிரதமர் செய்வதை நீங்களே பாருங்கள். இந்தப் புகைப்படங்களை வெளிநாட்டினர் பார்த்தால் நமக்கு எவ்வளவு கேவலம். உண்மைய சுகந்திரத்திற்கு உழைத்திருந்தால் இப்படியெல்லாம் கீழ் தரமாக நடக்க முடியுமா.

இந்திரா நேரு –

பதவி மோகம் காரணமாக காங்கிரஸ் மூர்த்த தலைவர்களுடனெல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பிரதமரான இந்திரா நேருவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். சீக்கிய மக்களின் புணித இடத்தை ரானுவத்தால் கெடுத்த்தற்காக சீக்கியர்களால் கொல்லப்பட்டார். ஞாயமாக தமிழர்கள் தான் கொன்றிருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்களை பாதிக்கும் என தெரிந்தே இந்திரா நேரு இலங்கைக்கு கச்ச தீவை தாரை வார்த்தார். ஏதோ இவர்களின் நிலம் போல தங்கள் இஷ்டத்திற்கு மற்றவர்களுக்கு தருகின்றனர். அண்டை நாடான மேற்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் சண்டை போட்டு இந்தியாவை சரணடைய இந்திய மக்களின் வரி பணத்தை வாரி இரைத்து பாக்கிஸ்தானை பங்களாதேசாக மாற்றினார். இப்போது இந்தியாவிற்கு இரண்டு எதிரிகள்.

ராஜிவ் நேரு –

அம்மாவைப் போலவே தமிழர்களின் நல விரும்பி ராஜிவ் நேரு(மக்களிடம் இருக்கும் காந்தியின் செல்வாக்கை ஓட்டாக மாற்ற அவர்கள் வேண்டுமானால் பரம்பரை பெயரை மாற்றி போட்டுக்கொள்ளட்டும் நாம் எதற்கு அவ்வாறு செய்ய வேண்டும்).. தாரை வார்த்த கச்ச தீவால் இந்திய தமிழர்கள் பாதிக்கப்பட. இலங்கை தமிழர்களை காக்க புலிகள் என்ற இயக்கம் உருவாகி இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் தோல்வி கண்டு, இறுதியாக யுத்தம் என முடிவுக்கு வந்த வேளையில். தமிழர்களை கொல்ல இலங்கை அரசிற்கு துணையாக இந்திய ராணுவத்தை அனுப்பி தன் பங்கிற்கு தமிழர்களை அழித்த இந்திராவின் மகன் ராஜிவ் நேரு. கொத்து கொத்தாய் செத்து மடிந்த இனத்தின் கோரம் தாங்காமல் சிலர் எடுத்த முடிவால் ராஜிவ் மரணம் நேர்ந்தது தமிழ் நாட்டில் தான்.

சோனியா நேரு -

வெள்ளைக்கார பெண்களுடன் கொட்டம் அடித்த நேருவை பார்த்துவிட்டோம். அந்த தேசியவாதியின் கொள்கையை கடைபிடிக்க லண்டனிலிருந்து வந்த குலதெய்வம் சோனியா. ராஜிவ் இறந்துவிட அடுத்த பிரதமர் வாய்ப்பு சோனியாவிற்கு. ஏதோ கொஞ்சம் இந்தியாவின் மீது ஈடுபாடுள்ள மனிதர்கள் சத்தம் போட இப்போது சோனியா பதவியில்லாத பிரதமர்.

தன் கணவனை கொன்ற தமிழர்களை பழிவாங்கும் முயற்சியாய் அடுத்தடுத்து நிகழ்ந்தன செயல்கள். தமிழக மீனவர்கள் இன்றும் தாக்கப்படுவதையும், அவர்களை நிர்வாணப்படுத்தி கேவலம் செய்யும் செயலையும், வாழ்க்கைக்கு ஆதாரமான வலைகளை அறுத்தெரியும் சம்பவங்களையும் சோனியா தலைமையிலான இந்திய அரசு கண்டிக்கவில்லை. தூண்டி விட்டிருப்பதே அவர்கள் தான், பின் எப்படி தடுப்பார்கள்.

ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றதற்கும், அவர்களை கொடுமை படுத்தியதற்கும் இவர்கள் தான் காரணம் என்றால் நம்ப முடிகின்றதா. பிரியங்கா நேரு செய்ததை படியுங்கள் உண்மை விளங்கும்.

