தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தர்கள் பற்றி நான் அறிந்த செய்திகள் மிகவும் வியக்கத்தக்கதாய் இருந்தது.எப்போதும் ஈசன் நாமம் சொல்லித் திரியும் வெறும் முனிவர்களாய் மட்டுமே நினைத்திருந்தேன்.ஆனால் அவர்களின் மகிமைகள் உலகிற்கு தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.அவர்கள் மனிதனாக பிறந்தாலும் மனம் சொன்னபடி பித்தனாக திரிந்தவர்கள்.அந்த மனதினை ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள்.அழியாத உடல் பெற்றவர்கள்.கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்.எதையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம் அறிந்திருந்தனர்.முக்காலத்தையும் உணர்ந்தவர்கள்.காற்று,நீர்,நெருப்பு என எங்கும் உலவுவார்கள்.இத்தனை மகிமைமிக்கவர்கள் நம்முடன் வாழ்ந்தார்கள் என நினைக்கும் போதே பெருமையாக இருக்கின்றது.

இனி இந்த மர்மயோகிகளின் மாய உலகுக்குள் செல்ல தயாராகுங்கள்.முதலில் நாம் அறிந்து கொள்ளப் போவது இந்த பதினெட்டு மகாபுருசர்களின் நாமங்கள்.

1. திருமூலர்
2. தேரையார்
3. கருவூரார்
4. இடைக்காடர்
5. பாம்பாட்டி சித்தர்
6. சிவவாக்கியர்
7. உரோம ரிஷி
8. சட்டை முனி
9. அகப்பேய் சித்தர்
10. போகர்
11. கோரக்கர்
12. குதம்பைச் சித்தர்
13. காகபுசுண்டர்
14. கொங்கணர்
15. பட்டினத்தார்
16. திருமாளிகைத் தேவர்
17. ராமதேவர் என்கிற யாகோபு
18. நாராயணப் பிராந்தர்

பெயர்களை தெரிந்து கொண்டீர்களா,இவர்களின் சில பெயர்களை கேட்கும் போது எங்கோ கேள்விப் பட்டதினைப் போல இருக்கும்.உண்மைதான்.இதில் வெகு சிலர் நமக்கு நன்கு பழக்கமானவர்கள்.எப்படி என்கிறீர்களா.எல்லாம் தமிழ் செய்த மாயம்.ஆம் இவர்கள் தங்களின் தமிழ் எழுத்துகள் மூலம் நம்மிடையே அறிமுகம் ஆனவர்கள்.திருமூலர் எழுதியது தான் ஒப்பற்ற திருமந்திரம் என்னும் நூல்.இது போல மக்களின் நலன் கருதி அனைத்து சித்தர் பெருமகன்களும் நூல்களை எழுதியுள்ளனர்.இவர்களின் வரலாறுகளை தொடர்ந்து அந்த பாடல்களையும் இந்த இணையதளத்தில் நீங்கள் பெறலாம்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என வாழ்ந்த சித்தர்களின் புகழைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து சித்தர்களின் பெருமை மிக்க பாடல்கள் வெளிவரும்.