தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

என் செல்ல நாய்

என் செல்ல நாய்

எங்கள் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்கிறோம்.எனக்கு நாய்க்குட்டி என்றாலே பிரியம் அதிகம்.சிறுவயதில் நானும் என் தம்பியும் ரோட்டில் அனாதையாக கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவோம்.அது பெரும்பாலும் பெண்குட்டியாக தான் இருக்கும்.(மனிதன் மட்டுமல்ல நாயும் பெண்ணாக பிறந்தால் மரியாதை கிடைக்காது இந்த சமூகத்தில்...)அதனால் வீட்டில் பெரியவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் எங்களுக்கு அந்த வயதில் இந்த பேதமெல்லாம் தெரியாது.அது ஒரு நாய்க்குட்டி அவ்வளவுதான்.

அப்புறம் அந்த நாய்க்குட்டி மீண்டும் தெருவில் விடப்பட்டுவிடும்.நாங்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓய்ந்துவிடுவோம்.சில நாட்களில் அந்த நாய்க்குட்டி நினைவுகளிலிருந்து அகன்று விடும்.மீண்டும் ஏதாவது நாய்க்குட்டி தெருவில் கிடைக்கும் வரை அந்த ஏக்கம் நீடிக்கும்.கிடைத்துவிட்டால் பழைய கதைதான்.

நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான்.அப்பாவின் தோட்டம் இருக்கும் ஊரில் தெரிந்தவர்கள் வீட்டில் ஒரு நாய் குட்டி போட்டிருப்பதாகவும்,அதில் ஒரு குட்டியை அப்பா கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிவிட்டனர்.அவர்களால் அத்தனை குட்டிகளையும் பார்க்க முடியாதல்லவா தெரிந்தவர்களில் நன்றாக வளர்ப்பவர்கள் வீடுகளில் குட்டிகளை தந்துவிடுவார்கள்.

என் அம்மாவும் தம்பியும்தான் அந்த குட்டியை தூக்கி வந்தனர்.கருப்பாக,கொழுகொழுவென ஒரு நாய்க்குட்டி.அன்று நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.எல்லோரும் ஒருமனதாக டைகர் என பெயர்வைத்தோம்.அன்பாக கருப்பு பைய என்றும் கூப்பிடுவோம்.குட்டியில் டைகர் செய்த குறும்புகளுக்கு அளவே இல்லை.எல்லாவற்றையும் எழுதுவதற்கு இந்த இடுகை போதாது.அவ்வளவு குறும்புகள்.எப்போதும் துருதுருவென இருக்கும் டைகர்தான் என்னுடைய இரண்டாவது சகோதரன்.

ஒரு நாள் இரவு அம்மா வாசலில் இருந்தபடி என்னை அழைத்தார்.அங்கு சென்று பார்த்தால் வாசல் முழுக்க ஐநூறு ருபாய் தாள்களும்,நூறு ருபாய் தாள்களும் கிழிக்கப்பட்டு சிதறிக் கிடக்கின்றன.நாங்கள் அதிர்ச்சியோடு மூலக் காரணத்தை தேடினோம்.பிறகு அம்மா ஏதோ ஞாபகம் வந்து சாமியறைக்கு சென்று பார்த்த பின் தான் தெரிந்தது.அது மொத்தமும் அம்மாவின் ஒரு மாத சம்பளப்பணம்.டைகர் பைய அதை எடுத்து வந்து இப்படி பண்ணிட்டான்.அப்புறம் என்ன செமத்த அடிதான்.(வீட்டில் ரெண்டு பேரும் டீச்சர்ஸ் வேர.)

ஞாயத்துக் கிழமை கறி செஞ்சா போதும் டைகர் பைய அப்படியே அடியோட மாறிப்போயிடுவான்.அன்னைக்கு சாப்பாடு நேரம் வரைக்கும் சின்ன சத்தம் கூட இருக்காது.அவ்வளவும் நடிப்பு,அவன் முன்னாடி சிவாஜியே தோத்துடுவாருன்னா பாத்துக்கோங்களேன்.இந்த மாதிரி அவன் அட்டூலியங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.ஆனாலும் ராத்திரி முழுக்க பயணம் செஞ்சிட்டு அதிகாலை வீட்டுக்கு போகும் போது நமக்காக காத்திருக்கும் அவன் அன்பான வரவேற்பு இருக்குதே,அதுக்கு ஈடுஇணையே கிடையாது.





அப்படியே இந்த படங்களையும் ரசியுங்கள்.இடுகையை படித்த்தோடு மட்டும் சென்று விடாதீர்கள்.எப்படி இருந்தது என கருத்துகளை இடுங்கள்.