பிரியங்கா நேரு –

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க ராஜபக்சே தொடங்கும் முன்பே ராஜிவை நேரு கொன்றவர்களில் மீதம் இருக்கும் நளினியை பார்த்து சென்றாராம் பிரியங்கா நேரு. அந்த சந்திப்பில் என் தந்தை மிகவும் நல்லவர் ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என அடிக்கடி கேட்டாராம்.(ஆமாம் ரொம்ப நல்லவரு) இந்த சந்திப்பு நடந்த பின் தான் தமிழர்களுக்கு எதிராக பயங்கரப் போரில் இலங்கை ஈடுபட்டது. அம்மாவின் பொண்ணு என்ன போய் சொல்லுச்சோ தெரியலை.

தனித்தனி நிகழ்வாக நடந்திருக்கும் இவைகளை இணைத்துப்பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் மூல காரணம் விளங்கி இருக்கும். இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என கையை கட்டிக்கொண்டிருந்த இலங்கை அரசு, இந்தியாவின் தரப்பில் பச்சை கொடி காட்டிய பின்தான் தன் வேலையை காட்டி இருக்கிறது. பிரபாகரன் தலைமையிலான புலிகளை அழிப்பதாக சொல்லி ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அழித்து சின்னாபின்னமாக்கி விட்டது.

ராகுல் நேரு –



என் சகோதரன் இந்தியாவின் பிரதமராவான். அவனுக்கு எல்லாம் தகுதியும் இருக்கிறது என சொன்னார் பிரியங்கா. நதி நீர் இணைப்பு திட்டத்தை எதிர்த்து, அதை உறுதி செய்திருக்கின்றார் ராகுல். இந்த முறையும் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்களும், தமிழகமும் தான். தமிழக்த்தில் காவெரி ஓடினாலும் கேரளா கொடுத்தால் தான் தண்ணிர். எல்லையில்லாத நீர் வளத்திற்கு அண்டை மாநிலங்களிடையே கையேந்தி நின்ற தமிழர்களுக்கு நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் கங்கையும், காவெரியும் இணைந்தால் நலம் என்ற செய்தி எப்படியோ ராகுலுக்கு தெரிந்துவிட்டது. அவர் பரம்பரை வேலையை காட்டிவிட்டார்.


எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து பார்க்கும் போது நேருவும் அவரது குடும்பமும் மொத்த இந்தியாவை எப்படி ஏமாற்றி இருக்கின்றன என தெரியும். தமிழக முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் கண்டிப்பாக ஈழத்தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். மத்திய அரசில் திமுகவின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தே. ஆனால் கொள்கை ரீதியாக ஒத்துப்போனதால் சோனியாவிடம் கலைஞர் கேட்டது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவிகள் மட்டும் தான்.

காங்கிரஸ், திமுக அணிக்கு ஓட்டுப்போட்டு விசுவாசம் காண்பித்தவர்கள் தயவு செய்து இந்த இடுகையின் மேல் இருக்கும் தமிழ்மண ஓட்டுப்பெட்டில் ஓட்டு போட்டு பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள். உண்மையான தமிழர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என எதிர் பார்க்கின்றேன்.

நேரு படங்களுக்கு நன்றி – பட்டாப்பட்டி வலைப்பூ.

சனி, 12 டிசம்பர், 2009

தமிழில் சிறந்த வலைப்பூக்கள்

மருத்துவம் -
ஹாய் நலமா

ஜோதிடம் -
வாத்தியார்

நகைச்சுவை -
லக லக லக

ரஜினி -
ரஜினிபேன்ஸ்
என்வழி

கணினி -
பி.கே.பி
இரஜகை ராபர்ட்


அரசியல் -
கழுதை
ப்...ப்...பீ...பீ...பாம்...பாம்

காமம் -
காமதீ
தமிழ் காமக் களஞ்சியம்!!
தமிழ் நடிகைகளின் காம கூத்துகள்

களஞ்சியங்கள் -
விக்கி சோர்ஸ்
விக்கி பிடியா
விக்கி புத்தகம்
விக்கி செய்திகள்
விக்சனரி

காமிக்ஸ் வலைப்பூகள் –
தலை சிறந்த காமிக்ஸ்கள்
ராணிகாமிக்ஸ்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
மைய நீரோட்டம்
அழகிய படங்களுடன் கூடியது

