தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 19 நவம்பர், 2009

சுஜாதா மென்நூல்கள்

சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் திருவரங்கத்தில் பிறந்தவர்.பெரும்பாலான கதைகளில் அதன் தாக்கம் நிறைந்திருப்பதை காண முடியும். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவுமே படிக்க படிக்க திகட்டாதவை.

சுஜாதாவின் அனைத்து படைப்புகளும் மென்நூல் வடிவில் கிடைப்பதில்லை. என்றாலும் இங்கு கொஞ்சம் மென்நூல்கள் இருக்கின்றன. தரவிரக்கம் செய்து படியுங்கள்.

ஆ நாவல் –

கணேஷ் வசந்த் நாவல்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஆ. ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஆ என்ற சொல்லுடன் முடித்திருப்பார். நான் சில இடங்களில் அது திணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இருப்பினும் மிக அழகாக புதிய முறையை புகுத்தியமை வியப்பு தருவதாக இருந்தது.

இந்த நாவல் இந்து மதத்தின் பூர்வ ஜென்ம விசயங்களை சார்ந்தது. அதை மெய்யென சொல்லும் விதமாக எழுதப்பட்ட புனைவு கதை. தன் மனைவியை கொல்லும் ஒருவன், நான் அந்த கொலையை செய்யவில்லை என வாதிடுவதும், அந்த உண்மையை வக்கில் சரியாக வாதாடி நிறுபிப்பதும் கொஞ்சம் புதுமை. முக்கியமாக கட்டளை இடுவதாக ஒரு குரல் அவனுக்குள் ஒலிப்பது நமக்கு கூட சில சமயங்களில் இப்படி நடந்ததே என எண்ண வைக்கும். நாவல் படித்து பல மாதங்கள் ஆன பின்பும் கூட இன்னும் ஜெயலட்சுமி டீச்சர் மனதிலே இருக்கிறார். இது நாவலுக்கு கிடைத்திட்ட வெற்றி.

ஆ நாவல் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

அனிதாவின் காதல்கள்

அனிதா மாதிரி ஒரு லூஸ் இருக்குமா என்று கதையை படிக்கும் போது தோன்றியது. இதில் அனிதா என்ற பிரமணப் பெண் எதையும் முடிவெடுக்காமல் இருக்கின்றாள். அவளுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானித்தாலும் கடைசியாக அவள் ஒரு முடிவெடுப்பதுதான் கதை. மிக பெரிய பணக்காரன் ஒருவன், சொந்தகாரன் ஒருவன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழன் ஒருவன், இப்படி வருவோர் போவோரெல்லாம் அனிதாவை காதல் செய்வதாக நாவல் போகின்றது. கோடிகளில் புரலும் கணவன் திடீரென நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் ஒரு தமிழ் பெண் என்ன செய்வாள். பெண் குடும்பம் அதை எப்படி பார்க்கும், ஆண் குடும்பம் எப்படி பார்க்கும் என சாதாரண சமூகத்தின் கதை இது.

எழுத்தாளர் சுஜாதா எழுதியதிலேயே சுமாரான நாவல் இதுவாகத்தான் இருக்கும். கணேஸ் வசந்தை இந்தக் கதையில் எதிர்பார்த்து நான் அடைந்த ஏமாற்றமாக கூட இருக்கலாம்.இருப்பினும் சேர் மார்கெட் போன்ற விளக்கங்களை கேட்கும் போது சுஜாதா அவர்களின் பல்துறை அறிவு வியப்பளிக்கிறது.

அனிதாவின் காதல்கள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

கற்றதும் பெற்றதும் -

ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் தொகுப்பு. சுஜாதாவை வாரம் ஒரு முறை வீட்டிற்கு கூட்டிவந்த அற்புதமான தொடர். சுஜாதா சினிமா முதல் அரசியல் வரை அலசிய மேடை.

கற்றதும் பெற்றதும் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மெரினா நாவல் –

தீய நண்பர்களின் சகவாசமும் பணமும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதற்காக எழுதப்பட்ட நாவல். வழக்கமான முடிவை யூகம் செய்ய கூடிய நாம் கடைசியில் ஏற்படும் திருப்பத்தினை எண்ணி வியப்படைய வேண்டியிருக்கும்.

இது ஒரு கணேஷ் வசந்த் நாவல்.

மெரினா நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விக்ரம் நாவல் –
நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தின் மூலம் இந்த நாவல். இந்தக் கதை பலருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படம் வசுல் சாதனை புரியவில்லை என கமல் 50 ரசிகன் எக்ஸ்பிரசில் சொன்னார்கள்.

விக்ரம் நாவல் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.

சுஜாதா சிறுகதைகள் -

சுஜாதாவின் குட்டி குட்டி சிறுகதைகளின் தொகுப்பு. யதார்த்ததோடு விஞ்ஞானமும் கூடி கலக்க கூடிய கதைகள். ஹிமோபிலியா நோய் முதல் திருபதி கோவிலின் தீர்க தரிசனம் முதல் சின்ன சின்னதாய் வியப்பு ஒவ்வொரு கதையிலும் இருக்கிறது.

சுஜாதா சிறுகதைகள் மென்நூலை இலவசமாக தரவிரக்கம் செய்ய Sujathavin Sirukathaigal.pdf

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:

Sujatha Aah..!, Sujatha Anithavin Kaathalgal,Tamil Novel, Sujatha Katrathum Petrathum, Sujatha-Eppadiyum Vaazalaam,Sujatha-Kadavul Irrukkiraram,Sujatha-Kanayaliyin Kadaisi Pakangal, Sujatha-Oru Vingyana PaarvailIrundhu,Sujatha-Vikram, Sujathavin Sirukathaigal ,Sujatha books in pdf format,Sujatha all book links,download Sujatha e book free,free download novels,shoetstory, free tamil novel,short story in PDF format