தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

தமிழ்தாயின் நிலை என்ன?

என்ன நண்பர்களே இன்னும் எத்தனை நாட்கள்தான் ராஜேஸ்குமார்,பட்டுக்கோட்டை நாவல்களையே படித்துக் கொண்டிருப்பீர்கள்.குழந்தையாக இருந்துகொண்டே இருக்கலாமா?.எப்போது பெரியவர்களாகப் போகின்றீர்கள்?.என்ன யோசனை?.கட்டூரையை மேலும் தொடரலாமா வேண்டாமா என்றா சந்தேகமே வேண்டாம்.இந்தக் கட்டூரை உங்களின் வாழ்க்கையை மாற்றிப் போடலாம்.தொடருங்கள்.

என்னுடைய கல்லூரி நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை.சிலருக்கு தமிழை வாசிக்கவும் தெரியவில்லை.தமிழன் என்ற பின்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயனாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.அப்படியானால் தமிழ் நிலை என்ன?பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச்சாகுமா?.அந்த நிலைக்கு நாம் தமிழை விடலாமா?.மாற்றானின் தாய்க்கு பணிவிடைகள் செய்துகொண்டு நம்தாயை தெருவில் அனாதையாக விட்டுவிடலாமா?கூடாது,கண்டிப்பாக கூடாது.

நாயன்மார்களும்,ஆழ்வார்களும்,சித்தர்களும் வெறும் சமயத்தினை மட்டும் வளத்தார்கள் என்று சொன்னால் அது நம்முடைய அறியாமை.அவர்கள் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்கள்.அவர்களை போல தமிழை நாம் நேசிக்க வேண்டும்.இன்று வலைதளங்களில் என்னற்ற பெரும் மனிதர்கள் தங்களின் சிந்தனைகளை பதித்து வருகின்றனர்.இது போற்றதக்கது.வலைகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றி திரியும் நண்பராக இருந்தால் உங்களால் முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக் கொள்ளுங்கள்.

சித்த புருசர்களின் பாடல்கள் சிவநாமத்தை மறைமுகமாகவே உணர்த்துகின்றன.அவர்களின் விருப்பமெல்லாம் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதுதான்.எளிமையான பாடல்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.தமிழை தமிழர்களே புறக்கனிக்க காரணம் தமிழ் மொழியால் வேலை கிடைக்காதுதான் என்கின்றனர் என் நண்பர்கள்.வெறும் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?தமிழ் பேசவும்,எழுதவும் தெரியாதவன் தமிழாக பிறந்து என்ன பயன்?ஒரு முறை காந்தியடிகள் திருக்குறளின் பெருமைமிக்க குறள்களின் பொருளை அறிந்து கொள்ள தான் தமிழனாக பிறக்கவில்லை என வருத்தப்பட்டாராம்.தமிழனாக பிறந்த நாம் திருக்குறளை படிக்க விருப்பம் கொள்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை.

தமிழ் மொழி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை உண்டானால்தான்.தமிழை அழிவுப்பாதையிலிருந்து மீட்க முடியும் இல்லையென்றான்றால்....எப்படி சொல்ல...தமிழ் இனி மெல்ல சாகுமென....

வாருங்கள் கை கொடுங்கள் தமிழ் வளர்ப்போம்,தமிழனென பெருமை கொள்வோம்.

பிகு-கணிப்பொறி சம்மந்தப்பட்ட செய்திகளை தமிழில் பதிக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால் எண்ணங்களை செயல்படுத்த சற்று காலம் காத்திருக்க வேண்டும்.