கவிதை -
ஆடலரசன்
கவிதை1000
கவிதைகள்
யுக பாரதி
உலகின் புதிய கடவுள்

ஆன்மீகம் -
சிவசிவ
சித்தன்
இந்துசமயம்
முதுசொம்
தமிழ் இந்து
ஆன்மீக பயணம்
நமசிவாய வாழ்க
இறைவனை காண்போம்
நான்காயிரம் அமுதத் திரட்டு

தமிழ் -
தமிழ்
தமிழ்புத்தகம்
தமிழ்கதை
தமிழ்க்கல்வி
தமிழ் இலக்கணம்
சில கவிதைகள்
என் வாசகம்
தமிழ்ச் செருக்கன்!
வெண்பா வனம்
வெண்பா எழுதலாம் வாங்க!

சகலமும் -
வெட்டிபயல்
வால்பையன்
யுவகிருஷ்ணா
எப்பூடி.....
இம்சை
ச்சும்மா…
கூடுதுறை
ரசனைக்காரி...
ப்ருந்தாவனம்
வேர்களைத்தேடி
பல்சுவை
சிறகுகள்
மேலிருப்பான்
என் வானம்
போட்டுத் தாக்கு!!!!!
சித்திரம் பேசுதடி
புதுக்கோட்டை விலெகா
குமரன் குடில்
ப்ரியானந்த சுவாமிகள்
தமிழன் உலகம்
என் உளறல்கள்
எண்ணச் சிதறல்கள்
என் கிறுக்கல்கள்....
மோகனச்சாரல்
அன்புடன் அருணா
எனது ரசனை....
எண்ணங்கள் இனியவை
என் கனவில் தென்பட்டது
அகம் - புறம் – அந்தப்புரம
தெரிந்து கொள்ளலாம் வாங்க
தமிழக மக்கள் உரிமைக் கழகம்
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

வெள்ளி, 11 டிசம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 1
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 2
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 3

அகத்தியர்

குறிப்பு -

அகத்தியரை ஒட்டுமொத்த சித்தர்களின் குரு என கூறுகிறார்கள். தொல்காப்பியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து இவர் எனவும், தேரையார் போன்ற சிறந்த சித்தர்களுக்கு மருத்துவம் கற்று கொடுத்தது இவர் எனவும் கூறுகின்றார்கள்.

இவருக்கும் முன்னால் கூட வாழ்ந்த சித்தர்கள் பலர் இருந்தாலும், இவருக்கு சற்று கூடுதல் மரியாதை. இவர் குட்டையான உருவம் கொண்டவராதலால் குறுமுனி எனவும் ஒரு சொல் வழக்கு இருக்கிறது.சித்தர், முனிவர், குரு என்றெல்லாம் சொல்வதை விடவும் தமிழ்த் தொண்டர் என கூறுவது சிறந்தது.

சித்த மருத்துவம் மட்டுமல்லாது, நாடி சோதிடம், பட்சி சாத்திரம் போன்ற பல துறைகளிலும் இவர் சிறந்து விளங்கியுள்ளார். கிட்டதிட்ட 25 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளதாக வலைதள நண்பர்கள் பட்டியல் இடுகின்றார்கள். நான் திரட்டிய செய்திகளை முடிந்தளவு சுருக்கமாக சொல்ல முற்படுகிறேன். அதற்கு முன் தங்களின் பொன்னான நேரங்களில் சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து புத்தகங்களாகவும், கட்டூரைகளாகவும் வலைப்பூக்களில் பதித்தும் தமிழ்த் தொண்டு செய்த அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கும் என் பல கோடி நன்றிகள்.

வரலாற்று கதைகள் –

பிறப்பு –

அகத்திய மாமுனியின் பிறப்பு பற்றி பல விதமான கருத்துகள் வலம் வருகின்றன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மித்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

சித்தர்களைப் பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய நண்பர் டாக்டர் மந்தயம் குமார் அவர்கள் விங்கிபீடியாவில் தன்னுடைய ஆய்வை தெளிவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அகத்தியர் பிறந்த தினம் 14-02-7673 இது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர். அகத்தியர் பிறந்த மாநிலம் குஜராத். தாயார் பெயர் : இந்துமதி. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர். தந்தையார் பெயர் : பார்கவா. இவர் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும். இவர் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து இருந்தார். பெற்றோர்கள் இருவரும் ரிஷப முனிவரின் வழிவந்த பசுபதா எனும் முனிவரின் பக்தர்களாக விளங்கி வந்தனர் என கூறுகிறார்.

