தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?

இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?

நான் விவசாய குடும்பத்தை சார்ந்தவன்.என்னுடைய அப்பா ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.தற்போது விவசாயத்தை செய்து வருகின்றார்.விவசாயத்தை லாபகரமான தொழில் என கூறமுடியாது.எத்தனையோ பேர் விவசாயம் வேண்டாம் ஒரு கடை வைத்து நடத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர்.நான் கூட இன்டர்நெட் சென்டர் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டார்.காரணம் கேட்டதற்கு இது தான் தனக்கு திருப்தியாக இருப்பதார் கூறினார்.அதிலிருந்து எனக்கும் விவசாயத்தின் மீது அதிக பற்று ஏற்பட்டுவிட்டது.

சென்ற மகா சிவராத்திரிக்கு வைரசெட்டிபாளையத்திற்கு சென்றோம்.இரவை பெரியசாமி கோவிலில் கழித்துவிட்டு மறுநாள் காலை கொல்லிமலையிலுள்ள ஆழுக்கு சென்றோம்.அங்கு வழி நெடுகிலும் சீரக சம்பா என்னும் நெல் விளைந்திருந்தது.இது அருவடைக் காலம் என்பதால் அனைவரின் வயலிலும் ஒரு எந்திரம் அருவடை செய்து கொண்டிருந்தது.நான் முன்பே இதைப் போன்றதைப் பார்த்திருக்கின்றேன்.ஆனால் இப்படி ஐந்தாறு வண்டிகள் வேலை செய்வதைப் பார்த்ததில்லை.ஆர்வம் கொண்டு விசாரித்தால் அங்கு பயிரிட்டிருந்த்தெல்லாம் பெரு விவசாயிகள்.இன்றைய ஆள் பற்றாக்குறைகளை சரிசெய்ய இதுபோல் இயந்திரங்கள் மட்டுமே மாற்றுவழி என்பது ஒரு மறுக்க முடியாத செய்தி.

பெரு விவசாயிகளால் மட்டுமே இந்த இயந்திரங்களை பயண்படுத்த இயலும் காரணம் பொருளாதாரம்.சிறுவிவசாயிகள் இந்த இயந்திரத்திற்கு கொடுக்கும் விலையில் பாதியைக்கூட மீட்க முடியாது.இந்தியாவில் சிறுவிவசாயிகள் அதிகம்.ஆள் பற்றாக்குறை,லாபகரமாக இயங்காத விவசாயம்,நாளுக்கு நாள் ஏறிப்போகும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை என பல தொல்லைகள் இருந்தால்,அதற்கு மேல் வந்து நிற்கின்றது அரசாங்கத்திடம் வாங்கிய கடன்.

பெரு விவசாயிகளால் மட்டும் பயண்படுத்த முடிகின்ற இயந்திரங்களை சிறு விவசாயிகள் பயன்படுத்த ஒற்றுமை ஒன்று மட்டும் போதும்.எப்படி என்று கேட்கிரீகளா.பதில் மிகவும் சுலபமானது.இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் ஒன்றாக இனைய வேண்டும்.இதனால் சிதறிக் கிடக்கின்ற பூமியானது ஒன்றுபடும்.ஐம்பது நூறு என மொத்தமாக இருக்கும் நிலத்தில் பாகுபாடில்லாமல் அனைவரும உழைக்க வேண்டும்.ஒரே நிர்வாக்த்தின் கீழிருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும்.இயந்திரங்களை பயண்படுத்துவது எளிதாகவும்,முறையாகவும் போய்விடும்.அதைவிட சிறு விவசாயிகள் பொருட்களை அழகாக ஏற்றுமதியும் செய்ய முடியும்.

படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும்.உலகின் முதல் தொழிலை மரியாதை செய்து காக்கவில்லையென்றால் நம்முடைய நிலை என்னவாகுமென கணிக்க முடியாது.