தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

வருத்தப் படாத வாலிபர் சங்கம்.

எமக்கு வந்த எட்டு சில குறுந்தகவல்கள்

SMS கைப்பேசி வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கின்ற மொழி.சங்கங்கள் தமிழ் வளர்க்க மட்டுமா, இல்லை இப்படி மற்றவர்களை தெரித்தோட வைக்கவும் தான் என அலரவைத்த மொக்கைகள் இங்கே.

1)மின்னலைப் பார்த்த கண்ணு போயிடும்.பார்க்காட்டி,மின்னல் போயிடும்.
-மின்னலைப் பார்த்தும் பார்க்காமல் சிந்திப்போர் சங்கம்.

2)குண்டூசி ஒல்லியாதானே இருக்கு.பின்னே ஏன் அதுக்கு குண்டு ஊசி பேர் வைச்சிருக்காங்க.
-குண்டூசியால் குத்திக் கொண்ட போது யோசித்தோர் சங்கம்.

3)கணவன் தன்னை புரிஞ்சிக்கலையேன்னு மனைவியும்,மனைவி தன்னை புரிஞ்சுக்கலையேன்னு கணவனும், நல்ல புரிஞ்சிக்கிட்டு வாழரது தான் வாழ்க்கை.
-புரிஞ்சதை புரிஞ்சுக்கிற மாதிரி பேசுவோர் சங்கம்.

4)நீ என்ன என்னோட லவ்வரா.உன்னைப் பார்த்ததும் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே மலைத்து நிற்கிறேன்.
-பரிட்சை வினாத்தாளை வாங்கியவுடன் கவிதை எழுதுவோர் சங்கம்.

5)கண்ணே உன்னை சுமந்த அன்னைக்கு அன்னையர் தினம் கொண்டாடியாச்சா.என்கிட்ட சொல்லியிருந்தா உன்னையும் அன்னையர் தினத்தினை கொண்டாட வைச்சிருப்பேனே.
-அன்னையர் தினத்தில் அன்னையாக்குவோர் சங்கம்.

6)சிலையை கும்பிடக் கூடாதுன்னு சொன்னார் பெரியார்.ஆனா தெருக்கு தெரு அவரோட சிலையை வைச்சு கும்பிடுகிறார்கள் தொண்டர்கள்.
-பெரியார் சிலைக்கு கீழே அமர்ந்து யோசிப்போர் சங்கம்.

7)டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்குள் போன அது சந்தோசம்.ஆப்பிரேசன் தியேட்டருக்குள் போய் டிக்கெட் வாங்கினா அது துக்கம்.
-டிக்கெட் வாங்க கியூவில் நிற்கும்போது யோசிப்போர் சங்கம்.

8)வாய்ப்பிழந்தமைக்கு வருத்தப் பட்டு கொண்டிருப்பதைவிட,வருத்தப் பட்டு வாய்ப்பை தேடுவது நல்லது.
-வருத்தப் படாத வாலிபர் சங்கம்.

அதென்ன எட்டு குறுஞ்சேதிகள் என வியப்பவர்களுக்கு ஒரு ஆன்மீகச் செய்தியை சொல்லிக் கொள்கிறேன், எட்டு சனிஸ்வரனுக்கு உகந்த எண். பொதுவாக எல்லோரும் எழரை என்பார்கள்,ஆனால் எண்கணிதம் அடிப்படையில் இப்படி.