அகத்தியர் குஜராத் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் நாட்டிற்கு வந்தமைக்கு காரணம் என்ன? சித்தர்களில் தலைவனாக உயர்ந்து நிற்க அகத்தியர் என்ன செய்தார்? ஏகப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் அகத்தியரை சுற்றி வருகின்றன.

பொதிகை மலைக்கு வந்த கதை –

பொதியமலை அல்லது பொதிகை மலை எனப் புகழ் பெற்ற மலையுடன் சித்தர் அகத்தியருக்கு பெரும்பங்கு இருக்கிறது. இவர் வடநாட்டில் கைலாசத்தில் இருந்தார். சிவனுக்கும் அம்மைக்கும் நடக்க கூடிய திருமணத்தை காண அனைவரும் வடக்கு நோக்கி வந்துவிட்டால், தெற்க்கு பகுதியில் சமன்நிலை பாதிக்கப்படும் என சிவனே அகத்தியரை பொதிகை மலைக்கு செல்ல சொன்னதாக ஓர் கதை உண்டு.

தென்பகுதிக்கு வந்த அகத்தியருக்கு கடவுளின் திருமணத்தை காண இயலாது போனதுபற்றி மிக வருத்தம். தம் பக்தர்களின் குறைதீர்க்கும் நாயகன் சென்னை திருவான்மையூரில் இருக்கும் மருந்தீஸ்வர்ர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளதாக அக்கோவிலின் திருவரலாறு கூறுகிறது.மேலும் அகத்தியருடைய தீராத வயிற்று வலியை நீக்க பரமனே வந்து மருந்தருளியதாகவும், அதனால் மருந்தீஸ்வரன் என்ற பெயர் பெற்று கோவில் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.அகத்தியருக்கு காட்சிதந்த வன்னி மரம் திருதளத்தில் தலவிருட்சமாக உள்ளது.

அகத்தியருடைய தமிழ் குரு –

இந்தியாவின் வடக்கு பகுதியில் இருந்த இவருக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த நிலையில் தென்பகுதிக்கு வந்து செயல்புரிய தமிழ் மொழியறிவு தேவைப்பட்டது. அதற்காக சிவனின் தவப்புதல்வன் கந்தனிடம் தமிழ் பயின்றதாக இவரே பாடலில் எழுதியுள்ளார். இவர் நந்தி மற்றும் தன்வந்திரி ஆகியோருக்கு சீடனாக இருந்துள்ளார்.

சில வரலாறு தெரியாத நண்பர்கள் தமிழை தோற்றுவித்தே அகத்தியர்தான் என்று கூறுகிறார்கள். அகத்தியர் தென்பகுதிக்கு வரும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி.

விந்தியமலையின் செருக்கை அடக்குதல் –

தென்நாட்டுக்கு அகத்தியர் வரும் வழியில் மலைகளில் மிக உயரமாக இருந்த விந்திய மலையானது அகத்தியருக்கு வழி விட மறுத்தது. சிவனின் அருளைப் பெற்ற சித்தர் என்பதால் அதனுடைய செருக்கை அழித்து தான் வடக்கு திசைக்கு மீண்டும் வரும் வரை குனிந்தே இருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தார். காலம் அவரை வடக்கு திசைக்கு திரும்ப அனுப்பாததால் விந்திய மலை உயரம் குறைந்தே இருப்பதாகவும் ஒரு புனைவுக் கதை உண்டு.

விந்தியனின் சிறகை சிவனே வந்து வெட்டியதாகவும் ஒருகதை இருக்கிறது.

காவிரி தோன்றிய கதை –

சிவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பொதிகை மலை வந்த அகத்தியர், சிவனுடைய சிரசிலிருந்து ஓடிவரும் கங்கை நதியின் சிறு பகுதியை தன்னுடைய கமண்டலத்தில் பிடித்து வந்தார். வறண்ட நிலப்பகுதியாக இருந்த தென் பகுதிக்கு நீர் கொண்டு வந்தவர், குளித்து விட்டு கொஞ்சம் களைப்பு நீங்கி விட்டு செல்லலாம் என ஒரு பெருங்கல்லின் மீது தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டு சென்றார். அப்போது சிவக்குழந்தை வினாயகர் காகம் உருவெடுத்து அந்த கமண்டலத்தினை தட்டி விட்டார். அது உடனே ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காகம் வந்து தட்டிவிட்டு விரிந்த நீர் என்பதால், அது காவேரி எனப் பெயரப் பெற்றது.

