தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் திரு.வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் காட்டுப்புத்தூரில் உள்ள ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியில் சில காலம் இருந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.மேலும் அதற்கு சாட்சி போல இந்தக் கவிதை பிரம்மேந்திரகீதம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தின் எழுத்தாலரான இராமராசனை மனமுவந்து பாராட்டுகிறார் நாமக்கல் கவிஞர்.

நாமக்கல் கவிஞரின் கவிதை-

கழனிகள் சூழ்ந்த காட்டுப் புத்தூர்
மதியுள மக்களின் பாக்கிய வசத்தால்
உலக வாழ்க்கையின் உண்மையைக் காட்டி
மெய்ப்பொருள் அதனை மேவிடச் செய்யும்
ஞான வாழ்க்கையை நடந்து காட்டிய
நாரா யணப்பிர மேந்திரர் நல்லோன்
எங்கோ பிறந்து இங்குவந் துற்றன்ன்
துறவற ஒழுக்கின் தூய்மையில் நின்று
இல்லறத் தவர்க்கு இரும்பயன் அளிக்கும்
அறவோர் மடத்தினை ஆக்கினான் அதனை
கண்ணைக் காக்கும் இமையெனக் காத்து
அறம் வளர்த்தருளும் அமிர்தத்தம்மையார்
பிரமேந் திரரின் பிறப்பும் வளர்ப்பும்
வாழ்க்கைக் குறிப்புகள் வகையெலாம் கூட்டும்
படிக்கொரு சரிதம் பாடிடச் செய்த
இனிமைத் தமிழ்ப்பா இந்நூல் முழுதும்
படித்து மகிழ்ந்தேன் பாடிய பாவலன்
இராமராசன் என்னும் பெயரினன்
பல்லாண்டு வாழப் பரமன் காக்கும்.

பிரம்மேந்திரகீதம்,நாமக்கல் கவிஞர்,நாமக்கல் கவிஞர் பாடல்கள்,namakkal kavenar,kattuputhur