தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 31 அக்டோபர், 2009

கடவுள் சிவனுடைய படங்கள்

இந்து மதம் காலத்திற்கு தக்கபடி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஓர் அதிசய மதம். பல்வேறு காலக்கட்டங்களில் மிகவும் அழியும் நிலைக்கு சென்று மீண்டு வந்த மதம். உலகம் முழுக்க பரவி நிற்கும் புத்தமும், ஜைனமும் இந்தியாவில் நிற்க முடியாமல் செய்த மதம். இதோ காலங்களை கடந்து முதல் நாகரீகம் தொட்டு வணங்கப்படும் கடவுள் சிவபெருமானின் அறிய படங்கள். முதல் நாகரீக மனிதன் தோன்றியது நமது பாரத நாட்டின் சிந்து சமவெளியில் தான். அங்கு அவர்கள் வணங்கிய பசுபதி என்ற சிவ உருவம் தானே முதல் கடவுள். அதை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.




சித்தமெல்லாம் சிவமயம் தொடருக்காக பல நூல்களை வாங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையால் அத்தொடர் சற்று தாமதப்பட்டிருக்கிறது என்றாலும் ஈசன் அருளால் விரைவில் அடுத்த இடுகை உங்கள் மனம் மயக்க வரும் என்பதில் ஐயமெதுவும் இல்லை.