மர்மங்கள் தொடரும்...

உலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள்

பகுத்தறிவாதிகள் என்று ஊரை ஏமாற்றுகிறு ஒரு கூட்டம். பகுத்தறிவு என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மற்றவர்களுக்கு பகுத்தறிவே வேலை செய்வதில்லை என வாதம் செய்கின்றார்கள். பெரியார் இந்து மதத்தை அழித்துவிட்டு இஸ்லாமியர்கள் ஆகி விடுங்கள் என சொன்னதாக செய்தியை பரப்பி கொண்டிருக்கின்றார்கள். கடவுளை எதிர்ப்பவர்களுக்கு அல்லா கடவுளாக தெரிவதில்லையா. இல்லை அவரை கடவுளுலாக இவர்கள் மதிக்கவில்லையா என தெரியவில்லை.

பெண் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, மது, கள் ஒழிப்பு என அவருடைய மற்ற கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு இந்த ஒரே ஒரு கொள்கையை மட்டும் ஏற்று நடக்க என்ன காரணம். எல்லாம் பணம். முகமதியர்களுக்காக மதம் பரப்பும் வேலையை இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரிகிறது.

உண்மையில் எது பகுத்தறிவு –

நாம் செய்கின்ற செயலில் நன்மை இருக்கின்றதா தீமை இருக்கின்றதாவென ஆராய்ந்து செய்வது தான் உண்மையான பகுத்தறிவு. அது கருப்பு சட்டைகாரர்களைவிட ஆன்மீக வாதிகளுக்கு மிக அதிகமாக இருக்கின்றது. ஆடியில் உறவு கொண்டால் பத்து மாதம் கழித்து குழந்தை பிறக்கும் மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் பிரசவம் நடந்தால், குளிர் சாதன வசதியில்லாத அக்காலத்தில் பெண்கள் துன்பப் பட நேரிடும் என சொன்னது முதல், வடக்கே தலை வைத்து படுத்தால் புவிகாந்த ஈர்ப்பால் எதிர் விளவுகள் ஏற்படும் என்பது வரை ஒவ்வொறு செயலுக்கும் அர்த்தங்களோடு செய்வது இந்துகள் தான்.

எதிர்ப்பவர்களுக்கு பெயர்கள் –

இவர்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அவர்களை தமிழின துரோகிகள் என்று குற்றம் சாட்டிவிடுகிறார்கள். தமிழுக்கு இவர்கள் செய்யும் கொடுமைகள் பத்தாதம் . மக்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்ட புனைவுகளில் வக்கிர எண்ணகளுடன் அனுகி தீயவைகளை பரப்புகின்றார்கள். புராணங்களிலும், இதிகாசங்களிலும் தவறு இருப்பதாக சொல்லி புறக்கணிக்க சொல்லும் இவர்கள். தமிழர்களிடமிருந்து கம்பனையும், பாரதியையும் பிரிக்கின்றார்கள். ஏற்கனவே தமிழ் மக்கள் பலருக்கு வெண்பா முதல் அணிகள் வரை தொடர்புகள் அற்றுப் போய்விட்டது. இப்போது இவ்வாறு சொல்லி எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டால் எவ்வாறு தமிழ் தளைக்கும்.

ஏமாற்று வேலைகள் –

திராவிட மக்கள் இருந்த நாட்டில் வேறொரு நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அழித்ததாகவும், ஆரியர்கள் தான் பார்பனர்கள் என்றும் சொல்கிறார்கள். வெளி நாட்டு ஆரியர்களை விரட்ட வேண்டும் என்கிறார்கள். ஆரியர்களுக்கு பின்பு வந்த முகமதியர்களையும், கிறிஸ்துவர்களையும் பற்றி புகழ்ந்து பேசுகின்றார்கள். திராவிட மக்களை ஆரியர்களாக மாற வேண்டாம் முகமதியர்களாக மாறுங்கள், கிறிஸ்துவர்களாக மாறுங்கள் என்கிறார்கள். இது எப்படி ஞாயமாகும். வெளி நாட்டினரை விரட்ட வேண்டுமென்றால் ஆரியர்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோரையும் விரட்ட வேண்டியது தானே. முன்னுக்கு பின் முரனாக பேசி ஏன் மக்களை குழப்ப வேண்டும். அவர்களின் முரனான பேச்சுகளை ஏன் என கேட்க வேண்டி வந்த்தால் பிற மதங்களையும் இதில் இணைக்க வேண்டி வந்தது. பிற மத நண்பர்கள் மன்னிக்கவும்.

