தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 4 ஏப்ரல், 2009

மல்லதாசனின் மகிமை

சிவராத்திரி கதைகள்

மல்லதாசனின் மகிமை

மல்லதாசன் என்றோரு சிவனடியார்.தினமும் சிவனுக்கு பூஜை செய்து கும்பிடாமல் சாப்பிடமாட்டார்.ஒரு நாள் வியாபார விஷயமாக மைத்துனரை அழைத்துக் கொண்டப வெளியூர் சென்றார்.அன்று சிவராத்திரி.பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டார் என்பது மைத்துனனுக்கு தெரியும்.இரவு ஆனது.அவனுக்கு அகோரப் பசி.தானியம் அளக்க உதவும் படி ஒன்றை எடுத்துச் சென்று ஒரு புதரில் கவிழ்த்து வைத்துவிட்டு வந்தான்.மாமா அங்கே ஒரு புதரில் சிவலிங்கம் இருக்கிறது.தரிசனம் செய்து வரலாமா என்று அழைத்தான்.

அவரும் ஆனந்தமாக கிளம்பினார்.இருட்டில் படியை வலம் வந்து வணங்கிவிட்டு திரும்பினார்.திருப்தியுடன் சாப்பிட்டார்.வயிறு முட்ட சாப்பிட்ட மைத்துனன், ஐயோ மாமா நான் சும்மா கவிழ்த்து வைத்த படியை சிவலிங்கம் என்று நினைத்து விழுந்து வணங்கினீர்கள்.நன்றாக ஏமாந்து விட்டீர்கள் என கிண்டல் செய்தான்.

மூடனே நான் வணங்கியது சிவலிங்கத்தை தான் என்றார் மல்லதாசன்.கடகடவெனச் சிரித்த மைத்துனன்,சரி வாருங்கள் யார் சொல்வது சரியென பார்த்துவருவோம் என்று கிளம்பினான்.அங்கு சென்று பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதரே ஆலமரமாகவும் அதனுள் அவன் கவிழ்த்து வைத்த படியே அழகிய சிவலிங்கமாகவும் காட்சியளித்தது.பிரம்மித்துப் போனான்.

உண்மையான அடியவர்களுக்கு சிவபெருமான் எந்த பொருளிலும் காட்சி கொடுப்பார்.இனி இப்படி விளையாடாதே என்றார் மல்லதாசன்.

அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் மைத்துனன்.