தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 13 மே, 2010

மகரிசி சிந்தைனைகள்



உடலுக்கும், மனதிற்கும், சமூகத்திற்கும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன பல உயர்வான சிந்தனைகள் இங்கே.

தீய
எண்ணங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். நீங்களே முயற்சி செய்து ஒருநல்ல எண்ணத்தை தொடர்ந்து மனதில் வைத்திருங்கள். தீய எண்ணம்வருவதற்கு இடமிருக்காது.
  1. பிறப்பு, இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
  2. மறந்த நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
  3. மனிதன் இறைநிலை உணர்ந்து, அறவழிகண்டு, பொருட்களையும்பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால்தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும்அமைதி நிலவும்.
  4. நான் திருந்தி என்ன பயன்? அவர் திருந்த வேண்டாமா? என்று நினைக்காமல்முதலில் நம்மை திருத்திக் கொள்வோம். அடுத்தவர் தாமே திருந்திவிடுவார்..!
  5. பாவப் பதிவுகளைப்போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின்நோக்கம்.
  6. நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால், தீமைகளை ஒழிக்கவில்லை என்றால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்?