1. சமஸ்கிருதம் வேறு மொழி அதை ஏற்க வேண்டாம் எனச் சொல்பவர்கள், இஸ்லாமியர்களின் உருதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவது ஏன்?.
2. தமிழில்தான் முஸ்லிம் எல்லோரும் பேசுகின்றார்கள் என நெஞ்சல் கைவைத்து இவர்களால் சொல்ல முடியுமா?
3. தமிழுக்கென ஒரு கடவுளாக முருகனை வைத்து வழிபடும் மனிதர்களை மதம் மாற வற்புருத்துவது ஏன்?.
4. மதமில்லை மார்கம் என்று சொல்லி உலகில் தீவிரவாத தாக்குதல் நடத்தி வருபவர்களை ஆதரித்து பேசுவது ஏன்?
5. இந்து ஆட்டை வெட்டினால் ஐயோ கொலை என கத்தும் இவர்கள், வான் கோழி கழுத்தை கார் கதவில் சாத்தி கொல்லும் போதும், ஒட்டகத்தை வெளிநாட்டிலிருந்து வர வைத்து கொன்று சாப்பிடும் போதும் அவர்களுடன் ஓடிப்போகின்றார்களே ஏன்?.
6. சாதி ஒழிப்பிற்காக தான் முகமதிய மதம் போனோம் என்று சொல்லும் நாத்திகவாதிகள் அங்கும் பிரிவுகள் இருப்பதையும் அவர்கள் அடித்துக்கொள்ளும் கொடுமையையும் சொல்வதில்லையே ஏன்?
7. தமிழ் கடவுள் முருகன் இரண்டு பெண்களை கட்டி கொண்டிருக்கிறான் என பேசும் அவர்கள், அவர்களின் தலைவர் பெரியாருக்கும், கருணாநிதிக்கும் எத்தனை மனைவிகள் என நினைத்துபார்க்க மறுக்கிறார்கள் ஏன்?
8. எப்போதோ நடந்த பாபர் மசுதியை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு இரட்டை கோபுர தாக்குதலையும், காசி, கோயமுத்தூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களையும், மும்பை தாஜ் ஓட்டல் உட்பட எட்டு இடங்களில் நடந்த தாக்குதல், பாராளுமன்றத்தில் நடந்த முஸ்லிம் வெறித் தாக்குதலையும் என எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றார்கள். இப்போது கூட எங்கே தாக்குதல் நடத்த முடியுமென இந்தியாவிற்குள் ஊடுருவிக் கொண்டிருப்பவர்களை பற்றி பேச மறுக்கின்றார்கள் தேச துரோகிகள்.
9. சகோரத்துவ மதம் எது கூடப்பிறந்தவகளையே கொன்று குவிக்கும் இஸ்லாமிய மதமா?. தாலிபன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானிய முஸ்லிம்களும் அடித்துக்கொள்கின்ற கொடுமையை தான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே நாம்.
10. இந்தியா கிரிக்கெட்டில் தோற்றால் அது பார்ப்பன சதி, ஒலிம்பிக்கில் விருது வாங்காமல் போனால் அதற்கு காரணம் இந்துகள் என சொல்கிறார்கள்.
11. பார்ப்பனர்களை எதிர்ப்பதாய் சொல்லி சொல்லியே சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பெரிய எழுத்தாளர்களையும், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்ற கலைதுறையினறையும் மிகவும் கேவலமாக பேசுகின்றார்கள்.
12. சாதி எதிர்ப்பு பற்றி பேசுகையில் அ.தி.மு.க, தி.மு.க என திராவிட கட்சிகளில் மாறி மாறி கூட்டனி வைக்கும் ராமதாஸை பற்றி பேசுவதில்லை. மாறாக தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள் என்ற பெருந்தலைவரைப்பற்றி தவறாக பேசுகின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகிறது. பகுத்தறிவுகாரர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். என்ன நான் சொல்வது சரிதானே.

இந்த கட்டுரையை நாத்திகர்கள் யாராவது படித்தால் என் கேள்விக்கு பதில் சொல்லவும்.

நாத்திகர்கள் சாதியை ஒழிக்கின்றார்களா என்பதைப் பற்றி விரைவில்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.

உலகம் முழுதும் தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லி திரியும் கூட்டத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள் மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாய் இருப்பதை உலகிற்கு எடுத்து சொல்வதே இக் கட்டுரை.

தினம் நடக்கும் பூஜை –


ஒன்றும் அறியாத தொண்டர்களை மடையர்களாக மாற்றி விட்டு அவர்கள் தலைவர் கருணாநிதி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். அதுவும் எப்படி இந்து மதத்தின் எல்லா பலன்களையும் அனுபவித்துக் கொண்டு. தினம் தினம் அவர் வீட்டில் பூஜை நடக்கிறது. பகவானுக்கு தினம் பஜனை நடக்கிறது. என்னவென்று கேட்டால் எல்லாம் தலைவரின் மனைவி செய்கின்றார், அதில் தலைவருக்கு பங்கில்லை. அதெப்படி குடும்ப தலைவரின் பங்கில்லாமல் பூஜை செய்ய முடியும், யாகம் செய்ய முடியும். புரோகிதர்கள் அதற்கு சம்மதம் தர மாட்டார்கள்.




என்பதாம் திருமணம் கருணாநிதியின் ஊரான திருவாருர் தியாகராஜர் சந்ததியில் ரகசியமாக நடந்ததாக சில நாளேடுகள் சொன்னன. தகுந்த ஆதாரம் இல்லாத்தால் அவற்றை விட்டுவிட வேண்டிதுதான். ஆனால் நெருப்பின்றி புகையாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் பூஜை செய்து கடவுள் அருளை பெறலாம். தினம் கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழ் நாட்டின் ஏழை பாமரன் மட்டும் பூஜை செய்ய கூடாது. இதாவது பரவாயில்லை. இந்து மதத்தின் விழாக்களை பொய் என்றும் அவற்றை கொண்டாட கூடாதென்றும் அறிக்கை விட்டுவிட்டு குடும்பத்துடன் இவர்கள் கொண்டாடியிருக்கின்றார்கள், கொண்டாடுகிறார்கள், கொண்டாடுவார்கள்.

தீபாவளி கொண்டாடிய கருணாநிதி குடும்பம் -


விஜய் தொலைக்காட்சியில் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலின் மகனுமான உதயநிதி தீபாவளியின் போது ஆதவன் படம் பற்றி பேச சூரியாவுடன் காப் வித் அனுவில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது தீபாவளி என்றால் மாறன் மாமா குடும்பம், மற்றும் எல்லா சொந்தங்களும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது 5000 வாலா, 10000 வாலா போன்ற பெரிய பெரிய பட்டாசுகளையெல்லாம் மாமா, அப்பா போன்ற பெரியவர்கள் வைப்பார்கள், நான் குஜிலி பட்டாசு வைப்பேன் என்று சொன்னார்.

நரகாசுரன் செத்து போனதை நாத்திகர்களின் தலைவன் குடும்பம் கொண்டாடலாம். அதுவும் மாறன் போன்ற தி.மு.க பெரியவர்கள் குடும்பத்துடன். ஆனால் பாவப்பட்ட ஏழை தொண்டனின் குடும்பமும், குழந்தையும் கொண்டாட கூடாது. அடடா என்ன ஒரு தீர்ப்பு. என்ன ஒரு தீர்மானம். பல வருடங்களாக குடும்பமே சேர்ந்து தீபாவளியின் போது ஆயிரமாயிரம் வாலாக்கலாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி எதுவும் நடக்காதது போல நரகாசுரனைப் பற்றியும் , பகவான் கிருஷ்ணனைப் பற்றியும் குறை பேசி அறிக்கை விட்டுவிட்டு பட்டாசு கொலுத்த போய் விடுகிறார். அதெல்லாம் தெரியாமல் பாவப்பட்ட நாத்திகன் தன் குழந்தையை தெருவில் வேடிக்கை பார்த்து வைக்கின்றான்.

உலகிற்கே தெரிந்த பக்தி –




கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் இந்து சாமியார் சத்திய சாய் பாபாவை வீட்டிற்கே அழைத்துவந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். அதுவும் யார் முன்னிலையில் பகுத்தறிவு பகலவன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் முன்னிலையில். உண்மையான நாத்திகவாதியென்றால் அப்படி செய்ய விட்டிருப்பாரா. கருணாநிதியின் மனைவி மட்டுமல்ல உடன் இருந்த தயாநிதி மாறன் உட்பட எல்லோரும் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்டார்கள். இந்துகளில் சிலரே நம்பாத சாமியாரான சத்திய சாய் பாபாவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரிடம் மோதிரமும் செயினும் வாங்கியதை மேடையில் பரவசமாய் பேசிவிட்டு இவர்களால் எப்படி மீண்டும் பெரியாரை பற்றி பேச முடிகிறது. தமிழக மக்களை முட்டாள்கள் என்றல்லவா இந்த கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பார்களா நம் மக்கள்.

மஞ்சள் துண்டு –


இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்த எல்லா மனிதர்களுக்கும் அவரின் மீது அமர்ந்திருக்கும் மஞ்சள் துண்டைப் பற்றி தெரியும். தொடக்க காலத்தில் திமுகாவினரின் தெருகூட்டும் துண்டுகளை தான் கருணாநிதியும் அணிந்திருந்தார். பதவி ஆசையும், அதை தக்க வைக்கவும் பிரபல சோதிடர் அணிய சொன்னது தான் அந்த மஞ்சள் துண்டு என்றும் அதனால் தான் தலைவர் அதை விடாமல் அணிந்து கொண்டிருக்கின்றார் என்கின்றார்கள். எப்படி பட்ட மூட நம்பிக்கை பாருங்கள். அவரிடம் சென்று கேட்டால் மஞ்சள் துண்டை அணிவதால் ஏற்படும் நன்மைகளை அவர் பட்டியல் இடக்கூடும். நாத்திகர்கள் யாராவது அந்த செயலை எனக்காக செய்து வரவும். எங்கள் ஊர் சோதிடர்கள் இதை சொல்லிதான் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அந்த பட்டியலை கொடுத்தால் அவர்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். ஒரு பொருளுக்கு எவ்வாறு நிறம் வருகின்றது என்பது அறிவியலில் இயற்பியல் பாடம் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த மஞ்சள் துண்டின் மகிமையை எவ்வாறு சொல்ல.



பவள மோதிரம் –


கருணாநிதியின் மிக அருகே இருக்கும் சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இந்த பவள மோதிரம். ஏனென்றால் தூரத்திலிருக்கும் மக்களின் கண்களுக்கு இது தெரிவதில்லை. மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமாக திகழும் கருணாநிதி கற்களின் மூலமாக வாழ்க்கையில் முன்னேரலாம் என்று நம்புகிறார். சாதாரண மக்களின் சின்ன சின்ன நம்பிக்கைகளை கேலி செய்யும் கூட்டத்தின் தலைவர் மூடநம்பிக்கைகளால் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்வாரா. சிரிப்பொலி தொலைக்காட்சியில் தினம் தினம் விவேக்கின் நகைச்சுவையை பார்த்து சிரிப்பவர்கள் இதையும் பார்த்து சிரியுங்கள்.

சல்லடை ஒன்று ஊசியைப் பார்த்து உனக்கும் ஒரு ஓட்டை என்றதாம் அது போல மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கும் நாத்திக கூட்டம் இதையும் கவணிக்கட்டும். தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டு இந்து மதத்தின் மூடநம்பிக்கை வரை எல்லாவற்றையும் கடைபிடிக்கும் கலைஞரை ஓர் நாத்திகன் என்று இனியும் யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து இப்படி கூறுங்கள்..... முட்டாள்கள்.

உண்மையான நாத்திகம் எது என்பதை நாத்திக மக்கள் மறந்துவிட்டார்கள். பெரியார் சொன்ன அளவு கூட நாத்திகம் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை முன் வைக்கில் இந்து மதம் தவிற மற்ற மதங்களைப் பற்றி பேச பயந்து ஓடிவிடுகின்றார்கள். பதவிக்காகவும், மறைமுக அரசியல் செல்வாக்கிற்காகவும் நாடகம் நடத்துகின்றார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் நாத்திக தலைவரென ஊரை ஏமாற்றும் கருணாநிதியின் சுயரூபத்தினை காட்டவே இங்கு எழுதினேன்.




நாத்திகத்தினை பக்குவமில்லாத பெரும்பாலும் இளைஞர்கள் தான் கடைபிடிக்கின்றனர். பக்குவம் வந்ததும் ராமா, கிருஷ்ணா, ஏசு, அல்லா என சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசியல் சாராத துறையிலிருக்கும் நாத்திக மனிதர்களும் ஆன்மீகத்தை விட்டு விலக மறுக்கின்றார்கள் என்பது கண்கூடான உண்மை.